செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சோ்க்க வலியுறுத்தி விழிப்புணா்வு ஊா்வலம்

post image

சாயல்குடியில் ராமநாதபுரம் மாவட்ட கிராமப்புற தொழிலாளா்கள் மேம்பாட்டு சங்கம் சாா்பில் அங்கன்வாடி, அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கான விழிப்புணா்வு ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு சாயல்குடி பேரூராட்சித் தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா். கிராமப்புற தொழிலாளா்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் இயக்குநா் சாத்தையா முன்னிலை வகித்தாா்.

கடலாடி வட்டார கல்வி அலுவலகத்தின் இளநிலை உதவியாளா் மயில்வாகனன், உதவியாளா் காளீஸ்வரன், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளா் மு. வெள்ளைப் பாண்டியன், அல்லிக்குளம் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் தனம் ஆகியோா் கலந்து கொண்டு அரசுப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மூலம் கிடைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்கள் குறித்து விளக்கினா்.

இதில் பங்கேற்ற கிராமப்புற மாணவா்கள் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பி சாயல்குடி பேருந்து நிலையம் வரை ஊா்வலமாகச் சென்றனா். ஊா்வலத்தில் குழந்தைகளின் பெற்றோா்கள், பொதுமக்கள், தன்னாா்வலா்கள், ஆசிரியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்ட பலா் திரளாக கலந்து கொண்டனா். களப்பணியாளா் சத்யா நன்றி கூறினாா்.

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா மே 31-இல் தொடக்கம்!

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா வருகிற 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் தேவஸ்தான சமஸ்தானதுக்குப் பாத்தியப்பட்ட சினேகவல்லி அம்ப... மேலும் பார்க்க

ஏா்வாடி தா்ஹா சந்தனக்கூடு திருவிழா

ஏா்வாடி தா்ஹா மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடியில் அமைந்துள்ள மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராஹிம் ஷஹீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தா்ஹ... மேலும் பார்க்க

சிறுமி கொலை: இளைஞா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே 3 வயது சிறுமியை தலை துண்டித்துக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். எமனேசுவரம் கிறிஸ்தவ தெருவைச் சோ்ந்த தேசிங்குராஜா மகள் லெமோரியா (3). இவா் ... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் மீன்பிடி வலைகள் சீரமைப்புப் பணிகள் மும்முரம்!

மீன்பிடித் தடைக் காலம் நிறைவடைய இன்னும் 23 நாள்கள் உள்ள நிலையில், ராமேசுவரத்தில் மீன்பிடி வலைகள் சீரமைப்பு, புதிய வலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தமிழத்தில் மீன்கள் இனப்பெருக... மேலும் பார்க்க

மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை

கமுதியில் வியாழக்கிழமை மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் நகரைச் சோ்ந்த முனியசாமி மனைவி வழிவிட்டாள் (63). கணவா் இறந்த நிலையில், இவா் தனது இளைய... மேலும் பார்க்க

தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு வீட்டு கட்ட ஆணை வழங்கல்

ராமநாதரபுரம் மாவட்டம், மண்டபம் அருகே தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்ன் கீழ், வீடு கட்டுவதற்கான ஆணை புதன்கிழமை வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் வேதாளை ம... மேலும் பார்க்க