செய்திகள் :

ஒரே நாளில் 4 விவசாயிகள் தற்கொலை!

post image

கர்நாடகத்தில் வங்கிக் கடன் பிரச்னையால் பாதிக்கப்பட்ட நான்கு விவசாயிகள் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டனர்.

கர்நாடக மாநிலம் ஹாசனில் பதிவான வழக்கில், சிறுநிதி நிறுவனத்தின் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ரவி(வயது 50) என்ற விவசாயி விஷம் குடித்து திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

ஆர்கல்குட் தாலுகாவில் உள்ள காந்தேன ஹள்ளியில் வசிக்கும் ரவி, மூன்று ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் இஞ்சி பயிரிட ரூ.9 லட்சம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பயிரில் பூச்சி பாதிப்பு ஏற்பட்டதால் ஒரு குவிண்டால் விலை ரூ. 3,000-ல் இருந்து ரூ. 900 ஆகக் குறைந்ததால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் கடனளித்த நிதி நிறுவனங்களின் நெருக்கடியை தாங்க முடியாமல் ரவி தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கபள்ளாப்பூரில் நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்று டிராக்டர் வாங்கிய கிரிஷ் என்ற விவசாயி, கடனைத் திருப்பி அளிக்க முடியாததால் டிராக்டரை நிதி நிறுவனத்தினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான கிரிஷ் தற்கொலை செய்துகொண்டதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

மூன்றாவது வழக்கில் கௌரிபிதனூரைச் சேர்ந்த நரசிம்மய்யா என்பவர் தனியார் நிதி நிறுவனத்திடம் வாங்கிய கடனைத் திருப்பி அளிக்க முடியாததால், தனது பண்ணை வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிக்க : ராணுவ விமானத்தில் இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!

மேலும், தாவணகெரே, ஹரிஹார் தாலுகா, தீதுரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எல்.கே. சுரேஷ் (42) என்பவர் வங்கியில் ரு. 21 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

இதனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி கல்பனா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

கடன் பெற்றவர்களை வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் துன்புறுத்துவதை தடுக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஒரே நாளில் நான்கு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ.2300 கோடி வருவாய்: மோடி பதிலுரை

மக்கள் பிரச்னைகள் சிலருக்குப் புரியவில்லை என பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சியினரை மறைமுகமாக சாடியுள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி நன்றி... மேலும் பார்க்க

எல்லை விவகாரங்களில் ராகுல் கூறுவது பொய்யான குற்றச்சாட்டு: ராஜ்நாத் சிங்

எல்லை சார்ந்த விஷயங்களில் ராணுவ தலைமைத் தளபதியின் அறிக்கையை விமர்சித்துப் பேசிய ராகுல் காந்திக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.தேச நலன் சார்ந்த விஷயங்களில் ராகுல் ... மேலும் பார்க்க

போபாலில் யாசகம் பெறவும் தானம் வழங்கவும் தடை!

போபால் : மத்திய பிரதேச தலைநகர் போபால் அமைந்துள்ள போபால் மாவட்டத்தில் பிச்சையெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, யாரேனும் யாசகம் கேட்கும்போது அவர்களுக்கு தானம் வழங்குதலும் தடை செய்யப்பட்டுள்ளது. போ... மேலும் பார்க்க

முதல் முறை.. குடியரசுத் தலைவர் மாளிகையில் சிஆர்பிஎஃப் வீராங்கனைக்கு திருமணம்!

புது தில்லியில் அமைந்துள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், சிஆர்பிஎஃப் வீராங்கனை பூனம் குப்தாவுக்கு திருமண வைபவம் நடைபெறவிருக்கிறது. இங்கு தனிநபரின் நிகழ்ச்சி ஒன்று நடைபெறுவது இதுவே முதல் முறை என தகவல்க... மேலும் பார்க்க

இந்திய- சீன எல்லை குறித்து ராகுல் கூறியது தவறு: ராஜ்நாத் சிங்

இந்திய- சீன எல்லை விவகாரம் குறித்து ராகுல் காந்தி தவறான குற்றச்சாட்டுகளை கூறியதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் நேற்று(பிப். 3) பேசிய எதிர்க்கட்ச... மேலும் பார்க்க

ம.பி.யில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மத்தியப் பிரதேசத்தில் தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் கந்த்வா சாலை மற்றும் ராவ் பகுதிகளில் உள்ள 2 தனியா... மேலும் பார்க்க