செய்திகள் :

கனடா குருத்வாராவில் தாக்குதல்: 2 பேர் காயம்; ஒருவர் கைது - Ideology கிரைமா இது?

post image

கனடாவின் உள்ளூர் நேரப்படி, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) காலை 5 மணிக்கு, எட்மன்டனின் உள்ள நானக்சர் குருத்வாராவில் தாக்குதல் நடந்துள்ளது.

இந்தத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்குக் காரணமான ஒருவரைக் கைது செய்துள்ளது கனடா காவல்துறை. கைது செய்யப்பட்டவருக்கு 27 வயது. இவர் மீது ஏற்கெனவே வழக்கு உள்ளது. இந்தச் சம்பவத்திற்கு ஒரு நாளுக்கு முன்புதான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

மார்க் கார்னி
மார்க் கார்னி

கருத்தியல் ரீதியாக இந்தத் தாக்குதலைக் கைது செய்யப்பட்டவர் நடத்தியிருக்கிறாரா என்கிற கோணத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

தற்போது சம்பவம் நடந்துள்ள குருத்வாராவிற்கு அருகே உள்ள இரண்டு சீக்கிய குருத்வாராக்களுக்குக் கடந்த வாரம் மிரட்டல் அழைப்புகள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...

“இன்று காலை எட்மன்டனில் உள்ள நானக்சார் குருத்வாராவில் நடந்த தாக்குதல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. காயமடைந்த இருவருக்காகவும், இந்தத் கொடூரமான சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ள ஒட்டுமொத்த சமூகத்துக்காகவும் எனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

யாரும் தங்களின் வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பற்ற உணர்வை எதிர்கொள்ளக் கூடாது. உடனடியாகச் செயல்பட்ட எட்மன்டன் காவல் துறைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

`ஹார்முஸ் அமெரிக்காவின் பிராந்தியமா?' - ட்ரம்ப் புதிய அதிரடி பேச்சு

இதுவரை ஹார்முஸ் நீர்ச்சந்தியை அமெரிக்காவின் பிராந்தியமாக மாற்றப் போகிறேன் என்றுதான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வந்தார்.ஆனால், தற்போது அமெரிக்காவின் பிராந்தியமாகவே ஹார்முஸ் நீர்ச்சந்தி ஆகிவிட்டது என்... மேலும் பார்க்க

"உலக நாடுகள் அமெரிக்காவின் தடைகளை பின்பற்றுவது, அவர்களுக்கு அடிபணிவதற்கு சமம்!" - ஈரான்

ஈரானுக்கு எதிராக ‘பொருளாதார D-Day’-வை அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.இதன் கீழ், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா பொருளாதார நடவடிக்கைகளை எடுக்கும்.அமெரிக்காவின் இந்த அறிவ... மேலும் பார்க்க

’திமுக எம்.எல்.ஏ-க்கள் கார் வாங்க மறுத்ததற்கு இதுதான் காரணம்.!’ – செங்கோட்டையன் சொன்ன விளக்கம்

கோவை விமான நிலையத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சட்டமன்றத்தில் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான். பேரவை தலைவர், த... மேலும் பார்க்க

புதுச்சேரி: `இனி ஹெல்மெட் அணிவது கட்டாயம்!' - காவல்துறை தலைமை அதிரடி உத்தரவு

புதுச்சேரியில் கடந்த 15 ஆண்டுகளாக இருசக்கர வாகன விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு நிகராக உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2017-ம் ஆ... மேலும் பார்க்க

FIR பதிவு செய்ய 8 மணி நேர போராட்டம்: ‘நீதிக்கான பிரேக்’ எங்கிருந்து போடப்பட்டது? - ராகுல் காந்தி

நீட் வினாத்தாள் கசிவை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் கிட்டத்தட்ட ஒரு மாதக்காலம் போராட்டம் நடத்தியது அனைவரும் அறிந்ததே.ஜூலை 20-ம் தேதி, போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி சென்ற... மேலும் பார்க்க