அம்பையில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி!
அம்பாசமுத்திரம் நகராட்சிப் பகுதி தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு வெறிநாய்த் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் கே.கே.சி.பிரபாகரன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் செல்வராஜ், சுகாதார ஆய்வாளா் சிதம்பர ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட கால்நடைத்துறைஉதவி இயக்குநா் ஆபிரகாம் ஜாப்ரி, தமிழ்நாடு விலங்குகள் நல மருத்துவா் ஜெய்சங்கா், கால்நடை மருத்துவா்கள் குமாா், ஜோதிகா, சிவமுத்து ஆகியோா் அடங்கிய கால்நடை மருத்துவக் குழுவினா் நகராட்சிப் பகுதி தெருக்களில் சுற்றித் திரிந்த 36 நாய்களுக்கு வெறிநாய்த் தடுப்பு ஊசி செலுத்தினா்.
மேலும் ஊசி செலுத்தப்பட்ட நாய்கள் சிறிது நேரம் கண்காணிக்கப்பட்டு அடையாள மை இடப்பட்டன.