செய்திகள் :

ஈரான் போர்: "உலக நாடுகள் அமெரிக்காவிற்கு இழப்பீடு வழங்க வேண்டும்" - ட்ரம்ப் புதிய கணக்கு

post image

இன்றுடன் ஈரான் போர் தொடங்கி சரியாக 6 மாதங்கள் 18 நாட்கள் ஆகியிருக்கின்றன.

இடையில் போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நடந்தாலும், எதுவும் பலனளிக்கவில்லை.

இதனால், இரண்டு நாடுகளுமே இப்போதும் ‘தாக்குதல்’ மோடில்தான் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

பேச்சுவார்த்தையைக் கேட்கும் ஈரான்

ஈரான் போர் எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகப் பக்கத்தில்,

“தோற்றுக்கொண்டிருக்கும் ஈரான் நாடு, எப்படியாவது மிக விரைவாக ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ளத் துடிக்கிறது.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

அமெரிக்கா இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாரா, இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன்.

இருப்பினும், இந்த யோசனைக்கு நாங்கள் கொள்கை ரீதியாகத் தயாராகவே இருக்கிறோம்” என்று பேச்சுவார்த்தைக்கு வெள்ளைக் கொடி காட்டியுள்ளார் ட்ரம்ப்.

ஆனால், ஈரான் போர் தொடங்கியதிலிருந்து ஈரான் பேச்சுவார்த்தைக்குத் துடிக்கிறது என்று 40-க்கும் மேற்பட்ட முறை ட்ரம்ப் கூறிவிட்டார்.

அப்போதெல்லாம் ஈரான் இந்தக் கூற்றை மறுத்திருக்கிறது.

இப்போது ஈரான் பேச்சுவார்த்தை குறித்து பொதுவெளியில் எதுவும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இதனால், ட்ரம்ப் இப்போது பதிவிட்டிருப்பது உண்மையா... இல்லையா என்பது அவருக்கே வெளிச்சம்.

ஈரான் போரில் உலக நாடுகளுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்னை – ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல்.

தற்போது நீர்ச்சந்தி மூடல் குறித்தும், உலக நாடுகள் குறித்தும் ட்ரம்ப் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

“ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக எண்ணெய் போக்குவரத்து தடையின்றி நடைபெற்று வருகிறது.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

நமக்கு எந்தவித உதவியும் செய்யாத உலக நாடுகள், இந்தப் போர் முடிந்தவுடன் அமெரிக்காவிற்கு இழப்பீடு வழங்க வேண்டும், வழங்குவார்கள்!

நமக்காக நாம் செய்வதை விட மற்ற நாடுகளுக்காகவே நாம் அதிகமாகச் செய்து வருகிறோம். பல தலைமுறைகளாகவே இதைத்தான் நாம் செய்துகொண்டிருக்கிறோம்!”

ஆக, ஈரான் போர், ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல் வைத்து ட்ரம்ப் புதிய கணக்கு ஒன்று போடுகிறார்.

Stalin: "ஸ்டாலினுக்கு வைரல் காய்ச்சல்" - திமுக முப்பெரும் விழாவை ஒத்திவைப்பதாக துரைமுருகன் அறிவிப்பு

இன்று மாலை சென்னை அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெற இருந்தது.ஆனால், அது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சென்னையில் அண்ணா பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொள்ளவில்... மேலும் பார்க்க

ஈரான் போரால் சொந்த நாட்டில் ட்ரம்பிற்கு வந்த 'வினை'; இதைச் சமாளிக்க ட்ரம்ப் தரும் விளக்கம் என்ன?

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் மிட் டேர்ம் தேர்தல் நடக்க உள்ளது. இது அமெரிக்காவின் நாடாளுமன்றமான காங்கிரஸுக்கான தேர்தல் ஆகும்.ட்ரம்பிற்குப் பெரும்பான்மை வேண்டும்!இதுவரை அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ச... மேலும் பார்க்க

நெல்லை: "முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்க்கத்தான் லண்டன் சென்றாரா?" - நயினார் நாகேந்திரன் கேள்வி

நெல்லை பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “இன்றைய சூழலில் 2 இடைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. 4 இடைத்தேர்தல்கள் வரவுள்ளன. சட்டமன்றத் தேர்தல் நட... மேலும் பார்க்க

திருச்செந்தூர் அம்பேத்கர் சிலை விவகாரம்; திருமாவளவன் முன்பு இரு தரப்பினர் மோதலால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை அமைப்பது தொடர்பாக அக்கட்சியினர் இரு தரப்பாக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகி... மேலும் பார்க்க

'நிகழ்ச்சி தொடர்பாக பேசியதை தவறாக சித்தரிக்க வேண்டாம்!" - பிக்பாஸ் சர்ச்சைக்கு விஜய் டிவி விளக்கம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பகிர்ந்த கருத்தை முன்வைத்து தவெக தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதிய... மேலும் பார்க்க

"முறிந்த காலுடன் 7000 அடி மலையில் ஏறினேன்" - ஈரானில் சிக்கி 50 மணிநேரம் போராடி தப்பிய அமெரிக்க வீரர்

கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி அமெரிக்க விமானங்கள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியபோது ஈரான் வீசிய ஏவுகணை ஒன்று அமெரிக்காவின் F-15E ஸ்ட்ரைக் ஈகிள் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது. அந்த விமானத்தில் இருந்த இரண... மேலும் பார்க்க