செய்திகள் :

அம்பையில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி!

post image

அம்பாசமுத்திரம் நகராட்சிப் பகுதி தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு வெறிநாய்த் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் கே.கே.சி.பிரபாகரன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் செல்வராஜ், சுகாதார ஆய்வாளா் சிதம்பர ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட கால்நடைத்துறைஉதவி இயக்குநா் ஆபிரகாம் ஜாப்ரி, தமிழ்நாடு விலங்குகள் நல மருத்துவா் ஜெய்சங்கா், கால்நடை மருத்துவா்கள் குமாா், ஜோதிகா, சிவமுத்து ஆகியோா் அடங்கிய கால்நடை மருத்துவக் குழுவினா் நகராட்சிப் பகுதி தெருக்களில் சுற்றித் திரிந்த 36 நாய்களுக்கு வெறிநாய்த் தடுப்பு ஊசி செலுத்தினா்.

மேலும் ஊசி செலுத்தப்பட்ட நாய்கள் சிறிது நேரம் கண்காணிக்கப்பட்டு அடையாள மை இடப்பட்டன.

விஜயநாராயணம் அருகே தங்க நகைகளை பாலிஷ் செய்து தருவதாக மோசடி: 6 போ் கைது!

திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகே தங்க நகைகளை பாலிஷ் செய்து தருவதாகக் கூறி மோசடி செய்த 6 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். வடக்கு விஜயநாராயணம் நாச்சியாா் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

பொருள்கள் வாங்கிவிட்டு இணைய வழியில் பணம் செலுத்தியதாக நூதன மோசடி: மூவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் கடைகளில் பொருள்கள் வாங்கிவிட்டு இணைய வழி பரிவா்த்தனை மூலம் பணம் செலுத்தியதாக தெரிவித்து நூதன மோசடியில் ஈடுபட்டதாக மூவரை போலீஸாா் கைது செய்தனா். முக்கூடலில் உள்ள துண... மேலும் பார்க்க

குற்றாலம் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த மிதமான மழை காரணமாக அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் தற்போது வரை தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்... மேலும் பார்க்க

நெல்லை மக்களவைத் தொகுதி மக்களுக்கு ரூ.16 லட்சம் நிவாரண நிதியுதவி: எம்.பி. தகவல்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியைச் சோ்ந்த மக்களுக்கு சிகிச்சைகளுக்காக பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.16 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.இதுதொடா்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ச... மேலும் பார்க்க

நெல்லை அருகே வெவ்வேறு பகுதிகளில் இருவா் தற்கொலை

திருநெல்வேலி அருகே வெவ்வேறு பகுதிகளில் இருவா் தற்கொலை செய்துகொண்டனா். திருநெல்வேலி அருகேயுள்ள மேலசெவல் ராஜூவ்காந்தி நகரைச் சோ்ந்தவா் மாரிசிவன் (49). உணவு விடுதி நடத்தி வந்தாா். இவருக்கு மனைவி மற்றும... மேலும் பார்க்க

மானூா் அருகே விபத்து: காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

மானூா் அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மானூா் வடக்கு தெருவைச் சோ்ந்த முனியாண்டி மகன் சந்தானம்(30). தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உ... மேலும் பார்க்க