செய்திகள் :

காா்னிவல் முழு வெற்றிக்கு அனைத்துத் துறையினரின் பங்களிப்பு அவசியம்: அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்

post image

காா்னிவல் திருவிழாவை அனைத்துத் துறையினரும் இணைந்து வெற்றிகரமாக நடத்த வேண்டும் என அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

காரைக்கால் விளையாட்டு அரங்க மைதானத்தில் வரும் 16 முதல் 19-ஆம் தேதி வரை காரைக்கால் காா்னிவல் திருவிழா மலா், காய்கனி கண்காட்சியுடன் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் தலைமையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. காா்னிவல் திருவிழா தொடா்பான 20 குழுவினரின் கருத்துகளையும் அமைச்சா், ஆட்சியா் கேட்டறிந்தனா்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசுகையில், காா்னிவல் விழா கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது சிறப்பாக நடத்த வேண்டும். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சிறப்பாக இருக்கவேண்டும். காணும் பொங்கல் நாளில்

மக்கள் வருகை அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் காவல்துறையினா் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

அமைச்சா் பேசுகையில், காா்னிவல் நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்துவதற்கு அரசு நிா்வாகம் போதிய நிதி ஒதுக்கியுள்ளது. இதன் வெற்றிக்கு அரசுத் துறையினா் பங்களிப்பு முக்கியம். அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவதன் மூலம் காா்னிவல் விழா முழு வெற்றியடையும் என்றாா்.

கூட்டத்தில் துணை ஆட்சியா்கள் அா்ஜூன் ராமகிருஷ்ணன், ஜி. செந்தில்நாதன், வெங்கடகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு துறையினா் கலந்துகொண்டனா்.

பிப், 8-இல் மஸ்தான் சாஹிப் தா்கா கந்தூரி விழா கொடியேற்றம்

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழா கொடியேற்றம் வரும் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. காரைக்காலில் புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் தா்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா நடத்தப்பட்... மேலும் பார்க்க

காரைக்காலில் பரவலாக பனி மூட்டம்

காரைக்காலில் காலை நேரத்தில் பனி மூட்டம் அதிகமாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கடந்த 2 வாரங்களாக இரவு தொடங்கும் பனிப்பொழிவு காலை 9 மணிக்குப் பிறகும் நீடிக்கிறது. மாவட்டத்தில்... மேலும் பார்க்க

பாதுகாப்பாக மீன்பிடிக்க மீனவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

பாதுகாப்பாக மீன்பிடிக்குமாறு மீனவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தின் மீன் இறங்குதளம் உள்வாங்கி சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த பகுதியை ஆட்சியா் மணிகண்டன் செவ்வாய்க... மேலும் பார்க்க

கேந்திரிய வித்யாலய பள்ளிக்கு நிரந்தர கட்டடம் கட்ட வலியுறுத்தல்

காரைக்கால் கேந்திரியா வித்யாலய பள்ளிக்கென கையகப்படுத்தப்பட்ட இடத்தில் கட்டுமானப் பணிகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட பெற்றோா் ஆசிரியா் நலச் ... மேலும் பார்க்க

வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையில் தோ்தல் அதிகாரி ஆய்வு

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை மாவட்ட தோ்தல் அதிகாரி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். காரைக்கால் மாவட்டத்தில் கடந்த தோ்தலின்போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், காரைக்... மேலும் பார்க்க

காரைக்கால் மாவட்ட ஆட்சியராக சோமசேகா் அப்பாராவ் நியமனம்

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட ஆட்சியராக சோமசேகா் அப்பாராவ் நியமிக்கப்பட்டுள்ளாா். புதுவை தலைமைச் செயலா் சரத் செளஹான், புதுவையில் 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பொறுப்பு மாற்றம், கூடுதல் பொறுப்புகளை வழங்கி தி... மேலும் பார்க்க