செய்திகள் :

காவிரி விவகாரம் குறித்து பேச ஒத்திவைப்புத் தீர்மானம்; உதயநிதியின் திட்டம் என்ன?

post image

தவெக அரசு முதல் வேளாண் பட்ஜெட்டை இன்று (ஆகஸ்ட்.6) சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது.

இந்நிலையில் இந்தப் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

"இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது விவசாயிகள்தான். அவர்களுக்கு ஆதரவு கொடுத்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகத்தான் இன்று கறுப்புச் சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வந்தோம்.

தமிழக வேளாண் பட்ஜெட்
தமிழக வேளாண் பட்ஜெட்

திமுக ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்திருந்தோமோ, அதே திட்டங்களைத்தான் பெயரை மாற்றி புதுத்திட்டங்கள் போல வேளாண் பட்ஜெட்டை அறிவித்திருக்கிறார்கள்.

இந்தப் பட்ஜெட்டில் உருப்படியாக எதுவுமே கிடையாது. குறிப்பாக தேர்தல் வாக்குறுதியின்போது இப்போது இருக்கக்கூடிய முதலமைச்சர் முழு பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சொன்னார். ஆனால் ஆட்சிக்கு வந்து எதுவும் செய்யவில்லை.

மேகதாது காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா செல்கிறேன் என்கிறார். அங்குள்ள முதலமைச்சர் வர வேண்டாம் என்கிறார். மேகதாது விஷயத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று நாங்கள் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் ஒரே கருத்துடன் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவோம் என்று இந்த அரசுக்கு திமுக சார்பாகக் கோரிக்கை வைத்துக்கொண்டே இருக்கிறோம். அதற்கும் முதலமைச்சர் வாயைத் திறந்து பதில் சொல்ல மாட்டேங்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

காவிரி விவகாரம் குறித்துப் பேச நாளை ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர கடிதம் வழங்கியுள்ளோம். அப்போது நிறைய கேள்விகள் கேட்போம். முடிந்தால், தைரியம் இருந்தால் முதலமைச்சர் வாயைத் திறந்து பதில் சொல்லட்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக எப்போதும் துணை நிற்கும்" என்று பேசியிருக்கிறார்.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க