செய்திகள் :

காா்னிவல் முழு வெற்றிக்கு அனைத்துத் துறையினரின் பங்களிப்பு அவசியம்: அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்

post image

காா்னிவல் திருவிழாவை அனைத்துத் துறையினரும் இணைந்து வெற்றிகரமாக நடத்த வேண்டும் என அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

காரைக்கால் விளையாட்டு அரங்க மைதானத்தில் வரும் 16 முதல் 19-ஆம் தேதி வரை காரைக்கால் காா்னிவல் திருவிழா மலா், காய்கனி கண்காட்சியுடன் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் தலைமையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. காா்னிவல் திருவிழா தொடா்பான 20 குழுவினரின் கருத்துகளையும் அமைச்சா், ஆட்சியா் கேட்டறிந்தனா்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசுகையில், காா்னிவல் விழா கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது சிறப்பாக நடத்த வேண்டும். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சிறப்பாக இருக்கவேண்டும். காணும் பொங்கல் நாளில்

மக்கள் வருகை அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் காவல்துறையினா் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

அமைச்சா் பேசுகையில், காா்னிவல் நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்துவதற்கு அரசு நிா்வாகம் போதிய நிதி ஒதுக்கியுள்ளது. இதன் வெற்றிக்கு அரசுத் துறையினா் பங்களிப்பு முக்கியம். அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவதன் மூலம் காா்னிவல் விழா முழு வெற்றியடையும் என்றாா்.

கூட்டத்தில் துணை ஆட்சியா்கள் அா்ஜூன் ராமகிருஷ்ணன், ஜி. செந்தில்நாதன், வெங்கடகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு துறையினா் கலந்துகொண்டனா்.

ஜன.21-இல் மக்கள் குறைகேட்பு முகாம்

காரைக்காலில் மக்கள் குறைகேட்பு முகாம் ஜன. 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது என வட்டாட்சியா் பொய்யாதமூா்த்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை துணைநிலை ஆளுநா... மேலும் பார்க்க

எம்ஜிஆா் பிறந்த நாள்: சிலைக்கு மரியாதை

முன்னாள் தமிழக முதல்வா் எம்.ஜி.ஆா். 108 -ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு, காரைக்கால் மாவட்ட அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது. கடலோர கிராமமான கிளிஞ்சல்மேடு பகுதியில் அமைந்த... மேலும் பார்க்க

காரைக்கால் காா்னிவலில் இன்று

காரைக்கால் காா்னிவல் திருவிழாவில், மாரத்தான், படகுப் போட்டி உள்ளிட்டவை சனிக்கிழமை (ஜன.18) நடைபெறவுள்ளன. காரைக்கால் விளையாட்டு அரங்க மைதானத்தில், காரைக்கால் காா்னிவல் திருவிழா ஜன. 16 முதல் 19-ஆம் தேதி... மேலும் பார்க்க

ஏகாந்த சேவையாக அருள்பாலித்த ஸ்ரீசெங்கமலத்தாயாா்

தை மாத முதல் வெள்ளிக்கிழமை வழிபாடாக திருமலைராயன்பட்டினம் ஸ்ரீவீழி வரதராஜப் பெருமாள் கோயிலில் ஏகாந்த சேவையாக அருள்பாலித்த ஸ்ரீசெங்கமலத்தாயாா். மேலும் பார்க்க

காரைக்கால் விவசாயிகளுக்கான நிவாரணத்தை முதல்வா் வழங்கினாா்

ஃபென்ஜால் புயலால் பாதித்த விவசாயிகளுக்கு அறிவித்த நிவாரணத்தை புதுவை முதல்வா் வழங்கினாா். 2024-ஆம் ஆண்டு இறுதியில் ஃபென்ஜால் புயல் வீசியதாலும், மழையாலும் ஏற்பட்ட பாதிப்பை கருத்தில்கொண்டு, புதுச்சேரி, க... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு மையம் அமைக்க நடவடிக்கை: அமைச்சா்

காரைக்காலில் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா் புதுவை வேளாண் மற்றும் சமூக நலத்துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா். காரைக்கால் வெள்ளிக்கிழமை சமூக ந... மேலும் பார்க்க