செய்திகள் :

ஒரே நாளில் 4 விவசாயிகள் தற்கொலை!

post image

கர்நாடகத்தில் வங்கிக் கடன் பிரச்னையால் பாதிக்கப்பட்ட நான்கு விவசாயிகள் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டனர்.

கர்நாடக மாநிலம் ஹாசனில் பதிவான வழக்கில், சிறுநிதி நிறுவனத்தின் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ரவி(வயது 50) என்ற விவசாயி விஷம் குடித்து திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

ஆர்கல்குட் தாலுகாவில் உள்ள காந்தேன ஹள்ளியில் வசிக்கும் ரவி, மூன்று ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் இஞ்சி பயிரிட ரூ.9 லட்சம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பயிரில் பூச்சி பாதிப்பு ஏற்பட்டதால் ஒரு குவிண்டால் விலை ரூ. 3,000-ல் இருந்து ரூ. 900 ஆகக் குறைந்ததால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் கடனளித்த நிதி நிறுவனங்களின் நெருக்கடியை தாங்க முடியாமல் ரவி தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கபள்ளாப்பூரில் நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்று டிராக்டர் வாங்கிய கிரிஷ் என்ற விவசாயி, கடனைத் திருப்பி அளிக்க முடியாததால் டிராக்டரை நிதி நிறுவனத்தினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான கிரிஷ் தற்கொலை செய்துகொண்டதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

மூன்றாவது வழக்கில் கௌரிபிதனூரைச் சேர்ந்த நரசிம்மய்யா என்பவர் தனியார் நிதி நிறுவனத்திடம் வாங்கிய கடனைத் திருப்பி அளிக்க முடியாததால், தனது பண்ணை வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிக்க : ராணுவ விமானத்தில் இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!

மேலும், தாவணகெரே, ஹரிஹார் தாலுகா, தீதுரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எல்.கே. சுரேஷ் (42) என்பவர் வங்கியில் ரு. 21 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

இதனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி கல்பனா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

கடன் பெற்றவர்களை வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் துன்புறுத்துவதை தடுக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஒரே நாளில் நான்கு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததா? மாணவர்களே எச்சரிக்கை

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.பொதுவாகவே பொதுத் தேர்வுகள் என்றாலே பதற்றமாகத்தான்... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டால் கத்தக்கூடாது! தப்புவது எப்படி?

பொதுவாக விபத்துகளின்போதுதான் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாவார்கள். ஆனால், தற்போது சாலை விபத்துகளைப் போலவே கூட்ட நெரிசலும் அதிகரித்து, அதனால் உயிரிழப்புகளும் நேரிடுகின்றன.அண்மையில், புஷ்பா வெளியான த... மேலும் பார்க்க

மகா கும்பமேளா 'மரண' கும்பமேளாவாக மாறிவிட்டது! - மமதா பானர்ஜி

பிரயாக் ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா, மரண கும்பமேளாவாக மாறிவிட்டது என கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மிகப்பெரிய ஆன... மேலும் பார்க்க

யார் இந்த ஞானேஷ் குமார்? ஜம்மு - காஷ்மீர், அயோத்தி விவகாரங்களில் முக்கிய பங்காற்றியவர்...

புதிதாக நியமிக்கப்பட்டு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றியுள்ளார்.தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்றுடன் ஓய்வுபெற்ற... மேலும் பார்க்க

இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்த மோடி அரசு: கார்கே

பிரதமர் நரேந்திர மோடியின் அரசு இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து, இந்தியர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே... மேலும் பார்க்க

இந்திய பங்குச் சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெளியேறுவது ஏன்?: நிதியமைச்சா் விளக்கம்

மும்பை: இந்தியாவில் முதலீடுகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதால் அந்நியமுதலீட்டு நிறுவனங்கள் (எஃப்ஐஐ) தங்கள் கைவசம் உள்ள பங்குகளை விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகின்றன என்ற நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரி... மேலும் பார்க்க