செய்திகள் :

சமயபுரம் கோயில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் பலி - கும்பாபிஷேகம் நடந்து 4 ஆண்டுகளிலேயே விபத்து

post image

சக்தி தலங்களில் முதன்மையானதும், அம்மன் திருத்தலங்களில் பிரசித்தி பெற்றதுமான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, தற்போது பூச்சொரிதல் விழா நடைபெற்று வருகிறது.

இந்தப் பூச்சொரிதல் விழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தந்து இரவு தங்கி காலையில் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

உயிரிழப்பு

அதன்படி, சமயபுரம் வந்து தங்கி இருந்து காலையில் அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வதற்காக வருகை தந்த பக்தர்கள் கோயில் சன்னதி வீதி மண்டபத்தில் படுத்து உறங்கினர். இதேபோல், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நதியா (32) மற்றும் அவரது உறவினர்கள் படுத்து உறங்கியுள்ளனர்.

உறங்கிக் கொண்டிருந்த மூன்று பெண் பக்தர்கள் மீதும் மண்டப சீலிங் மேற்கூரை காங்கிரீட் சுவர் பெயர்ந்து விழுந்ததில் பலத்த காயமடைந்தனர். இதில், சம்பவ இடத்திலேயே நதியா உயிரிழந்தார். உடனடியாக, அருகில் இருந்த மற்ற பக்தர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

spot

மேலும், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சமயபுரம் காவல் நிலைய போலீஸார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டதோடு, பேரிகார்டுகளை கொண்டு சன்னதி வீதியை முற்றிலும் அடைத்தனர். அம்மனை சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு இடையே இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று நான்கு ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்த நிலையில், அதற்குள் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் பக்தர்களிடமும், அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா: லாரியுடன் மோதி தீப்பிடித்த பஸ்; 12 பயணிகள் தீயில் கருகி உயிரிழந்த சோகம்!

ஆந்திரா மாநிலத்தில் இன்று காலை நடந்த விபத்தில் பஸ் ஒன்று எரிந்து நாசமானது. தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த பஸ் தெலங்கானாவின் நிர்மல் என்ற இடத்தில் இருந்து ஆந்திராவில் உள்ள நெல்லூர் என்ற இடத்திற்க... மேலும் பார்க்க

கட்டுப்பாட்டை இழந்து, 8 பேர் உயிரை காவு வாங்கிய அரசு பேருந்து; சேலத்தை உலுக்கிய சோகம்- என்ன நடந்தது?

கோவையில் இருந்து இன்று காலை பயணிகளுடன் சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து,‌ உத்தம சோழபுரம் அருகில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியிருக்கிறது. எதிரில் ... மேலும் பார்க்க

நீலகிரி: 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்; ராணுவ உதவியுடன் விடிய விடிய போராடி மீட்பு - திக் திக்

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் 28 வயதான சிவகுருநாதன். கடந்த 13 - ம் தேதி நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா சென்ற இவர், தனியார் தங்கும் விடுதி ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்து நாள்தோறும் பல்வேறு... மேலும் பார்க்க

அதிகாலை துயரம்: ஒடிசா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் தீப்பிடித்து 10 நோயாளிகள் உயிரிழப்பு

ஒடிசா மாநிலம் கட்டாக் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் எஸ்.சி.பி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று அதிகாலை மூன்று மணிக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீப்பிடித்துக்கொண்டது. அதிகாலை நேரம் என்பதால் அனைத்த... மேலும் பார்க்க

நாவலூர்: அதிகாலை நேர்ந்த கோரம்; சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 குழந்தைகள் பலியான சோகம்

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் பகுதியில் இன்று (மார்ச் 15) அதிகாலை குடியிருப்பு ஒன்றில் எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இந்த வெடிப்புச் சம்பவத்தின் வீரியம் காரணமாக அந்த வீடு முற்ற... மேலும் பார்க்க

கரூர்: கல்லூரி பேருந்து மீது மோதிய ரயில்; 23 மாணவர்கள் காயம்; ஆளில்லாத லெவல் கிராசிங்கால் விபத்து

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள குளத்தூர் பகுதியில் ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கைக் கடக்க முயன்ற தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த 23... மேலும் பார்க்க