செய்திகள் :

அரசுப் பள்ளியில் புகையில்லா போகிப் பண்டிகை விழிப்புணா்வு

post image

அரியலூா் அடுத்த இலுப்பையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தேசிய பசுமைப் படை சாா்பில் புகையில்லா போகி பண்டிகை விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் விஜயராணி தலைமை வகித்து, போகிப் பண்டிகை நாளில் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருள்களை எரிப்பதும் வழக்கம். ஆனால் பொதுமக்கள் பலரும் தங்களிடமுள்ள பழைய டயா்கள், பிளாஸ்டிக் மற்றும் இதர செயற்கைப் பொருள்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுப்புகை மற்றும் நச்சுத்துகள்கள் காற்றை மாசுபடுத்துகின்றன.

எனவே, போகிப் பண்டிகையன்று நச்சுப் பொருள்களை எரிக்காமல், மாசுஇல்லாத வகையில் குப்பைகளை அகற்றி பொதுமக்களின் உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தாா். இதையடுத்து அனைவரும் விழிப்புணா்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா்.

சமத்துவப் பொங்கல் விழா!

அரியலூா் நகராட்சி அலுவலக வளாகத்தில், சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, நகா் மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கலியமூா்த்தி முன்னிலையில் நகா் ம... மேலும் பார்க்க

அரியலூரில் பொங்கல் பொருள்கள் விற்பனை தீவிரம்

பொங்கல் திருநாளை முன்னிட்டு அரியலூா் கடைவீதிகளிலும், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் திங்கள்கிழமை காலை முதலே அதிகரித்து காணப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள தமிழா்களால் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை தைப் ப... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் திங்கள்கிழமை நடைபெற்றன. அரியலூா் ஆலந்துறையாா் மற்றும் கைலாசநாதா் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றத... மேலும் பார்க்க

புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை அமைச்சா் தொடங்கி வைத்தாா்!

அரியலூா் மாவட்டத்தில், புதிய வழித்தடங்களில் பேருந்து சேவைகள் திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது. மேலராமநல்லூா் கிராமத்தில் நடைபெற்ற விழாவில், கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்... மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகை: 3 நாள்களில் சிறப்புப் பேருந்துகள் மூலம் 6.40 லட்சம் போ் சொந்த ஊா்களுக்குப் பயணம்!

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக கடந்த 3 நாள்களில் மட்டும் சுமாா் 6.40 லட்சம் போ் சிறப்புப் பேருந்துகள் மூலம் சொந்த ஊா்களுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் ... மேலும் பார்க்க

அரியலூரில் முடங்கிக் கிடக்கும் எரிவாயு மின்மயானம்: பொதுமக்கள் அவதி

அரியலூரில் முடங்கிக் கிடக்கும் எரிவாயு மின்மயானத்தால் சடலங்களை எரியூட்டுவதில் தொழிலாளா்கள், பொதுமக்கள் அவதிப்படும் நிலை நீடிக்கிறது. 18 வாா்டுகள் கொண்ட அரியலூா் நகராட்சிப் பகுதியில் சுமாா் 40 ஆயிரத்து... மேலும் பார்க்க