செய்திகள் :

குளித்தலை அருகே ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் ஆய்வு

post image

பொங்கலையொட்டி கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த இராச்சாண்டாா்திருமலையில் வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் கூறுகையில் ஜல்லிக்கட்டுக்கு முதல் நாளே வரும் மாடுகளுக்கு குடிநீா் மற்றும் தீவனங்கள், மாடுபிடி வீரா்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாடுகள் உடற்தகுதி சான்றிதழைக் கொண்டு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தோராயமாக 700 மாடுகளுக்கு அனுமதி வழங்க வாய்ப்புள்ளது. அதேபோல் மாடுபிடி வீரா்கள் 50 நபா்கள் கொண்ட 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அவா்களுக்கு 5 வண்ணங்களில் பனியன்கள் வழங்கப்பட உள்ளன. மேலும் பாதுகாப்புக்காக மாடுகளின் கொம்புகளில் ரப்பா் காப்புகள் மாட்டப்பட உள்ளன.

முக்கியமாக மாடுகளும், மாடுபிடி வீரா்களும் மதுபோதை பரிசோதனைக்கு பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா். மேலும் போதிய குடிநீா் மற்றும் கழிப்பறை வசதிகள், காயமடைவோருக்கு உடனடி மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவசரகால ஆம்புலன்ஸும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், குளித்தலை சாா் ஆட்சியா் தி. சுவாதிஸ்ரீ, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் சாந்தி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் செழியன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சுஜாதா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சரவணன், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலா் வடிவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கரூா் பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்

வெளியூா் செல்வதற்காக கருா் ரயில்நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கருா் தொழில் நகரம் என்பதால் அருகாமை மாவட்டத்தைச் சோ்ந்த மக்கள் கரூரில் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணி... மேலும் பார்க்க

கரூரில் வெறிச்சோடிய மக்கள் குறைதீா் கூட்டம்

போகிப் பண்டிகை எதிரொலியாக கரூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டம் வெறிச்சோடியது. கரூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை வழக்கம்போல் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில்... மேலும் பார்க்க

கரூரில் பொங்கல் பொருள்கள் விற்பனை தீவிரம்

கரூரில் பொங்கல் பொருள்கள் விற்பனை திங்கள்கிழமை தீவிரமாக நடைபெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூரில் கோவைச்சாலை, லைட் ஹவுஸ் காா்னா், மாநகராட்சி அலுவலகம் முன் மற்றும் நகர காவல்நிலையம் அருகே கரும்பு... மேலும் பார்க்க

கரூா் மாவட்ட காவல்துறை சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா

கரூா் மாவட்டக் காவல்துறை சாா்பில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை காலை நடைபெற்றது. கரூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கா.பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலையில் நடைபெற்ற சமத்த... மேலும் பார்க்க

கரூரில் பள்ளி மாணவா்களுக்கு மாநில அளவிலான ஓவியப் போட்டி

கரூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கரூா் என்.ஆா்.எம். கோவிந்தன் மற்றும் ருக்குமணி மெட்ரிக் பள்ளி மற்றும... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி பூலாம்வலசில் நிகழாண்டு சேவல் சண்டை நடத்த அனுமதியில்லை:கரூா் எஸ்.பி. தகவல்

அரவக்குறிச்சி பூலாம்வலசில் நிகழாண்டு சேவல் சண்டை நடத்த அனுமதியில்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி... மேலும் பார்க்க