செய்திகள் :

"பிரதமர் வேட்பாளரை இந்தியா கூட்டணிதான் முடிவு செய்யும்"- தவெக கூட்டத்திற்குப் பிறகு மாணிக்கம் தாகூர்

post image

நேற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, தவெக தரப்பிலிருந்து ‘2029-ம் ஆண்டு தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தான் பிரதமர்’ என்கிற பேச்சை அடிக்கடி கேட்க முடிந்தது.

காங்கிரஸை தொடரும் கேள்வி

இது தவெக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸிற்கு நெருடலை ஏற்படுத்தியது. ஏனெனில் ராகுல் காந்தியை தான் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் முன்னிறுத்தி வருகிறது. இது குறித்த கேள்வி தமிழ்நாடு காங்கிரஸைத் தொடர்ந்துகொண்டே இருந்தது.

இன்று தவெகவின் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தவெகவின் கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

மாணிக்கம் தாகூர் பதில்

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போதும், ‘2029-ம் ஆண்டு விஜய் தான் பிரதமர் வேட்பாளரா?’ என்கிற கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு மாணிக்கம் தாகூர், “‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்பது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்காக அமைக்கப்பட்ட மாநிலக் கூட்டணியாகும்.

அதேவேளையில், இதில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் தேசிய அளவில் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ளன. எனவே, இந்தக் கூட்டணி ‘இந்தியா’ கூட்டணியின் ஒரு பகுதியாகவே செயல்படும்.

தவெக என்ன செய்யும்?

‘இந்தியா’ கூட்டணியைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட ஒன்றாகும்.

2029 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, ‘இந்தியா’ கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளர் முறைப்படி முடிவு செய்யப்படும்போது, அந்த வேட்பாளரை ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ முழுமையாக ஆதரிக்கும்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளருக்காகத் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்வார்.

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி

எங்கள் விருப்பம் ராகுல் காந்தி தான்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைப் பொறுத்தவரை எங்கள் விருப்பமும் வேட்பாளரும் ராகுல் காந்தி அவர்கள்தான். இருந்தாலும், பிரதமர் வேட்பாளரை ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இணைந்தே முடிவு செய்ய வேண்டும்.

பொதுத்தேர்தலுக்கு முன்பாக ‘இந்தியா’ கூட்டணி தனது பிரதமர் வேட்பாளரை அறிவிக்கும்போது, அவரை எங்களது தமிழகக் கூட்டணியும் ஏற்கும். இதில் எந்த விதக் குழப்பமும் இல்லை” என்று பதிலளித்திருக்கிறார்.

தொழில் முதலீடு, மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: இன்று பிரிட்டன் செல்கிறார் முதல்வர் விஜய்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஏழு நாள் பயணமாக இன்று பிரிட்டன் கிளம்புகிறார். மீண்டும் அவர் வருகிற 17-ம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார். இது தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணம் என்று தமிழ்நாடு அரசு அறிக்... மேலும் பார்க்க

தமிழக இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரத்திற்கான வேட்பாளர்களை அறிவித்த அதிமுக - யார் அவர்கள்?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக சார்பாகக் களமிறங்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது அதிமுக. மதுராந்த... மேலும் பார்க்க

"ஒரு மதத்தைத் திருப்தி செய்ய அரசியல் செய்கிறீர்கள்" - மாணிக்கம் தாகூருக்கு நயினார் நாகேந்திரன் பதில்

இன்று செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், "நான் கோவிலுக்கு செல்வேன். இதையெல்லாம் மதவாதம் என்று சொல்லிவிடமுடியாது, இன்னொரு மதத்திற்கு எதிரானது கிடையாது. நயினார்... மேலும் பார்க்க

புதிய தலைமைச் செயலகம்: ``முதலமைச்சர் விஜய்யின் நோக்கம் இதுதான்" - அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து எதிர்க்கட்சிகளும், தவெக-வின் கூட்டணியில் இருக்கும் சி.பி.ஐ உள்ளிட்ட இடதுசாரிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பட்டினப... மேலும் பார்க்க

`பொறுப்புணர்வுடன் முன்னெடுத்துச் செல்வேன்' - தவெக எம்.எல்.ஏ. கனிமொழிக்கு கூடுதல் பொறுப்பு!

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக த.வெ.க-வைச் சேர்ந்த கனிமொழி சந்தோஷ் இருக்கிறார். இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் தேர்வு செ... மேலும் பார்க்க

`விஏஓ-வுக்கு லஞ்சம் கொடுக்கணும், பிச்சை போடுங்க!' - தட்டுடன் வலம் வந்த கள்ளக்குறிச்சி விவசாயி

கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை வருவாய் கிராமம், நொணைவாடி பகுதியைச் சேர்ந்த அப்துல் சலீம் ஷேக், பூர்வீகச் சொத்துப் பட்டாவில் தன்னுடைய பெயரை சேர்ப்பதற்காக எலவனாசூர்கோட்டை வருவாய் கிராம அலுவலகத... மேலும் பார்க்க