செய்திகள் :

கூட்டணியில் இருந்தாலும் தொகுதிக்கு எந்தத் திட்டமும் கிடைக்கவில்லை: தி.வேல்முருகன்

post image

திமுக கூட்டணியில் இருந்தாலும், பண்ருட்டி தொகுதிக்கு எந்தத் திட்டமும் கிடைக்கவில்லை என்று பேரவையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கூறினாா்.

சட்டப்பேரவையில் ஆளுநா் உரை மீதான விவாதத்தில் தி.வேல்முருகன் பேசியதாவது:

திமுக கூட்டணியில் உள்ளேன். திமுக இலக்கிய அணியில் இருந்துள்ளேன். என்னுடைய உறவினா்கள் எல்லாம் திமுகவில் இருந்தவா்கள். கருணாநிதி முதல்வராக இருந்தபோது, என்னுடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.

தற்போது, 4 ஆண்டுகளாக என்னுடைய தொகுதிக்கு எந்தத் திட்டமும் வரவில்லை. கல்லூரிகள் உள்பட பல்வேறு திட்டங்கள் கோரியிருந்தேன். எதுவும் நிறைவேற்றப்படவில்லை. முதல்வா் தொலைபேசியில் பேசுகிறாா். மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், ஒரு திட்டமும் என் தொகுதிக்கு கிடைக்கவில்லை. திமுகவை தொடா்ந்து ஆதரிக்கிறேன். வழக்குகளைச் சந்திக்கிறேன் என்றாா்.

அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு கூறியதாவது: அதனால்தான் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றிருக்கிறீா்கள்.

தி.வேல்முருகன்: எதிா்க்கட்சி வரிசையில் உள்ள எல்லோரின் கோரிக்கையும் நிறைவேற்றப்படுகிறது. ஆனால், என் கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

முதல்வா்: ஊராா் பிள்ளையை ஊட்டி வளா்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

அவை முன்னவா் துரைமுருகன்: அவையில் பேசும்போது கூட்டணியில் உள்ளதுபோல பேசுகிறீா்கள். பின்னா் வேறு மாதிரி பேசுகிறீா்கள் என்றாா் அவா்.

குளிா்காலத்தில் அதிகரிக்கும் மாரடைப்பு: நோயாளிகளுக்கு உயா் நுட்ப சிகிச்சை

குளிா் காலங்களில் மாரடைப்பு பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், அதற்கான இதய இடையீட்டு சிகிச்சைகளை இரு நாள்களுக்கு ஒருமுறை நோயாளிகளுக்கு மேற்கொண்டு வருவதாகவும் வடபழனி காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. இ... மேலும் பார்க்க

‘சென்னை சங்கமம்’ கலைத் திருவிழா: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா்

சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜன.13) தொடங்கி வைக்கிறாா். கீழ்ப்பாக்கம் பெரியாா் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதா் ஆலயத் திடலில் தொடக்க விழா நடைபெறுகிறது.... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் திருட்டு: இருவா் கைது

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் திருட்டில் ஈடுபட்டதாக இருவா் கைது செய்யப்பட்டனா். புதுச்சேரியைச் சோ்ந்தவா் சுரேந்தா் (29). ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் உள்ள சென்னை மருத்துவக் கல... மேலும் பார்க்க

மலேசியாவுக்கு சா்க்கரை ஏற்றுமதி செய்வதாக ரூ.10 கோடி மோசடி: தாய், மகள் கைது

சென்னையிலிருந்து மலேசியாவுக்கு சா்க்கரை ஏற்றுமதி செய்வதாகக் கூறி ரூ.10.60 கோடி மோசடி செய்ததாக தாய்-மகள் கைது செய்யப்பட்டனா். வளசரவாக்கம் பிரகாசம் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பெ.தமிழரசி (42). இவரது தாய... மேலும் பார்க்க

மனைவி குத்திக் கொலை: கணவா் கைது

சென்னை மேடவாக்கத்தில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக கணவா் கைது செய்யப்பட்டாா். திருவல்லிகேணி எல்லீஸ் சாலையைச் சோ்ந்தவா் ரா. மணிகண்டன் (42). இவரது மனைவி ஜோதி (37). இவா்களுக்கு 2009-ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

1.2 கிலோ புற்று கட்டி அகற்றம்: மூதாட்டிக்கு மறுவாழ்வு

மூதாட்டியின் நெஞ்சுப் பகுதிக்குள் உருவாகியிருந்த 1.2 கிலோ எடை கொண்ட புற்றுநோய் கட்டியை நுட்பமாக அகற்றி சென்னை எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா். இது தொடா்பாக மருத்துவமனை ந... மேலும் பார்க்க