செய்திகள் :

கழகங்கள் இல்லா குமரி மேற்கு மாவட்டம்; தேசியக் கட்சிகளின் கையில் தொகுதிகள்; பின்னணி என்ன?

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அரசியல் கட்சிகள் இந்த ஆறு தொகுதியையும் இரண்டாகப் பிரித்து கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு என இரண்டு மாவட்டங்களாக அமைப்பு ரீதியாக இயங்கி வருகின்றன.

கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய தொகுதிகள் கிழக்கு மாவட்டத்திலும், பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகள் மேற்கு மாவட்டமாகவும் உள்ளன. மாநிலக் கட்சியான அ.தி.மு.க கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் நேரடியாகப் போட்டியிடுகிறது.

மற்ற தொகுதிகள் அனைத்தும் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க மற்றும் த.மா.க கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதுபோன்று மாநிலக் கட்சியாக விளங்கும் தி.மு.க கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் தொகுதிகளில் போட்டியிடுகின்றது.

கடந்தமுறை வென்ற ஒற்றை தொகுதியான பத்மநாபபுரத்தை சி.பி.எம் கட்சிக்கும், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகளைக் கடந்த முறை போன்று காங்கிரஸுக்கும் ஒதுக்கி உள்ளது.

பா.ஜ.க, சி.பி.எம், காங்கிரஸ்
பா.ஜ.க, சி.பி.எம், காங்கிரஸ்

அ.தி.மு.க மற்றும் தி.மு.க கழகங்கள் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் மட்டும் போட்டியிடும் நிலையில் கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் தேசிய அளவிலான கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சி.பி.எம் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் மிகுந்தது என்பதை நிரூபிக்கும் வகையில் அமைப்பு ரீதியாக மேற்கு மாவட்டம் தேசியக் கட்சிகள் மட்டுமே போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு இரண்டு கழகங்களின் தலைமையும் ஆதரவு அளித்துள்ளதுதான் ஆச்சர்யமானது.

பத்மநாபபுரம் தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க நேரடியாக மோதின. தி.மு.க-வைச் சேர்ந்த மனோ தங்கராஜ் வென்று அமைச்சராகவும் ஆனார்.

கன்னியாகுமரி வருவாய் மாவட்டத்தில் தி.மு.க வென்ற ஒரே தொகுதியையும் கூட்டணியான சி.பி.எம்-க்குக் கொடுத்துள்ளதுதான் ஆச்சர்யத்தின் உச்சமாக உள்ளது.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி

கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தைப் பொறுத்தவரை கேரளா எல்லையில் அமைந்துள்ளது. இங்குள்ள 3 தொகுதிகளில் விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க இதுவரை வென்றதில்லை.

விளவங்கோட்டில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் சி.பி.எம் கட்சிகள் வென்றுள்ளன. கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ், ஜனதா கட்சி, ஜனதா தளம், த.மா.க கட்சிகள் வென்றுள்ளன.

விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் தொகுதிகள் கடந்த 20 ஆண்டுகளாக காங்கிரஸ் வசம் உள்ளன. பத்மநாபபுரம் தொகுதியில் மட்டுமே தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள் வென்றுள்ளன. இப்போது தி.மு.க அந்தத் தொகுதியை சி.பி.எம்-க்கும், அ.தி.மு.க கூட்டணி கட்சியான பா.ஜ.க-விடமும் ஒப்படைத்துவிட்டது.

இப்போது கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளும் தேசியக் கட்சிகள் வசம் சென்றுவிட்டன.

“முதல்வர் வாகனம் முன்னே... செய்தி துறை வாகனம் பின்னே!” - செய்தி துறைக்கு செக் வைக்கும் அ.தி.மு.க!

தமிழக முதல்வரின் பிரசாரத்திற்கு தமிழக அரசின் ஊழியர்களையும், செய்தி துறையையும் தி.மு.க தரப்பு தங்களுக்காக பயன்படுத்தி வருகிறது. உடனடியாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க பரபரப்பு ப... மேலும் பார்க்க

`இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்' - பழைய நினைவில் பேசிய செங்கோட்டையன்; சட்டென சுதாரிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, அக்கட்சியின் கோபிசெட்டிபாளையம் தொகுதி வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார் அ.தி.மு.க - வின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன். ஈரோடு மாவட்டம், பவான... மேலும் பார்க்க

கரூர்: "சட்டை அவரோடது தான்; ஆனால், மாப்பிள்ளை அவரில்லை.!" - திமுக வேட்பாளரை கிண்டல் செய்த அண்ணாமலை

கரூர், வெங்கமேடு பகுதியில் அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.இதில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள... மேலும் பார்க்க

பிரசாரத்துக்கு விடுமுறை எடுக்கும் விஜய் - கவலையில் தவெக வேட்பாளர்கள்?

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய இன்னும் சரியாக 10 நாட்களே இருக்கிறது. எல்லா கட்சித் தலைவர்களும் அதிகமான தொகுதிகளை கவர் செய்ய சுற்றி சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தவெக தலைவர் விஜய் மட்டு... மேலும் பார்க்க

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மாற்றி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.அதன் ஒரு பகுதியாக, இப்போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றப்பட்டுள... மேலும் பார்க்க

"பா.ஜ.க-வுக்கு பன்முகம் கிடையாது, கோர முகம் தான் இருக்கிறது"- செல்வபெருந்தகை கடும் தாக்கு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிள்ளியூர் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் வேட்பாளர் தாரகை கத்பர்ட், விளவங்கோடு வேட்பாளர் டி.டி.பிரவீன் ஆகியோரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவ... மேலும் பார்க்க