செய்திகள் :

கும்பகோணம்: காதலிக்க மறுத்த பள்ளி ஆசிரியை; பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட கேரள ஜிம் பயிற்சியாளர்

post image

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், மதுர் பகுதியைச் சேர்ந்தவர் சுமன்ராஜ் (36). ஜிம்மில் பயிற்சியாளராக உள்ளார். சுமன்ராஜுக்குத் திருமணம் ஆகி ஹித்தாச்சி என்ற மனைவியும் 7 வயதில் பெண் குழந்தையும், ஒன்பது மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளன.

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், மீட்பு புரி பகுதியைச் சேர்ந்தவர் நீத்து (25). சுமன்ராஜ் பயிற்சியாளராக இருந்த ஜிம்முக்கு வந்த நீத்துவிற்கும் சுமன்ராஜுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் தீ வைத்து கொண்ட நபர்
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் தீ வைத்து கொண்ட நபர்

இதனால் சுமன்ராஜ் மனைவி குழந்தைகளைப் பிரிந்து தமிழ்நாட்டிற்கு வந்து சென்னையில் ஜிம் பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார். நீத்து கும்பகோணம் அணைக்கரை அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக கடந்த மூன்று மாதங்களாகப் பணிபுரிந்து வருகிறார்.

சுமன்ராஜ் திருமணமானவர் என்பது தெரிந்த காரணத்தினால் நீத்து சுமன்ராஜிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். சுமன்ராஜ் நீத்துவிடம் தன்னைக் காதலிக்கவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று பலமுறை மிரட்டியும் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சுமன்ராஜ் நீத்து பணிபுரியும் பள்ளிக்குச் சென்று நீத்துவைக் காதலிக்க சொல்லியும், தன்னிடம் பேசுமாறும் தொந்தரவு செய்துள்ளார். ஆனால் நீத்து பேச மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அத்துடன் நீத்து கேரளாவுக்குச் செல்வதாகக் கூறி அணைக்கரையில் இருந்து பேருந்தில் கும்பகோணம் பேருந்து நிலையம் சென்றுள்ளார்.

அதே பேருந்தில் சுமனும் வந்திருக்கிறார். கும்பகோணம் பேருந்து நிலையம் வந்ததும், நீத்துவிடம் தன்னைக் காதலிக்கவில்லை என்றால் பெட்ரோல் ஊற்றிக் தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என நீத்துவிடம் சுமன்ராஜ் மிரட்டியுள்ளார்.

இளம் பெண் காதலிக்க மறுத்ததால் தீ வைத்துக் கொண்ட சுமன்ராஜ்
இளம் பெண் காதலிக்க மறுத்ததால் தீ வைத்துக் கொண்ட சுமன்ராஜ்

இதைதொடர்ந்து நீத்து எனக்கு வேறு ஒருவடன் திருமணம் நிச்சயமாகி விட்டது எனவே நான் கேரளாவுக்குச் செல்கிறேன் என்றதாகச் சொல்கிறார்கள். உடனே சுமன்ராஜ் தான் ஏற்கனவே சென்னையில் இருந்து எடுத்து வந்த பெட்ரோலைத் தன் உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

பேருந்து நிலையத்திற்குள் சுமன்ராஜ் உடல் எரிந்த நிலையில் உடையைக் கழற்றியபடி நடந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் தீயை அணைத்து சுமன்ராஜை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

உடலில் பல இடங்களில் தீ காயங்கள் இருந்த நிலையில், ஏன் தீ வைத்து கொண்டாய் என பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் கேட்க, நான் காதலிச்ச பெண் வேற கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா அதனால் தீ வைத்து கொண்டேன் என்றுள்ளார்.

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சுமன்ராஜ்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நீத்து, கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டவர் 2வது முறையாக தப்பி ஓட்டம்; போலீஸாரின் அலட்சியம்தான் காரணமா?

தூத்துக்குடி மாப்பிளையூரணியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரின்மகன் நிரஞ்சன். கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி விளாத்திகுளம் மீனாட்சிபுரத்தில் அடிதடி பிரச்னை தொடர்பாக விளாத்திகுளம் காவல் நிலையம் போலீஸார் ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: பால் வேன் மோதியதால் 4 சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள கொல்லப்பட்டி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி பழனிச்சாமி -அஞ்சம்மாள். இவர்கள், கணவாய் மேடு பகுதியில் சாலையோரமாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்கள்.இவர்களின் ... மேலும் பார்க்க

விவாகரத்து, 7 மாத கர்ப்பம்: கடத்தி மரத்தில் கட்டி தீவைக்கப்பட்ட பஞ்சாப் பெண் சோசியல் மீடியா பிரபலம்

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் மஞ்ஜீத் கவுர்(28). சோசியல் மீடியா பிரபலமான கவுர் கடந்த ஜூலை மாதம் சண்டிகரில் மதுபானக்கடை ஒன்றுக்கு அருகில் தனக்கு தெரிந்த இரண்டு பேரால் காரில் கடத்திச்செல்லப்பட்டார். மொரி... மேலும் பார்க்க

ஆம்பூர்: பச்சிளம் குழந்தை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை; தாய், தந்தையால் அரங்கேறிய கொடூரம்; 4 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மாங்காதோப்பு பாஷா நகர்ப் பகுதியில் வசிக்கும் டீ மாஸ்டர் தொழிலாளி ரஹமத்துல்லா, வயது 38. இவரின் மனைவி ஹவாமா. இவர்களுக்குத் திருமணமாகி 17 ஆண்டுகளாகிறது. ஏற்கெனவே இரு ஆண் ப... மேலும் பார்க்க

வாணியம்பாடி: கிணற்றில் மிதந்த 2 சிறுவர்களின் பிணம்; கிராமத்தையே அலறவிட்ட சம்பவம்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள ஆலங்காயம் பெத்தூர் கிராமத்தில், சுகுணா பிரகாசம் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணறு அமைந்திருக்கிறது. இந்த கிணற்றிலிருந்து நிலத்தின் உரிமையாளர் தண்ணீர்... மேலும் பார்க்க

அரக்கோணம்: கணவரின் மரணம், மீளமுடியாத துயரம்; இரு பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்த தாய்!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகேயுள்ள மங்கம்மாபேட்டையைச் சேர்ந்த அம்மிக்கல் செதுக்கும் தொழிலாளி கோட்டையா, வயது 30. இவரின் மனைவி வள்ளி (23). இவர்களுக்கு 7 வயதில் பரத், 3 வயதில் சந்தோஷ் என்று இரு ... மேலும் பார்க்க