செய்திகள் :

சென்னை: பள்ளி மாணவிக்கு `ஐ லவ் யூ' சொன்ன ஆசிரியர் - போக்சோவில் கைதான பின்னணி!

post image

சென்னை, அரும்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில், 11-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி, இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி வந்தார். அவரின் இன்ஸ்டாவுக்கு தொடர்ந்து காதல் மெசேஜ்கள் வந்து கொண்டிருந்தன. அதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, யார் இப்படி அனுப்புகிறார்கள் என்ற விவரங்களைச் சேகரித்தார். அப்போது தான் படிக்கும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றும் மூர்த்தி (34) என்பவர்தான் இந்தச் செயலில் ஈடுபட்டு வருவதை மாணவி கண்டுபிடித்தார். பின்னர் அது தொடர்பாக தன்னுடைய பெற்றோரிடம் மாணவி தகவலைத் தெரிவித்தார்.

கைது

உடனடியாக மாணவியின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்துக்கும் உடற்கல்வி ஆசிரியரிடமும் இனிமேல் இப்படி நடந்து கொள்ளாதீர்கள் என்று கூறியிருக்கிறார்கள். அதன் பிறகும் ஆசிரியர் மூர்த்தி திருந்தவில்லை. முன்பை விட மாணவிக்கு ஆபாச மெசேஜ்களை அனுப்பி தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். குறிப்பாக ஐ லவ் யூ என்றும் மெசேஜ் அனுப்பி இருந்தார். இதையடுத்து அரும்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி தரப்பில் புகாரளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அரும்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார், ஆசிரியர் மூர்த்தியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவிக்கு ஆசிரியர் மூர்த்தி ஆபாச மெசெஜ் அனுப்பியது உறுதியானது. இதையடுத்து போக்சோ வழக்கு பதிவு செய்த போலீஸார், ஆசிரியர் மூர்த்தியை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

வேலூர் வியாபாரியிடம் `நிறம் மாறும் கற்கள்’ வழிப்பறி - ஒருவர் கைது; 2 பேருக்கு வலை!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள பல்லலகுப்பம் கிராமம் ராமர் கோயில் தெருவில் வசிப்பவர் ஆனந்தகுமார் (வயது 58). இவரின் மனைவி ஷைலா, ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர். இந்த நிலையில், ஆனந்தகுமார் தன்னிடம... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: பிரவசத்தில் தாய், சேய் இறப்பு; விறகு வியாபாரிமீது பாய்ந்த வழக்கு! - பின்னணி என்ன?

காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காடிவாக்கம் இருளர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தன். இவரின் மனைவி தேன்மொழி. இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகனும் மகளும் உள்ள நிலையில், மூன்றாவதாக தேன்மொழி கர்ப்பமட... மேலும் பார்க்க

தாளவாடி: இளைஞரை சங்கிலியில் கட்டிவைத்து சித்ரவதை; கொடூர காவல்துறையின் பதைபதைக்க வைக்கும் வீடியோ

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகில் உள்ள திகினாரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாது (எ) மாதேவா. 20 வயதான இவர் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை என மாதேவாவை அழைத்துச் சென... மேலும் பார்க்க

தெருவில் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட சிறார்கள்; புனே போலீஸ் மீது வழக்கு; மனித உரிமை கமிஷன் உத்தரவு

புனேயில் கொலை வழக்கு ஒன்றில் போலீஸாரிடம் சரணடைந்த சிறார்கள் 8 பேரை, போலீஸ் நிலையத்தில் ஐந்து நாட்கள் சட்டவிரோத வைத்திருந்து அடித்து உதைத்துள்ளனர். அதோடு அந்தச் சிறார்களை பொதுவெளியில் ஊர்வலமாக அழைத்துச... மேலும் பார்க்க

‘ரூ.20,000 கடனை அடை’- பிரசவத்திற்குச் செல்ல விடாமல் தடுத்த உரிமையாளர்; தாய், சிசுக்கு நேர்ந்த துயரம்

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஆனந்தன் (40) - தேன்மொழி (35) தம்பதியினர், அரக்கோணம் சாலை வெள்ளை கேட் பகுதியில் உள்ள மரக்கடையில் கடந்த 6 மாதங்களாக மரம... மேலும் பார்க்க

கோவை: வடமாநிலத் தொழிலாளியைக் கொன்று புதைத்த 6 பேர் கைது - அதிரவைக்கும் கொலைகளால் மக்கள் அச்சம்

கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தில் கடந்த 8ம் தேதியன்று மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது ஒரு இடத்தில் தோண்டப்பட்டு இருந்த குழிக்குள் ஒரு ச... மேலும் பார்க்க