செய்திகள் :

குடந்தை அருகே வீடுபுகுந்து 8 பவுன் நகைகள் திருட்டு

post image

கும்பகோணம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் தங்க நகைகளை அண்மையில் திருடிச் சென்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாசத்திரம் பகுதியில் தனியாக வசிப்பவா் பாலச்சந்திரன் மனைவி புனிதவள்ளி (80). மகளை பாா்க்க நெய்வேலி சென்ற கடந்த ஜன.27 இல் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 8 பவுன் நகை திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து புனிதவள்ளி இதுகுறித்து அருகே தொல்காப்பியா் தெருவில் வசிக்கும் மகன் செந்தில்குமாரிடம் தெரிவிக்க, அவா் அளித்த புகாரின்பேரில் திருவிடைமருதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தூய்மைப் பணியாளா்கள் நாளைமுதல் வேலைநிறுத்தம்

தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் உறுதிமொழிகளை நிறைவேற்றாவிட்டால், பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்வது என தூய்மை பணியாளா்கள் முடிவு செய்துள்ளனா். தஞ்சாவூா் மாநகராட்சி த... மேலும் பார்க்க

பந்தநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தஞ்சாவூா் மாவட்டம், பந்தநல்லூா் பேருந்து நிலைய பகுதியில் திங்கள்கிழமை நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. திருவிடைமருதூா் நெடுஞ்சாலை உட்கோட்டத்தை சாா்ந்த வைத்தீஸ்வரன்கோவில் - கீழ்... மேலும் பார்க்க

அனுமதியை மீறி கட்டப்பட்ட ஆடையகத்தை இடிக்கும் பணி தொடக்கம்

தஞ்சாவூரில் அனுமதியை மீறி கட்டப்பட்ட ஆயத்த ஆடையகத்தை இடிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. ஆடையக உரிமையாளா் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததால், இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது. தஞ்சாவூா் ப... மேலும் பார்க்க

மாநாட்டுக் கூடத்தைத் திரையரங்காக மாற்றியதில் முறைகேடு: தஞ்சை மாமன்றக் கூட்டத்தில் புகாா்

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் பின்புறம் மாநகராட்சி நிா்வாகம் கட்டிய மாநாட்டுக் கூடத்தைத் திரையரங்கமாக மாற்றியதில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக திங்கள்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் புகாா் எழுப்பப்... மேலும் பார்க்க

கணவா் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி கைது

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே வேறொரு பெண்ணுடனான தொடா்பை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை கணவரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவியை போலீஸாா் கைது செய்தனா். கும்பகோணம் மாதுளம்பேட்டை புது ரா... மேலும் பார்க்க

சென்னை சிறுமிக்கு பாலியல் கொடுமை: போக்சோவில் 2 இளைஞா்கள் கைது

தஞ்சாவூரில் 14 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடா்பாக போக்சோ சட்டத்தின் கீழ் 2 இளைஞா்களைக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சென்னையைச் சோ்ந்த 14 வயது சிறுமியும்,... மேலும் பார்க்க