செய்திகள் :

அமைச்சர்களுக்கு இலாகா இல்லை, பட்ஜெட்டுக்கு திட்டம் இல்லை! - புதுச்சேரியை முடக்கிய முதல்வர் ரங்கசாமி

post image

புதுச்சேரி சட்டசபையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நடப்பு நிதியாண்டில் சட்டசபை தேர்தல் குறுக்கிட்டதால் பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாத அரசின் செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு சட்டசபையின் ஒப்புதல் பெறப்பட்டது.

தேர்தல் முடிந்த நிலையில் முழுமையான பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசிடம் ரூ.14,300/- கோடிக்கு ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் முடிவு வெளியாகி வரும் ஆகஸ்ட் 4-ம் தேதியுடன் மூன்று மாதங்கள் முடிவடைய உள்ள நிலையிலும், இன்னும் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கவில்லை. சட்டசபையை நடத்தக்கூடிய சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலும் நடத்தவில்லை.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

தற்போது வரை அரசுத் துறைகள் அனைத்தையும் முதலமைச்சர் ரங்கசாமியே கவனித்து வருகிறார். இலாகா இல்லாததால் அமைச்சர்களும் சட்டசபைக்கு வருவதில்லை. இதனால் தேர்தல் நடத்தை விதி காலத்தில் இருந்தது போலவே சட்டசபை வளாகம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடக்கிறது.

வரும் ஆகஸ்ட்டு மாதத்துடன் அரசின் செலவினங்களுக்கு பெறப்பட்ட ஒப்புதல் முடிவடைகிறது. இதனால் ஆகஸ்ட் மாதத்தில் சட்டசபையை கூட்டி பட்ஜெட் தாக்கல் செய்து, அரசின் செலவினங்களுக்கு ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.

ஆடி மாதம் என்பதால் சட்டசபையை கூட்டாவிட்டாலும், ஆகஸ்ட் 18-ம் தேதி ஆவணி மாதம் தொடங்குகிறது. அன்றைய தினமாவது சபையைக் கூட்டி முழு பட்ஜெட் தாக்கல் செய்து சபையின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

ஆனால் புதுச்சேரியில் நிதியமைச்சர் யார் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. புதுச்சேரியைப் பொறுத்தவரை வழக்கமாக முதலமைச்சர்கள்தான் நிதித்துறை பொறுப்பையும் வைத்திருப்பார்கள்.

அதனடிப்படையில் நீண்டகாலமாக பட்ஜெட் தாக்கல் செய்த முதலமைச்சர் என்ற பெயருக்கு சொந்தக்காரராக வலம் வருகிறார் முதல்வர் ரங்கசாமி. பட்ஜெட் முன்தயாரிப்பு பணிகள் துறை வாரியாக நடத்தப்பட வேண்டும். இதை அந்தந்த துறை அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார்கள்.

அதேபோல நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு தேவையான நிதி, புதிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிப்பார்கள். அதைத்தொடர்ந்து முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூடி ஆலோசித்து முடிவுகள் எடுக்கும். ஆனால் தற்போது வரை இதில் எதுவும் நடைபெறவில்லை.

முதல்வர் ரங்கசாமியுடன் அமைச்சர்கள்
முதல்வர் ரங்கசாமியுடன் இலாகா இல்லாத அமைச்சர்கள்

சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தால் மானியக்கோரிக்கை விவாதம் நடத்தப்படும். விவாதத்துக்கு துறை அமைச்சர்கள் பதில் தர வேண்டும். சட்டசபையில் கேள்வி பதில்களும் வரும். இதற்கெல்லாம் முன்பு சட்டசபை கூடுவதை எம்.எ.ல்.ஏ-க்களிடம் தெரிவித்து அவர்களிடம் கேள்விகளைப் பெற வேண்டும்.

கேள்விகளுக்கான பதில்களை அதிகாரிகள் தயாரித்து, அமைச்சர்களோடு விவாதிக்க வேண்டும். ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்தவர்கள் இந்த நடைமுறையை எதிர்கொள்வார்கள்.

தற்போதைய சட்டசபையில் இரண்டு அமைச்சர்கள் புதியவர்கள். அவர்கள் எம்.எல்.ஏ-க்களின் கேள்விகளை எதிர்கொள்வதற்குத் தயாராக வேண்டும். இப்படியான சூழலில் அமைச்சர்களுக்கு இலாகா அறிவிக்காமல் அரசு மெத்தனமாக இருப்பது, மக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

வடலூர்: கைவிடப்பட்டதா ரூ.100 கோடி திட்டம்? - வள்ளலார் சர்வதேச மையம் விவகாரத்தில் நடப்பது என்ன?

கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்திருக்கிறது வள்ளலார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சத்திய ஞானசபை. `வள்ளலாரின் கருத்துகளை பரவலாக்கும் விதமாக வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும்’ என்று, 2021 சட்ட... மேலும் பார்க்க

பழனி கோயில் நில மோசடி: வழக்கின் நிலை பற்றி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு நீதிமன்றம் உத்தரவு!

பழனி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி நிலம் மோசடியாக தனி நபர்கள் பெயருக்கு பதிவு செய்ய முயன்ற சம்பவம், தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதி... மேலும் பார்க்க

வந்தே மாதரம்: `அரசியல் நிர்ணய சபை முடிவுக்கு எதிரானது; இந்து தேசிய முயற்சி!' - எம்.பி ஆ.ராசா கண்டனம்

இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தேசியப் பாடலாக வந்தே மாதரத்தை அறிவிப்பதோடு, அதை அவமானப்படுத்தும் வகையில் செயல்படுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் மசோதாவை பா.ஜ.க அரசு தாக்கல... மேலும் பார்க்க

தேனி: கோமா நிலையில் சிறுவன்; `அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சைதான் காரணம்' - உறவினர்கள் போராட்டம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுதா என்பவருடைய 14 வயது மகன் நிவாஸ் குமார். இவர் கடுமையான சளி மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன... மேலும் பார்க்க

மேகதாது விவகாரம்: ``ராகுல் காந்தியால் இந்த ஒரு வரியை பகிரங்கமாகச் சொல்ல முடியுமா?" - அன்புமணி சவால்!

கர்நாடக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதோ அல்லது மேகதாது பகுதியைப் பார்வையிடுவதோ தமிழ்நாட்டுக்குப் பெரும் பாதகமாக அமையும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக சென... மேலும் பார்க்க

'வந்தே மாதரம்' மசோதா: `நாட்டை பிளவுப்படுத்தும் நீங்கள்தான் உண்மையான தேசத்துரோகி' - கனிமொழி கண்டனம்

'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வழி வகுக்கும் 'தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா 2026'-ஐ கடந்த 24-ஆம் தேதி மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மாநில... மேலும் பார்க்க