செய்திகள் :

`அமெரிக்க பேச்சுவார்த்தையில் இந்தியா அவசரம் காட்டவில்லை' - காரணம் சொல்லும் வர்த்தக செயலாளர்

post image

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அமெரிக்கா இந்தியாவின் மீது முதலில் 25 சதவிகித வரி விதித்திருந்தது. பின்னர், இந்தியா ரஷ்யா உடன் வர்த்தகம் செய்கிறது என்று கூடுதல் 25 சதவிகித வரி விதிக்கப்பட்டது. ஆக, தற்போது இந்தியா மீது 50 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது.

இது இந்தியா ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சுமையை இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் சரிசெய்யும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜேஷ் அகர்வால்
ராஜேஷ் அகர்வால்
அந்தப் பேச்சுவார்த்தை எந்த நிலையில் உள்ளது என்பதை FICCI ஆண்டு பொதுக் கூட்டத்தில் இந்திய வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

"இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு நல்ல முடிவை எட்டுவோம் என்று எதிர்பார்க்கிறேன்.

ஆனால், எந்தவொரு பேச்சுவார்த்தையும் இந்த நாளுக்குள் முடிவுக்கு வருமென்று இறுதி நாளை கூறமுடியாது. காரணம், ஏதாவது ஒரு தரப்பில் திருப்தி ஏற்படவில்லை என்றாலும், அந்தப் பேச்சுவார்த்தை முடிவை எட்டாது.

இரு பேச்சுவார்த்தைகள்

தற்போதைய உலகளாவிய வர்த்தகத்தில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. அதில் ஒன்று தான், அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரி.

இதனால், இந்தியா மற்றும் அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரியை நீக்கும் உடனடி கட்டமைப்பு வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

நம்முடைய இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மூலம் பரஸ்பர வரியை முழுமையாக நீக்கும் வழியை பார்க்க வேண்டும். அதற்கு இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

காரணம், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் இதுபோன்ற பல்வேறு அம்சங்களில் பணிபுரிந்து வருவதால், அதில் அவசரம் காட்டவில்லை" என்று கூறியிருக்கிறார்.

"திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது தீபத்தூண் அல்ல" - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

திருப்பரங்குன்றம் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை திருநாளன்று, வழக்கம்போல கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டுவந்த கோயிலுக்கு மேலே இருக்கும் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கார்... மேலும் பார்க்க

"டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழகம் வந்தால்.!"- முதல்வர் ஸ்டாலின் காட்டம்

அடுத்த ஆண்டு (2026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் த... மேலும் பார்க்க

`ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சிக்குள் இடமில்லை!' - மறைமுகமாக உணர்த்திய எடப்பாடி பழனிசாமி?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், வானகரத்தில் நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம் கூடுதல் கவனத்தைப் பெற்றிருந்தது. அதிமுகவில் தங்களை இணைக்க ஓ.பி.எஸ் டிசம்பர... மேலும் பார்க்க

அதிமுக: "கட்சியை சில அரசியல் புரோக்கர்கள் அழிக்கப் பார்க்கிறார்கள், ஆனால்.!"- சி.வி சண்முகம்

சென்னை வானகரத்தில் இன்று (டிச.10) அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அதிமுக எம்.பி சி.வி சண்முகம், " அதிமுக வரலாற்றிலேயே பொறிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான நிகழ்வ... மேலும் பார்க்க

அதிமுக: `நாம் வென்றபோது சட்டையை கிழித்துக்கொண்டு திரிந்தவர் ஸ்டாலின்' - பொதுக்குழுவில் எடப்பாடி

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள தனி​யார் மண்​டபத்தில் அ.தி​.மு.க பொதுக்​குழு மற்​றும் செயற்​குழு கூட்​டம் இன்று நடை​பெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க