செய்திகள் :

சத்தீஸ்கர்: நக்சல்களால் 2 இளைஞர்கள் படுகொலை!

post image

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாநிலத்தில் நக்சல்களினால் 2 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

பிஜப்பூரின் புக்டிசேரு கிராமத்தில் கரம் ராஜு (வயது 32) மற்றும் மாதவி முன்னா (27) ஆகிய இரண்டு இளைஞர்கள் நேற்று (பிப்.3) இரவு அடையாளம் தெரியாத நக்சல்களினால் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவயிடத்துக்கு விரைந்த காவல் துறையினர் இந்த கொலைக்கான காரணம் என்ன கொலையாளிகள் யார் என்பதை கண்டறிய தங்களது விசாரணையைத் துவங்கியுள்ளனர்.

இதையும் படிக்க: குஜராத்: பாஜக எம்.எல்.ஏ. காலமானார்!

முன்னதாக, கடந்த ஜன.26 அன்று பைராம்கார் பகுதியில் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டு அமைப்பைக் குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்த 41 வயது நபர் ஒருவர் நக்சல்களால் கொலை செய்யப்பட்டார்.

கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 68 பொது மக்கள் நக்சல்களினால் கொலை செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இபிஎஸ்ஸின் குரலே, பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல்தான்: முதல்வர் ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமியின் குரலே,பா.ஜ.க.விற்கான டப்பிங்குரல்தான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்ட 5 கொள்ளையர்கள் சுட்டுப்பிடிப்பு!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் வழிப்பறி கும்பலைச் சேர்ந்த 5 கொள்ளையர்கள் காவல் துறையினரால் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர். காசியாபாத்தில் நேற்று (பிப்.13) இரவு வியாபாரியான சதீஷ் சந்த் கா... மேலும் பார்க்க

உலக சாதனைக்கு முயன்ற இந்திய வீரர் பலி!

உலக சாதனைக்கு முயன்ற இந்தியாவைச் சேர்ந்த சைக்கிள் வீரர் சிலி நாட்டில் சாலை விபத்தில் பலியாகியுள்ளார். தென் அமெரிக்க கண்டத்தில் அதிவேகமாக 10,000 கி.மீ. தூரத்தை சைக்கிளில் கடந்து உலக சாதனைப் படைக்க முயன... மேலும் பார்க்க

காங்கோவில் 2வது விமான நிலையத்தைக் கைப்பற்றிய கிளர்ச்சிப்படை?

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மற்றொரு விமான நிலையத்தைக் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டின் கிளர்ச்சிப் படையொன்று தெரிவித்துள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவின் ஆதரவுப்பெற்று காங்கோவினுள் இயங்க... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.அந்நாட்டின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 125 கி.மீ. ஆழத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று (பிப்.14) ஏற்பட்டுள்ளதாக தேசிய நில... மேலும் பார்க்க

துணை முதல்வர் நிகழ்ச்சியில் பறந்து வந்த டிரோன்! 2 பேர் கைது!

மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் நிகழ்ச்சியில் அனுமதியின்றி டிரோனை பறக்கவிட்ட 2 பேர் இன்று (பிப்.14) காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாசிக் மாவட்டத்தின் ஹிவாலி பகுதியி... மேலும் பார்க்க