செய்திகள் :

அஜித்குமார் காவல் மரணம்: திருப்புவனம் காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு; சிக்கியது எப்படி?

post image

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த காவலாளி அஜித்குமார் காவல் மரண கொலை வழக்கில் 6 பேரைக் கைது செய்துள்ள நிலையில், மானாமதுரை டி.எஸ்.பி-யாக இருந்த சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார், போலீஸ்காரர் இளையராஜா ஆகியோர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்ய மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து வழக்கறிஞர்கள் நம்மிடம் பேசும்போது, "தற்போதுள்ள நால்வரின் பெயரையும் சி.பி.ஐ தன்னுடைய குற்றப் பத்திரிக்கையில் சேர்த்துள்ளது. அதில், அஜித்குமார் இறப்பதற்கு ஒரு நாள் முன்னதாக திருப்புவனம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லபட்டிருக்கிறார். காவல் நிலைய ஆய்வாளர் அவரைச் சரியாக விசாரிக்காமலும், காவல் நிலையத்திற்கு வந்தது பற்றி ஆவணங்களில் பதிவு செய்யாமல் இருந்துள்ளார்.

மறுநாள் அஜித்குமாரை தனிப்படையினர் 19 இடங்களுக்கு அழைத்துச் சென்று அடித்துச் சித்ரவதை செய்ததனாலேயே இறந்துள்ளார். உடனே அஜித்குமார் காவலில் இருந்து தப்பிக்க முயன்றபோது காயமடைந்து இறந்ததாகப் பொய்யான எப்.ஐ.ஆர் பதிவு செய்தது; காவல்நிலையக் குறிப்பேட்டை மாற்றியமைத்தது; நிகிதா அளித்த புகார் தொடர்பாகப் போடப்பட்ட சி.எஸ்.ஆரை மாற்றி, போலியான ஆவணங்களை உருவாக்கியுள்ளனர் எனத் தெரிவித்திருந்தனர்.

கைது செய்யபட்ட காவலர்கள்
கைது செய்யபட்ட காவலர்கள்

ஆனால் இவற்றையெல்லாம் கூறிய சிபிஐ இதற்கு குறைந்தபட்ச தண்டனை தான் கோரியிருந்தது. இதை மாவட்ட நீதிமன்றம் விசாரித்து கொண்டிருக்கும் போதே இந்த வழக்கிற்குத் தடை விதிக்க வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் நால்வரும் மனுதாக்கல் செய்தனர்.

அப்போது இந்தச் சம்பவங்களைக் குறிப்பிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி முருகன், 'காவல் நிலையத்தில் அமரவைக்கபட்டிருந்த அஜித்குமார் விருந்தாளியா, எம்.எல்.ஏ-வா? ஏன் அவர் வந்தது குறித்து பதிவு செய்யவில்லை? இந்தச் சம்பவங்கள் நடைபெறும்போது இன்ஸ்பெக்டரும், டி.எஸ்.பி-யும் 11 முறை பேசியிருக்கிறீர்கள்; அப்படி என்ன பேசினீர்கள்? டி.எஸ்.பி ஆகிய நீங்களே தனிப்படையைக் கண்காணிக்கவில்லை என்றால் யார் கண்காணிப்பது?' எனக் காத்திரமான கேள்விகளை எழுப்பியவர், தடை விதிக்க மறுத்துவிட்டார்.

இதன் தொடர்ச்சியாகவே மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவந்த வழக்கில், அஜித்குமாரை அடித்தவர்கள் மட்டுமல்ல... அவரைத் தாக்கியதற்குத் தூண்டுதலாக இருந்தவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனச்  சொல்லி, நான்கு பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டதோடு, 16 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். இந்த விஷயம் வழக்கின் ஒரு திருப்பு முனையாக மாறியிருக்கிறது" என்றனர்.

அஜித்குமாரின் தம்பி நவீனிடம் பேசினோம். "எங்களிடமே டி.எஸ்.பி ஆரம்பத்தில் சமரசம் பேசினார். சிபிஐ அவருடைய பெயரையும் குற்றப்பத்திரிக்கையில் சேர்த்திருந்தது. தற்போது அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டனை பெற வேண்டும்" என்றார்.

சிவகங்கை காவல் மரணம் - ஹென்றி திபேன்
சிவகங்கை காவல் மரணம் - ஹென்றி திபேன்

இது குறித்து மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி திபேனிடன் பேசும்போது, ''வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இது பற்றி இப்போது பேச முடியாது" என முடித்து கொண்டார்.

மடப்புரம் அஜித்குமார் காவல் மரணம்: டிஎஸ்பி உட்பட நால்வர் மீது கொலை வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த காவலாளி அஜித்குமார் மீது நிகிதா என்பவர் நகை திருட்டு புகார் அளித்தார். இந்தப் புகார் தொடர்பாக தனிப்படை போலீசார் அஜித்குமாரைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று தா... மேலும் பார்க்க

`நான் அவனில்லை' - ஓல்டு மாங்க் ரம், விஸ்கி என விற்பனை செய்யப்படுவது ரம், விஸ்கி அல்ல! - முழு தகவல்!

மது பிரியர்களுக்கு ஓல்டு மாங்க் ரம் என்றால் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அந்த ரம் உண்மையில் ரம் இல்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?. மகாராஷ்டிராவில் ஓல்ட் மாங்க்' (Old Monk) மதுபான... மேலும் பார்க்க

’மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அறநிலையத்துறை அரசியல் செய்துள்ளது’ – நீதிபதி கருத்து

மதுரைமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்புலட்சுமி, உயர் நீதிமன்றக் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். ``மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வருகின்ற 17ஆம் ... மேலும் பார்க்க

`மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழுவின் பெயரின்றி அழைப்பிதழ்; அச்சிட்டது யார்?' - உயர் நீதிமன்றம்

மீனாட்சியம்மன் திருக்கோவில் அறங்காவலர்களின் பெயர்கள், செயல் அலுவலரால் அச்சிடப்பட்ட திருக்கோவில் பத்திரிகையில் இடம்பெறவில்லை என டி.சுப்புலட்சுமி என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார... மேலும் பார்க்க

மது போதையில் மகளையே கர்ப்பமாக்கிய கொடூர தந்தை: `20 ஆண்டுகள் சிறை!'- புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி

தந்தை என்பவர் பெற்ற பிள்ளைக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய கவசம். ஆனால், மது போதையில் மிருகமாக மாறி, தன் சொந்த 16 வயது மகளையே சீரழித்துக் கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்... மேலும் பார்க்க

`இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது அவசியம் இல்லை' - மாணவியின் கோரிக்கையை நிராகரித்த உ.பி. உயர் நீதிமன்றம்

இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது அவர்களின் மத நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் நாட்டில் சில மாநிலங்களில் கல்வி கற்க வரும் இஸ்லாமிய மாணவிகள் கல்வி வளாகத்திற்குள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள... மேலும் பார்க்க