செய்திகள் :

மனோ தங்கராஜ்: `அமைச்சருக்கே சீட் இல்லியா?' - இரவு வரை போராட்டம் - நிர்வாகிகள் சொல்வது என்ன?

post image

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் சிட்டிங் அமைச்சர் மனோ தங்கராஜிக்கு சீட் மறுக்கப்பட்டதுடன் அந்த தொகுதி சி.பி.எம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பத்மநாபபுரம் தொகுதி கடந்த 20 ஆண்டுகளாக தி.மு.க வசம் இருந்தது. தொடர்ந்து 10 ஆண்டுகள் எம்.எல்.ஏ-வாக இருந்தார் மனோ தங்கராஜ். 2021 தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வென்ற ஒரே தி.மு.க எம்.எல்.ஏ-வான மனோ தங்கராஜிக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது. இந்த முறையும் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடக்கும் என எண்ணியிருந்தார்.

ஆனால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதுடன் தொகுதியும் கூட்டணி கட்சியான சி.பி.எம்-க்கு ஒதுக்கப்பட்டது. இது மனோ தங்கராஜ் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நேற்று கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளும், மனோதங்கராஜின் ஆதரவாளர்களும் கூடினர்.

தி.மு.க அலுவலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டம்

பின்னர் அங்கு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றினர். அதில், மனோ தங்கராஜ் மாவட்டச் செயலாளராகவும், அமைச்சராகவும் பொறுப்பேற்றதில் இருந்து தேசிய கட்சிகளின் கோட்டையாக இருந்த குமரி மாவட்டத்தை தி.மு.க கோட்டையாக மாறி அசுர வளர்ச்சி கண்டுள்ளது. இந்த மாவட்டத்தில் ஒரு தொகுதிகூட தி.மு.க-வுக்கு ஒதுக்கப்படாதது வருத்தமளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கழகத்துக்கு உண்மையாகவும், அரசுக்கு தன் துறை வழியாக நற்பெயரும் உருவாக்கியதோடு, குமரி மாவட்ட தி.மு.க-வை அரண்போல் காத்து, பல ஆயிரம் கோடி திட்டங்கள் மூலம் மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் வழிநடத்திய அமைச்சர் மனோ தங்கராஜிக்கு பத்மநாபபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க மறுபரிசீலனை செய்ய தி.மு.க தலைவர் ஸ்டாலினை கேட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் கட்சி அலுவலகத்துக்கு வெளியே சாலை ஓரமாக நின்று மனோ தங்கராஜிக்கு சீட் ஒதுக்க வேண்டும் எனக்கேட்டு அவரது ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினர். நேற்று காலையில் இருந்தே கட்சி அலுவலகத்துக்கு வந்த தி.மு.க-வினர் மதியம் கலைந்து சென்றனர். பின்னர் மாலை 3 மணிக்கு மேல் சில நிர்வாகிகள் கட்சி அலுவலகத்துக்குச் சென்று இரவு சுமார் 9 மணி வரை உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். மனோ தங்கராஜ் சென்னையில் இருந்தாலும் அவரது ஏற்பாட்டின்படியே ஆதரவாளர்கள் மூலம் இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மனோ தங்கராஜ் மாவட்டச் செயலாளராக உள்ள கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் அமைப்பு ரீதியாக 9 ஒன்றியங்கள் உள்ளன. அதில் 5 ஒன்றிய செயலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். 4 பேர் ஆப்சென்ட் ஆகினர். பத்மநாபபுரம் தொகுதியின் மையப்பகுதியான பத்மநாபபுரம் நகர முக்கிய நிர்வாகிகளும் இதில் கலந்துகொள்ளவில்லை.

தி.மு.க போராட்டம்

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜ், "தேர்தல் கூட்டணி விவகாரத்தில் விளவங்கோடு தொகுதியை  கம்யூனிஸ்ட் கட்சிக்கு காங்கிரஸ் விட்டு கொடுக்க மறுத்ததால் வேறு வழியின்றி  பத்மநாபபுரம் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு தி.மு.க தலைமை ஒதுக்கியது. கட்சி எடுத்த முடிவுக்கு நாம் அனைவரும் கட்டுப்பட வேண்டும். மீண்டும் திராவிட மாடல் அரசு தொடர நமது பணி இருக்க வேண்டும். இருந்தாலும் குமரி மேற்கு மாவட்டத்தில் கட்சி வளர்ச்சிக்காக தி.மு.க-வுக்கு ஏதாவது ஒரு தொகுதி ஒதுக்கப்பட வேண்டியது அவசியம். இதனை தி.மு.க தலைவர் பரிசீலனை செய்ய வேண்டும். எனவே, பத்மநாபபுரம் தொகுதியை தி.மு.க-வுக்கு ஒதுக்கி மனோ தங்கராஜை வேட்பாளராக அறிவிக்க தலைமை பரிசினை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி கட்சி தலைமைக்கு இமெயில் மூலம் அனுப்பியுள்ளோம்" என்றார்.

'பெரம்பூரில் வேட்புமனுவை தாக்கல் செய்த விஜய்!' - எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் யார்? முழு விவரம்

தவெக தலைவர் விஜய் பெரம்பூரிலும் திருச்சி கிழக்கிலும் போட்டியிடப் போவதாக நேற்று அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து பெரம்பூர் தொகுதியில் விஜய் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.விஜய்தமிழகத்தில் 23... மேலும் பார்க்க

தூத்துக்குடி: அஜிதா ஆக்னலுக்கு சீட் மறுப்பு; த.வெ.க கொடியை கழற்றி வீசிய ஆதரவாளர்கள்!

தமிழக வெற்றிக் கழகம் தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. எந்தக் கட்சியுடணும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுகிறது. 234 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டிலை அறி... மேலும் பார்க்க

"கேரளத்தில் பி.ஜே.பி-தான் ஏ டீம்; மோடியின் உத்தரவாதம்!" - பாலக்காட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?

பிரதமர் மோடி கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் திருச்சூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். திருச்சூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் ரோடு ஷோ நடத்தினார் பிரதமர் ... மேலும் பார்க்க

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாமக - செளமியா அன்புமணி எந்தத் தொகுதியில் நிற்கிறார்?

2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் நிலையில் வேட்பாளர் பட்டியல் மார்ச் 30-ஆம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்யவேண்ட... மேலும் பார்க்க

`தேர்தலில் ஜெயிக்கவில்லை என்றால் சாவதைத் தவிர வேறு வழி இல்லை!' - அதிர்ச்சி கொடுத்த திமுக எம்.எல்.ஏ

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 23-ம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. அதற்காக தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடந்த இரண்டு நாட்களில் தங்கள் வேட்ப... மேலும் பார்க்க

"நரகத்திற்கு வரவேற்கிறோம்" - அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்; போர் முனையில் 2,500 கடற்படையினர்!

இஸ்ரேலும் - அமெரிக்காவும் கூட்டு சேர்ந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து தொடங்கிய இந்தப் போர் நாளுக்க... மேலும் பார்க்க