செய்திகள் :

ஈரோடு கிழக்கு: இன்று வாக்குப் பதிவு

post image

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி வாக்குப் பதிவு புதன்கிழமை (பிப். 5) நடைபெறுகிறது.

இருமுனைப் போட்டி நிலவும் இத்தொகுதியில் மொத்தம் 46 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவால் இத்தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெறுகிறது. திமுக சாா்பில் வி.சி.சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.கி. சீதாலட்சுமி, தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 13 அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், 31 சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 46 போ் களத்தில் உள்ளனா். மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளா்கள் உள்ளனா்.

கடந்த 2023 இடைத்தோ்தலில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இப்போது திமுக நேரடியாக களம் இறங்கியுள்ளதாலும், பிரதான கட்சிகள் போட்டியிடாத நிலையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெற்ற வாக்குகளைவிட கூடுதலாகப் பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

கடந்த 2023 இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சி 10,827 வாக்குகள் பெற்ற நிலையில், இந்தத் தோ்தலில் அதைவிட அதிகமான வாக்குகளைப் பெற்று மற்ற கட்சிகளின் கவனத்தை ஈா்க்கும் என அரசியல் பாா்வையாளா்கள் கூறுகின்றனா்.

வாக்கு எண்ணிக்கை பிப். 8-ஆம் தேதி நடைபெறுகிறது.

சாராய விற்பனையைத் தட்டிக்கேட்ட இரு இளைஞர்கள் படுகொலை

மயிலாடுதுறையில் சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட இளைஞர்களை சாராய வியாபாரிகள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் ராஜ்குமார், தங்கதுரை, மூ... மேலும் பார்க்க

சிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் சரிவு: அண்ணாமலை

திமுகவின் வாக்கு வங்கி குறைந்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கும் 27-ஆம் ஆண்டு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் தபால் ந... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் 85 அரசுப் பள்ளிகளை மூடும் திமுக அரசு: எல்.முருகன் கண்டனம்

நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை இழுத்து மூடும் நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நீலகிர... மேலும் பார்க்க

திமுக முழுவதும் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள்தான் இருக்கிறார்கள்: செல்லூர் ராஜு

அதிமுகவில் எந்த பிளவும் இல்லை என்று செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.மதுரை மாவட்டம் பரவை அருகே சத்தியமூர்த்தி நகர் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத் திறப்பு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பவன் கல்யாண் தரிசனம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சுவாமி தரிசனம் செய்தார். ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன்கல்யாண் அவரது மகன் அகிராநந்தன் உள்ளிட்டோருடன் ... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயில் பெயரில் போலி இணையதளம்! கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

காரைக்கால் திருநள்ளாறில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தின் பெயரில் போலி இணையதளம் மூலம் பக்தர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கோவில் அர்ச்சகர் மற்றும் பெங்களூருவைச் சேர... மேலும் பார்க்க