செய்திகள் :

காஸாவைக் கைப்பற்றும் அமெரிக்கா: டிரம்ப் அறிவிப்பு!

post image

காஸாவை அமெரிக்கா கைப்பற்றவிருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, உலகில் போர் நடக்க விடமாட்டேன் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில், இஸ்ரேல் - காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுடன் டிரம்ப் பேசியதாவது, ``இது அவ்வளவு எளிதான முடிவு அல்ல. காஸா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள். பாலஸ்தீனியர்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. காஸா முனையில் உள்ள பாலஸ்தீனியர்கள் எகிப்து மற்றும் ஜோர்டான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுவர். காஸா பகுதியில் வாழ முடியாது. அவர்களுக்கு இன்னொரு இடம் தேவை என்று நினைக்கிறேன்.

பாலஸ்தீனியர்கள் வேறு இடத்தில் குடியேறிய பிறகு, போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவை அமெரிக்கா கைப்பற்றும். அப்பகுதியில் பாதுகாப்புப் பணிகளில் அமெரிக்க ராணுவம் ஈடுபடுத்தப்படும். காஸாவில் உள்ள வெடிக்காத குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களும் அகற்றப்படும்; சிதைந்த கட்டடங்களை தரைமட்டமாக்கப்படும்.

இதையும் படிக்க:டிரம்ப் மகனுக்கு சிறைத் தண்டனை வழங்கும் இத்தாலி?

பின்னர், அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்புகள், வீடுகள் உள்ளிட்ட வசதிகளை வழங்கும் வகையில் ஒரு பெரியளவிலான பொருளாதார வளர்ச்சியை அமெரிக்கா உருவாக்கும். பாலஸ்தீனியர்கள் உள்பட உலக மக்கள் வாழும் இடமாக காஸா உருவாகும். கூடுதலாக, ஹமாஸுக்கு பணத்தை வழங்கியதுடன், மனிதகுலத்துக்கு மிகவும் விசுவாசமற்ற ஐ.நா. நிவாரண மற்றும் பணி நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டு வந்த அனைத்து ஆதரவையும் நிறுத்தும் அறிவிப்பை வெளியிடுவதிலும் மகிழ்ச்சியடைகிறேன்’’ என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, காஸா மீதான டிரம்ப்பின் புதிய யோசனை வரலாற்றில் இடம்பெறக்கூடிய ஒன்றாகவும், வரலாற்றை மாற்றக்கூடியதாகவும் இருக்கும். இது மத்திய கிழக்கின் புவிசார் அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நெதன்யாகு கூறினார்.

காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகள் அக்டோபர், 2023-ல் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேரை பணயக் கைதிகளாகவும் பிடித்து வைக்கப்பட்டனர். இதன் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய இந்தப் போரில், காஸாவில் 17,400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 47,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 20.3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காஸாவில் இருந்து புலம்பெயர்ந்தனர். காஸாவில் உள்ள 4,36,000 (92%) கட்டடங்கள் இஸ்ரேலிய தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன; 546 பள்ளிகளில் 496 பள்ளிகள் சேதமடைந்துள்ளன, மேலும், 36 மருத்துவமனைகளில் 17 மட்டுமே செயல்படுகின்றன.

இதனிடையே, ஓராண்டுக்கும் மேலான இஸ்ரேல் - காஸா போரை நிறுத்த அமெரிக்கா, இஸ்ரேல், கத்தார் நாடுகள் போர் நிறுத்தம் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி, போர் நிறுத்தக் காலமான 6 வாரங்களுக்கு இருதரப்பினரும் அமைதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து, ஜன. 19 ஆம் தேதியில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

வாடிகன்: மருத்துவமனையில் போப் அனுமதி

கத்தோலிக தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (88) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். சிறுவயதிலேயே ஒரு நுரையீரல் அகற்றப்பட்ட போப் பிரான்சிஸுக்கு நீண்ட காலமாகவே உடல்நலப் பிரச்னைகள... மேலும் பார்க்க

சீனா: ‘பூமிகாப்பு படை’க்கு ஆள் சோ்ப்பு

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குதவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அத்தகைய ஆபத்துகளில் இருந்து பூமியைப் பாதுகாப்பதற்கான படையில் நிபுணா்களை அமா்த்தும்... மேலும் பார்க்க

காங்கோ: கிளா்ச்சியாளா்கள் வசம் கவுமு விமான நிலையம்

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி முன்னேற்றம் கண்டுவரும் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா், தெற்கு கீவு மாகாணத்தில் இரண்டாவதாக கவுமு நகர விம... மேலும் பார்க்க

ரஷிய-உக்ரைன் போா் விவகாரத்தில் இந்தியா நடுநிலை அல்ல: பிரதமா் மோடி

‘ரஷிய-உக்ரைன் போா் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை; மாறாக, அமைதியின் பக்கமே இந்தியா நிற்கிறது’ என்று பிரதமா் மோடி கூறினாா். அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அதிபா் டிரம்புடன் பிரதமா் மோடி இருதர... மேலும் பார்க்க

அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

அமெரிக்கா பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி, இந்தியாவில் கல்வி வளாகங்களைத் தொடங்க அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு அழைப்பு விடுத்தாா். வாஷிங்டனில் அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் பிரதமா் மோடி மேற்கொண்ட பேச்சுவா... மேலும் பார்க்க

இந்தியா-வங்கதேசம்: எல்லை படைகள் அடுத்த வாரம் பேச்சுவாா்த்தை

இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளின் எல்லை பாதுகாப்புப் படைகள் அடுத்த வாரம் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளன. தில்லியில் உள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) தலைமையகத்தில் 55-ஆவது... மேலும் பார்க்க