செய்திகள் :

கவிதையில் காந்தி, குரலில் விடுதலை – இக்கால ஔவையார் பண்டிதை அசலாம்பிகை அம்மையார்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

தமிழறிஞர், கவிஞர், சொற்பொழிவாளர், கல்வியாளர், சமூகச் சீர்திருத்தவாதி, விடுதலைப் போராட்டத் தியாகி எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டிருந்த பண்டிதை அசலாம்பிகை அம்மையார், தமது வாழ்வையே தமிழ், தேசம், பெண்களின் முன்னேற்றம் ஆகியவற்றிற்காக அர்ப்பணித்தவர்.

அசலாம்பிகை அம்மையார் 16/07/1875 அன்று, இன்றைய விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள இரட்டணை என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை ரா.பெருமாள் ஐயர். தாயாரின் பெயர் குறித்த நம்பகமான வரலாற்றுப் பதிவு கிடைக்கவில்லை. இவருக்கு ருக்மணி என்ற மூத்த சகோதரி இருந்தார். ருக்மணியும் சிறந்த கவிஞராக விளங்கியதால், இரு சகோதரிகளும் தமிழ் இலக்கிய உலகில் ‘இரட்டைப் புலவர்கள்’ போன்று திகழ்ந்தனர்.

அசலாம்பிகை அம்மையார் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்டார். எட்டு அல்லது பத்து வயதில் திருமணம் நடைபெற்றதாக வெவ்வேறு பதிவுகள் குறிப்பிடுகின்றன. திருமணமான சில ஆண்டுகளிலேயே, சுமார் 11 அல்லது 12 வயதில் கணவனை இழந்து இளம் வயதிலேயே கைம்பெண்ணானார். கல்வி பெரும் வாய்ப்பு குறைவாக இருந்த அக் காலச் சமூகச் சூழலில் விதவைகள் கல்வி பெற பல்வேறு தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இளம் வயதில் கணவனை இழந்த மகளை சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்குள் முடக்காமல், கல்வியின் மூலம் உயர்த்த வேண்டும் என்று அவரது தந்தை பெருமாள் ஐயர் உறுதியாகக் கருதினார். மகள்களுக்கு கல்வி அளிப்பதற்காகவே குடும்பத்துடன் கடலூர் திருப்பாதிரிப்புலியூருக்கு குடிபெயர்ந்தார்.

திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த சுப்பிரமணிய தம்பிரான் அவர்களைத் தனது இல்லத்திற்கே வரவழைத்து, அசலாம்பிகைக்கும் அவரது சகோதரி ருக்மணிக்கும் தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்களையும் இலக்கணங்களையும் முறையாகக் கற்பிக்க ஏற்பாடு செய்தார். இந்தக் கல்வியே அசலாம்பிகையின் அறிவாற்றலுக்கும் இலக்கியப் பயணத்திற்கும் அடித்தளமாக அமைந்தது.

தமிழ் இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற அவர் சிறந்த கவிஞராகவும் எழுத்தாளராகவும், மேடைப் பேச்சாளராகவும் உருவெடுத்தார். அசலாம்பிகை அம்மையாரின் தமிழ் தமது உள்ளத்திற்கு விருந்தாக இருந்ததாக குறிப்பிட்டு, தமிழ்ப் புலமையைப் பாராட்டிய திரு.வி.க., அவருக்கு ‘இக்கால ஔவையார்’ என்ற சிறப்புப் பெயரை வழங்கினார்.

மகாத்மா காந்தியின் வாழ்க்கை, சிந்தனை, போராட்டம் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 2,034 பாடல்களைக் கொண்ட ‘காந்தி புராணம்’ என்ற நூலை இயற்றினார். காந்தியின் வாழ்க்கையைச் செய்யுள் வடிவில் பதிவு செய்ய நீண்டகாலம் உழைத்து உருவாக்கிய ‘காந்தி புராணம்’ அசலாம்பிகை அம்மையாரின் மிக முக்கிய வாழ்நாள் சாதனை.

பால கங்காதர திலகரின் வாழ்க்கை மற்றும் தேசப்பற்றை எடுத்துரைக்கும் ‘திலகர் மான்மியம்’ (திலகர் புராணம்) என்ற நூலையும் இயற்றினார். ஆத்திசூடி வெண்பா, இராமலிங்க சுவாமிகள் வரலாற்றுப் பாடல், குழந்தை சுவாமிகள் பதிகம், திருவாமாத்தூர்ப் புராணம், திருவுடையூர் தலபுராணம் உள்ளிட்ட பல படைப்புகளை உருவாக்கினார்.

தமிழ் இலக்கியத்தில் அந்தாதி எனப்படும் தனித்துவமான செய்யுள் வடிவில் படைப்புகளை உருவாக்குவதில் சிறந்து விளங்கினார். ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்த பாடலின் தொடக்கச் சொல்லாக அமையும் இந்த இலக்கிய வடிவில், ‘திருவாமாத்தூர் திரிபு அந்தாதி’ போன்ற நூல்களை இயற்றினார். காரைக்கால் அம்மையாருக்குப் பின்னர் அந்தாதி மரபில் சிறந்து விளங்கிய பெண் புலவர்களில் அசலாம்பிகைக்கு முக்கிய இடம் உண்டு.

அவரது கவித்திறனை மகாகவி பாரதியாரும் அறிந்திருந்தார். 1906-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளிவந்த ‘சக்கரவர்த்தினி’ இதழில் பாரதியாரின் பாடல்களுடன் அசலாம்பிகை அம்மையாரின் பாடல்களும் இடம்பெற்றது அசலாம்பிகையின் இலக்கியத் திறமைக்குக் கிடைத்த முக்கிய அங்கீகாரமாகும்.

அசலாம்பிகை அம்மையார் இலக்கியத்தை வெறும் கலைக்காகப் பயன்படுத்தவில்லை; அதை தேச விடுதலைக்கான ஆயுதமாக மாற்றினார். இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்துடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். அரசியல் மாநாடுகளில் எழுச்சியூட்டும் உரைகளை நிகழ்த்தியதுடன், தனது பாடல்கள் மூலம் மக்களிடையே தேசப்பற்றையும் விடுதலை வேட்கையையும் வளர்த்தார்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஆனந்த விகடன் இதழில் தொடங்குகிறது, நரன் எழுதும் 'ஆயிரம் சூரியன்கள்' வரலாற்றுப் புனைவுத் தொடர்!

13ம் நூற்றாண்டில் சேர, சோழ, பாண்டிய வணிகர்களுக்கிடையே கடலின் நறுமணப் பாதையை யார் ஆள்வது என்ற போட்டி நடக்கிறது. அதுவரை சோழ வணிகர்கள்தான் கிழக்கின் கடலையும், மேற்கின் கடலையும் தங்கள் நாவாய்களால் கட்டி ஆ... மேலும் பார்க்க

மகிழ மரத்தடியில் வந்த மாயப் பெண்! - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சமையலறையும் வகுப்பறையும்! - ஓர் ஆழமான வாழ்வியல் ஒப்பீடு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அமெரிக்காவில் ஒரு ஆன்மீக சாதனை! – 12 ஆண்டுகள் தடையின்றி நடந்த 'ஸ்ரீமத் பாகவதம்'

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

வெளியில் மழை... What to Do! – சுவாரஸ்ய நினைவலைகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

படிக்கும் மாணவர்களைப் படைக்கும் மாணவர்களாக மாற்றும் பேராசிரியர் - நூலாசிரியராக மாறிய மாணவர்கள்!

ஒரு சாமானியனை, சாதனையாளனாகவும் சிந்தனையாளனாகவும் மாற்றுவது கல்வி. அதனால் தான் நம்முடைய வாழ்வில் சுமார் கால் நூற்றாண்டுக் காலத்தைக் கல்வி நிலையங்களில் அர்ப்பணிக்கிறோம். கல்லாக இருக்கும் மாணவனைக் கூட ஆச... மேலும் பார்க்க