செய்திகள் :

நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்; தொகுதி மறுவரையறைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

post image

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று (ஏப்ரல். 16) கூடியிருக்கிறது.

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான அரசமைப்பு திருத்த மசோதாக்களை நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜீன் ராம் மேக்வால் தாக்கல் செய்திருக்கிறார்.

அர்ஜீன் ராம் மேக்வால்
அர்ஜீன் ராம் மேக்வால்

இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் தங்களது ஆதரவைத் தெரிவித்திருக்கின்றனர். அதேசமயம் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன.

அந்தவகையில் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்.பி டி.ஆர் பாலு, "திமுக இந்தத் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்கிறது.

எங்களின் நிலைப்பாட்டில் நாங்கள் தெளிவாக உள்ளோம். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்த திமுக எப்போதும் ஆதரவாகவே உள்ளது. தற்போதைய நிலையில் புதிதாக எந்த மசோதாவும் தேவையில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

டி.ஆர் பாலு
டி.ஆர் பாலு

தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற 3-ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அந்தவகையில் மக்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 293 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். எதிர்க்கட்சிகளுக்கு 234 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"அன்புமணி பொய்யர்... என் இறப்புக்காகக் காத்திருக்கிறார்கள்" - தைலாபுரத்தில் தழுதழுத்த ராமதாஸ்

``குடும்பத்தைச் சின்னாபின்னமாக்கியவர் சௌமியா...”``பா.ம.க-வை 1989-ம் ஆண்டு நான் தொடங்கினேன். இந்தக் கட்சியைக் கைப்பற்றி விட வேண்டும், அபகரித்துவிட வேண்டும் என்ற எண்ணம் அன்புமணிக்கு இருந்தது. ஒருமுறை நா... மேலும் பார்க்க

"இந்த மண்ணின் பூர்வகுடிகளான வன்னியர்களும், பட்டியலின மக்களும் ஒன்றுசேர வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்

வேலூர் மாவட்டத்திலுள்ள கே.வி.குப்பம் தனித்தொகுதியில், அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னத்தில் மீண்டும் போட்டியிடும் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான பூவை ஜெகன்மூர்த்தியை ஆதரித்து... மேலும் பார்க்க

ஜூ.வி மெகா சர்வே: ``துறைமுகத்தை தக்கவைப்பாரா சேகர் பாபு?" - சென்னை, திருவள்ளூர் மாவட்ட நிலவரம்!

தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் பல்ஸ் அறிய களமிறங்கியது ஜூனியர் விகடன் டீம். 539 தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள், 54 நிருபர்கள் என ஒரு பெரும் படையே சென்று 234 தொகுதிகளில... மேலும் பார்க்க

ஜூ.வி மெகா சர்வே: `இழுபறியில் ரகுபதி; டஃப் கொடுக்கும் அதிமுக'- மத்திய மண்டல மாவட்டங்களின் நிலவரம்!

தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் பல்ஸ் அறிய களமிறங்கியது ஜூனியர் விகடன் டீம். 539 தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள், 54 நிருபர்கள் என ஒரு பெரும் படையே சென்று 234 தொகுதிகளில... மேலும் பார்க்க

ஈரோடு: செங்கோட்டையன் மீது சரமாரி குற்றச்சாட்டு; கோபியில் இபிஎஸ் தீவிர பிரசாரம் | Photo Album

ஈரோடு கோபியில் இபிஎஸ் தேர்தல் பிரச்சாரம்ஈரோடு கோபியில் இபிஎஸ் தேர்தல் பிரச்சாரம்ஈரோடு கோபியில் இபிஎஸ் தேர்தல் பிரச்சாரம்ஈரோடு கோபியில் இபிஎஸ் தேர்தல் பிரச்சாரம்ஈரோடு கோபியில் இபிஎஸ் தேர்தல் பிரச்சாரம்... மேலும் பார்க்க