செய்திகள் :

காரைக்குடி தொகுதியில் களமிறங்கும் சீமான்; திருச்சி மாநாட்டில் அறிவிப்பு!

post image

திருச்சி மாவட்டம், ஆலம்பட்டி புதூரில் நாம் தமிழர் கட்சியின் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் அறிவித்திருக்கிறார்.

seeman

அதன்படி, சீமான் போட்டியிடக்கூடிய தொகுதியாக சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சீமானின் சொந்த மாவட்டம் என்பதனால் அந்த தொகுதியில் அவர் இந்த முறை போட்டியிடுகின்றார். ஏற்கனவே, கடந்த 2016 - ம் ஆண்டு கடலூர் மாவட்டத்திலும், 2021 -ம் ஆண்டு திருவெற்றியூரிலும் போட்டியிட்ட சீமான், இந்த முறை சொந்த மாவட்டத்தில் களம் காண்கின்றார்.

இதே போன்று, நாம் தமிழர் கட்சியினுடைய முக்கிய முகங்களாக பார்க்கக்கூடிய இடும்பாவனம் கார்த்தி வேதாரண்யம் தொகுதியிலும், இயக்குநர் களஞ்சியம் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியிலும், வீரப்பன் மகள் வித்தியா ராணி மேட்டூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மேலும், 117 ஆண்களும், 117 பெண்களும் என ஆண்கள் பெண்கள் சம அளவில் போட்டியிடுகின்றனர். முதன்முறையாக நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒரு திருநங்கைக்கு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

crowd

வில்லிவாக்கம் தொகுதியில் ரோஷினி என்ற திருநங்கை போட்டியிட உள்ளார். தமிழக அரசியல் களத்தில் மற்ற கட்சி, கூட்டணிகள் இன்னும் தொகுதிகளையே பங்கிடாத நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களையே அறிவித்திருப்பது, மற்ற கட்சிகளை உற்று கவனிக்க வைத்திருக்கிறது.

தீவிரவாதிகளை குறிவைத்து தாக்கியதா பாகிஸ்தான்? மறுக்கும் ஆப்கானிஸ்தான்! - தாக்குதல் பின்னணி?

ஆப்கானிஸ்தான் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது பாகிஸ்தான் அரசின் விமானப் படை.கடந்த 6-ம் தேதியில் இருந்து பாகிஸ்தானில் 3 தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடந்துள்ளன. இவற்றிற்கு ஆப்கானிஸ்தானில் பதுங்க... மேலும் பார்க்க

மதுரை: தெற்கு மண்டல தேர்தல் ஆலோசனை – ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற வியூகக் கூட்டம் | Album

முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூக... மேலும் பார்க்க

`வெறும் ரசிகர் கூட்டமாக இருந்த உங்களை 40 ஆண்டுக்காலம் செதுக்கி மேடையேற்றி இருக்கிறேன்' - கமல்ஹாசன்

மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் 9 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி ‘மறவோம்’ என்ற தலைப்பில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் ப... மேலும் பார்க்க

உலக நாடுகளின்‌ மீது புது வரி! - 'சட்டத்திற்கு உட்பட்ட' ஐடியாவோடு வரும் ட்ரம்ப் - அது என்ன?

நேற்று முன்தினம் (பிப்ரவரி 20), அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப் உலக நாடுகளின் மீது விதித்திருக்கும் வரிக்கு எதிராக தீர்ப்பளித்தது அமெரிக்க உச்ச நீதிமன்றம்.ஆனாலும், அந்த வரிகளை ரத்து செய்வதாக இல்லை ட்ரம்பும்,... மேலும் பார்க்க