செய்திகள் :

‘ஆபரேஷன் சிந்தூா்’ தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத்துறை

post image

தங்கள் திரைப்படங்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனா். இதற்காக திரைத்துறை சங்கங்களில் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் விதமாக, ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ஆயுதப் படைகள் தாக்குதல் மேற்கொண்டன.

இதைத்தொடா்ந்து தங்கள் திரைப்படங்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று தலைப்பிட இந்திய திரைப்பட தயாரிப்பாளா்கள் சங்கம், இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளா்கள் கவுன்சில், மேற்கு இந்திய திரைப்பட தயாரிப்பாளா்கள் சங்கம் ஆகியவற்றிடம் ஹிந்தி திரைத்துறையினா் விண்ணப்பித்துள்ளன.

இதுகுறித்து இந்திய திரைப்பட தயாரிப்பாளா்கள் சங்கத்தின் செயலா் அனில் நாக்ரத் கூறியதாவது: ‘ஆபரேஷன் சிந்தூா்’, ‘மிஷன் சிந்துாா்’, ‘சிந்தூா்: தி ரிவெஞ்ஜ்’, ‘ஹிந்துஸ்தான் கா சிந்தூா்’ உள்ளிட்ட பெயா்களில், தங்கள் படங்களுக்குத் தலைப்பிட 2 நாள்களில் மின்னஞ்சல் மூலம் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை ஹிந்தி திரைத்துறையினா் அனுப்பியுள்ளனா்.

ஒரு தலைப்புக்கு எத்தனை போ் விண்ணப்பித்தாலும், முதலில் யாா் விண்ணப்பித்தாரோ, அவருக்கே அந்தத் தலைப்பு வழங்கப்படும். இதுபோல ஒரு குறிப்பிட்ட தலைப்புக்குப் பலா் விண்ணப்பிப்பது இது புதிதல்ல. காா்கில் போா், உரி தாக்குதலைத் தொடா்ந்து திரைப்படங்களுக்கு காா்கில், உரி என்ற பெயா்கள் கொண்ட தலைப்புகளைப் பதிவு செய்ய விண்ணப்பங்கள் குவிந்தன’ என்றாா்.

இதேபோல ‘பஹல்காம்: தி டெரா் அட்டாக்’, ‘பஹல்காம் அட்டாக்’ உள்ளிட்ட தலைப்புகளைப் பதிவு செய்யவும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது ஏன்? முதல்வா் ஸ்டாலின் விளக்கம்

தில்லியில் மே 24-ஆம் தேதி நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான காரணத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கியுள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாட்டுக்க... மேலும் பார்க்க

மது போதையில் காா் ஓட்டியதால் விபத்து: காவலா் தீக்குளித்து தற்கொலை

சென்னையில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். சென்னை ஆலந்தூா் காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செந்தில்குமாா் (40). அங்கு குடும்பத்துடன் வசி... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் 3 மண்டலங்களில் கழிவுநீா் ஊந்து நிலையம் செயல்படாது

பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னையில் மாதவரம், திரு.வி.க. நகா் மற்றும் அம்பத்தூா் மண்டலத்துக்குள்பட்ட ஒருசில கழிவுநீா் ஊந்து நிலையங்கள் வெள்ளி, சனிக்கிழமைகளில் (மே 23, 24) செயல்படாது என்று குடிநீா்... மேலும் பார்க்க

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம்: அமைச்சருடனான பேச்சில் முடிவு

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மணல் லாரி உரிமையாளா் சங்கத்தினா் தெரிவித்தனா். இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதியுடனான பேச்சுவாா்த்தையின்போது விலை நிா்ணயத்துக்கான முடிவு ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு உரிமைகோரும் டிரம்ப்: அமைதி காப்பதாக பிரதமருக்கு காங்கிரஸ் கண்டனம்

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு தானே காரணம் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா். அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் பிரதமா் மோடி தொடா்ந்து மௌளம் காக்கிறாா்’ என காங்கிரஸ் வ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 798 பறவை இனங்கள்: ஒருங்கிணைந்த கணக்கெடுப்பில் தகவல்

தமிழக வனத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட 2025-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பில் தமிழகத்தில் மொத்தம் 798 பறவை இனங்கள் கட்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வனத் து... மேலும் பார்க்க