CSK vs LSG: "நம்மால் மீண்டும் போட்டிக்குள் வர முடியும் என அவர்தான் உத்வேகம் கொடு...
`சட்டமன்றக் கட்சித் தலைவர் உதயநிதி' - துணை தலைவர், கொறடா யார்? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த மே 7-ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில், சட்டமன்றத்தில் தி.மு.க-வின் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஒருமனதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சட்டமன்றக் கட்சித் துணைத் தலைவராக கே.என். நேருவும், சட்டமன்றக் கொறடாவாக எ.வ. வேலுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ளது. புதிய பொறுப்புகளை ஏற்றுள்ள நிர்வாகிகளுக்குக் கழகத்தின் மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமான வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.














