செய்திகள் :

அமெரிக்கா: அதிகாரியால் விபத்தில் கொல்லப்பட்ட இந்திய மாணவி; ரூ. 260 கோடி இழப்பீடு வழங்க முடிவு

post image

அமெரிக்காவில் காவல் துறை அதிகாரியால் கொல்லப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்த மாணவி ஜாஹ்னவி கண்டூலாவின் குடும்பத்திற்கு, சியாட்டில் நகரம் $29 மில்லியன் (சுமார் ₹262 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

23 வயதான ஜாஹ்னவி கண்டுலா, சியாட்டிலில் உள்ள Northeastern University-யில் தகவல் அமைப்பு துறையில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வந்தார்.

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சியாட்டில் நகர சாலையைக் கடக்கும்போது காவல் துறை அதிகாரி கெவின் டேவ் இயக்கிய ரோந்து வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்தார்.

ஜாஹ்னவி கண்டுலா
ஜாஹ்னவி கண்டுலா

விசாரணையில், 25 மைல் வேக வரம்பு கொண்ட பகுதியில் அதிகாரி மணிக்கு 74 மைல் வேகத்தில் வாகனத்தை இயக்கியது தெரியவந்தது. அவர் போதை மருந்துக் கடத்தல் குறித்த அழைப்பு வந்ததை அடுத்து இந்த வேகத்தில் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும், அவர் சென்றபோது அவசரகால விளக்குகளையும் சைரனையும் பயன்படுத்தியுள்ளார்.

உடன் இருந்த மற்றொரு அதிகாரியின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமரா பதிவில், ஜாஹ்னவியின் உயிரை அவமதிக்கும் வகையில் சிரித்துக்கொண்டு இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகியதையடுத்து பல போராட்டங்கள் வெடித்தன. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதனை அடுத்து 2025ல் விபத்தை ஏற்படுத்திய அதிகாரி கெவின் டேவ் பணிநீக்கம் செய்யப்பட்டதுடன், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக $5,000 அபராதம் விதிக்கப்பட்டது. 

ஆனால் குற்றவியல் குற்றச்சாட்டு பதிவு செய்யப் போதிய ஆதாரம் இல்லை என்று கிங் கவுண்டி வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கண்டூலாவின் குடும்பத்திற்கு, சியாட்டில் நகரம் $29 மில்லியன் (சுமார் ₹262 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

ஜாஹ்னவி கண்டுலா
ஜாஹ்னவி கண்டுலா

“ஜாஹ்னவி கண்டுலாவின் மரணம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது. இந்த நிதி தீர்வு அவரது குடும்பத்திற்கு ஓரளவு மனநிறைவைத் தரும் என நம்புகிறோம். அவரது வாழ்க்கை குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் முக்கியமானது,” என்று நகர வழக்கறிஞர் எரிகா எவன்ஸ் தெரிவித்துள்ளார்.

2023-ல் நடந்த இந்தச் சம்பவம், 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சட்ட நடவடிக்கை முடிவுக்கு வந்ததையடுத்து அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், இந்த வழக்கில் நடவடிக்கை எடுத்த காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'?

உலக நாடுகளையே ஆட்டிப் படைத்த அஸ்திரம் அமெரிக்க அதிபர்‌ ட்ரம்பின் 'பரஸ்பர வரி'. இந்த வரிகளை அவர் அமெரிக்காவின் 'சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)'-ன் கீழ் அமலுக்கு கொண்டு வந்தார்.இதி... மேலும் பார்க்க

AI மாநாடு: சட்டையை கழற்றிப் போராட்டம் நடத்திய காங்கிரஸ் அணி; கண்டனம் தெரிவிக்கும் பாஜக!

இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பறைசாற்றும் வகையில் டெல்லியில் 'இந்திய AI உச்சிமாநாடு 2026' (India AI Impact Summit) நடைபெற்றுவருகிறது. இந்த மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பிரதிந... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் 'ஹவுஸ்புல்' - தொகுதிப் பங்கீட்டில் ஸ்டாலினுக்குக் காத்திருக்கும் சவால் என்ன?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தடபுடலாக தயாராகி கொண்டிருக்கின்றன.பேரணி, பிரசாரம், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேர்தல் வாக்குறுதி என கட்சிகள் தீவிர களப்பணியில் இறங்கி இருக்கும் சூழலில், திம... மேலும் பார்க்க

KN Nehru: ``இதெல்லாம் எங்களுக்கு பின்னடைவல்ல..." - நீதிமன்ற உத்தரவு குறித்து ஆர்.எஸ் பாரதி!

அமைச்சர் கே.என்.நேரு மீதான அமலாக்கத்துறையின் ஊழல் புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அ.தி.மு.க எம்.பி இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற... மேலும் பார்க்க

`எதிர்க்கட்சித் தலைவருக்கு நன்றி' - சட்டமன்றத்தில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்!

ஸ்டாலின்மனநிறைவுடன் நிற்கிறேன்16-வது சட்டமன்றத் தொடரின் நிறைவு நாளான இன்று, முதல்வர் ஸ்டாலின் அவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உரையாற்றினார். அவரின் உரையில், ``பகுத்தறிவு பகலவன் தந்தை ப... மேலும் பார்க்க