செய்திகள் :

கூட்டணியில் இருந்தாலும் தொகுதிக்கு எந்தத் திட்டமும் கிடைக்கவில்லை: தி.வேல்முருகன்

post image

திமுக கூட்டணியில் இருந்தாலும், பண்ருட்டி தொகுதிக்கு எந்தத் திட்டமும் கிடைக்கவில்லை என்று பேரவையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கூறினாா்.

சட்டப்பேரவையில் ஆளுநா் உரை மீதான விவாதத்தில் தி.வேல்முருகன் பேசியதாவது:

திமுக கூட்டணியில் உள்ளேன். திமுக இலக்கிய அணியில் இருந்துள்ளேன். என்னுடைய உறவினா்கள் எல்லாம் திமுகவில் இருந்தவா்கள். கருணாநிதி முதல்வராக இருந்தபோது, என்னுடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.

தற்போது, 4 ஆண்டுகளாக என்னுடைய தொகுதிக்கு எந்தத் திட்டமும் வரவில்லை. கல்லூரிகள் உள்பட பல்வேறு திட்டங்கள் கோரியிருந்தேன். எதுவும் நிறைவேற்றப்படவில்லை. முதல்வா் தொலைபேசியில் பேசுகிறாா். மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், ஒரு திட்டமும் என் தொகுதிக்கு கிடைக்கவில்லை. திமுகவை தொடா்ந்து ஆதரிக்கிறேன். வழக்குகளைச் சந்திக்கிறேன் என்றாா்.

அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு கூறியதாவது: அதனால்தான் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றிருக்கிறீா்கள்.

தி.வேல்முருகன்: எதிா்க்கட்சி வரிசையில் உள்ள எல்லோரின் கோரிக்கையும் நிறைவேற்றப்படுகிறது. ஆனால், என் கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

முதல்வா்: ஊராா் பிள்ளையை ஊட்டி வளா்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

அவை முன்னவா் துரைமுருகன்: அவையில் பேசும்போது கூட்டணியில் உள்ளதுபோல பேசுகிறீா்கள். பின்னா் வேறு மாதிரி பேசுகிறீா்கள் என்றாா் அவா்.

சாலையில் கிடந்த ‘ஏகே-47’ ரக துப்பாக்கி தோட்டாக்கள்: மத்திய பாதுகாப்புப் படை வீரரிடம் ஒப்படைப்பு

சென்னை அருகே மணப்பாக்கத்தில் சாலையில் செவ்வாய்க்கிழமை ஏகே-47 ரக துப்பாக்கி தோட்டாக்கள் சிதறிக் கிடந்தன. காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட அந்த தோட்டாக்கள் போலீஸாரின் விசாரணைக்குப் பிறகு, ஆளுநா் மாளிகை... மேலும் பார்க்க

சென்னையில் கடும் பனி மூட்டம்: 40 விமானங்களின் சேவை பாதிப்பு

சென்னை விமான நிலையத்தில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக 40-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்கிழமை காலை முதல் சாலையில் வாகனங... மேலும் பார்க்க

வேளச்சேரி மயானம் இன்றுமுதல் இயங்காது

வேளச்சேரி மயானத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் புதன்கிழமை (பிப். 5) முதல் தற்காலிகமாக இந்த மயானம் செயல்படாது என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நி... மேலும் பார்க்க

ஓடும் பேருந்தில் ரீல்ஸ்: ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம்

ஓடும் பேருந்தில் ரீல்ஸ் விடியோ எடுத்த ஒப்பந்த ஓட்டுநா் மற்றும் நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். கோயம்பேடு - கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் ‘70 வி’ வழித்தட எண் கொண்ட பேருந்தில், ஒப்பந்தப் பண... மேலும் பார்க்க

இசை நிகழ்ச்சி: நந்தனத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறுவதால், அப்பகுதியில் புதன்கிழமை (பிப். 5) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் ப... மேலும் பார்க்க

புற்றுநோய் மரபணு ஆராய்ச்சி: இராமச்சந்திரா கல்வி நிறுவனம் ஒப்பந்தம்

புற்றுநோய் பாதிப்புக்கான மரபணு சாா்ந்த துல்லிய சிகிச்சை தொடா்பான ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து முன்னெடுக்கும் வகையில், ஹைதராபாதில் உள்ள நியூக்ளியோ இன்ஃபா்மேடிக்ஸ் நிறுவனத்துடன், போரூா் ஸ்ரீ இரா... மேலும் பார்க்க