செய்திகள் :

பத்மஸ்ரீ வென்ற பழங்குடி ஓவியர்; மனைவிக்கு குடியிருப்புடன் அரசு பணி வழங்கிய நீலகிரி மாவட்ட நிர்வாகம்!

post image

தொல்குடிகளின் தொட்டில் என அழைக்கப்படும் நீலகிரி மலையில் வாழ்ந்து வரும் பண்டைய பழங்குடி இன மக்கள் தங்களுக்கே உரிய தனித்துவமான பாரம்பர்யங்களைப் பின்பற்றி வருகின்றனர். குறிப்பிட்ட சில பழங்குடி இன மக்கள் தங்களின் சொந்த மண்ணில் கிட்டத்தட்ட அகதிகளாக அவதியுற்று வந்தாலும், மரபுவழிகளைப் பாதுகாத்து வருகின்றனர். பூ, இலை, மரப்பட்டை என இயற்கையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு வண்ணங்களாக குழைத்து காலத்திற்கும் அழியாத ஓவியங்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் கொண்டவர்கள் குறும்பர் பழங்குடிகள்.

ஓவியர் கிருஷ்ணன்

அந்த மரபில் வந்த பழங்குடி ஓவியர் கிருஷ்ணன், 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாறை ஓவியங்களை புழக்கத்திற்குக் கொண்டு வந்தார். தொல்குடிகளின் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்வியலை ஓவியங்கள் மூலம் உயிரூட்டி வந்த இவர் அண்மையில் உயிரிழந்தார். இவரின் உயிரிழப்பு குறும்பர் ஓவியக்கலை உலகின் பேரிழப்பாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதினை அறிவித்தது மத்திய அரசு. கிருஷ்ணனின் மறைவால் வறிய நிலையில் வாடும் அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் குறித்து வெளியில் தெரியவந்தது.

கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மேம்படுத்தி அவர்களின் துயர் துடைக்க மாநில அரசு பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஊட்டியில் உள்ள ஏகலைவா பள்ளியில் கிருஷ்ணனின் மனைவிக்கு அரசுப் பணி மற்றும் அரசு குடியிருப்பை வழங்கியிருக்கிறது, மாவட்ட நிர்வாகம். மாவட்ட நிர்வாகத்தின் இந்தச் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஓவியரின் குடும்பத்தினர்

இது குறித்து தெரிவித்த நீலகிரி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், "அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் நிரந்தர தோட்டப் பணியாளர் வேலை வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 32 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும். அரசுப் பணியாளர்களுக்கான விடுப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படும். அதே வளாகத்தில் அரசு குடியிருப்பும் வழங்கப்பட்டுள்ளது" என்றனர்.

நீலகிரி: மார்க் டவிடார் என்ற மனிதரும் ரிவால்டோ யானையும்... பாசப் பிணைப்பின் கதை - கலங்கும் மக்கள்!

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி பகுதியின் அடையாளமாக திகழ்ந்து வந்த ரிவால்டோ என பெயரிடப்பட்ட ஆண் யானை, காயம் காரணமாக நேற்று பரிதாபமாக உயிரிழந்து. மனிதர்களுடனான பிணைப்ப... மேலும் பார்க்க

பத்மா: 'அதே யூனிஃபார்ம்ல வர சொல்லிதான் மரியாதை செய்யணுமா?' - நெட்டிசன் கேள்விக்கு பார்த்திபன் பதில்

கீழே கிடந்த 360 கிராம் தங்கத்தை உரியவர்களிடம் எடுத்துக்கொடுத்த தூய்மைப் பணியாளர் பத்மா தான் கடந்த சில நாள்களாக வைரல். அவரை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் பாராட்டி வருகின்றனர். பத்மாவை நட... மேலும் பார்க்க

`தன் உயிரை தியாகம் செய்து..' - தேனீக்களிடமிருந்து 20 குழந்தைகளை காப்பாற்றிய அங்கன்வாடி பெண் ஊழியர்

மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் உள்ள மாதவாடா என்ற கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் கஞ்சன் பாய் என்ற பெண், சமையல் வேலை செய்து வந்தார். அவர் அங்கன்வாடியில் சமைத்துக் கொண்டிருந்தபோது அங்கு 20 கு... மேலும் பார்க்க

`குழந்தைங்க பசிக்கும், கல்விக்கும் முன்னாடி பயம் பெருசில்ல...' - ஊக்கமூட்டும் கேப் ஓட்டுநர் நந்தினி

வாழ்க்கை நமக்குச் சவால்களைத் தரும்போது, அதைக் கண்டு அஞ்சி ஓடாமல், அந்தச் சவால்களையே ஏணியாக மாற்றி முன்னேறுபவர்கள் மிகச் சிலரே. அந்த வகையில், ஹைதராபாத் நகரின் பரபரப்பான சாலைகளில் தன்னுடைய மூன்று குழந்த... மேலும் பார்க்க

`பசிக்கு மதம் தெரியாது’- 25 ஆண்டுகளாக வடலூர் சபை அன்னதானத்திற்கு அரிசி, காய்கறி அனுப்பும் இஸ்லாமியர்

`இதைவிட கொடுப்பினை வேறு என்ன இருக்க முடியும் ?’கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்திருக்கும் வள்ளலாரின் சத்தியஞான சபையில், ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அன்றைய தினம் உலகம் முழு... மேலும் பார்க்க

"மேதி என் தாய்": நீலகிரி பெட்ட குரும்பர் சமூகத்தின் முதல் இளம் போட்டோகிராபர்!

நீலகிரி மாவட்டத்தில் தோடர்கள், கோட்டர்கள், பணியர்கள், நாடோடிப் பழங்குடிகள், காட்டுநாயக்கர்கள், குரும்பர்கள் என ஐந்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில், குறும்பர் இனக்குழுவி... மேலும் பார்க்க