செய்திகள் :

Sirai: "கதையை எப்படி பிடிக்கணும்னு வெற்றிமாறன் அண்ணன்கிட்டதான் கத்துகிட்டேன்!" - இயக்குநர் தமிழ்

post image

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிறை' திரைப்படம் டிசம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

சிறை படத்தில்...
சிறை படத்தில்...

இயக்குநர் மற்றும் நடிகர் தமிழ் பேசுகையில், "முதலில், படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ்தான் என்னை தயாரிப்பாளர் லலித் சார் சந்திக்க விரும்புறார்னு சொன்னாரு. பிறகு, நானும் அவரை மீட் பண்ணப் போனேன்.

அப்போ நான் கதை சொல்லணும்னு எந்த நோக்கத்திலும் போகல. லலித் சார் என்கிட்ட 'விசாரணை மாதிரி ஒரு படம் பண்ணனும்'னு சொன்னாரு. அவர் நினைச்சிருந்தால் அவருடைய மகனை வேறு மாதிரியான வகையில சினிமாவுல அறிமுகப்படுத்தியிருக்கலாம்.

ஆனா, அவர் கன்டென்ட் உள்ள படத்தை செய்ய விரும்பினார். பிறகு என்கிட்ட இருந்த ஒரு கதையைச் சொன்னேன். உடனடியாக இந்தப் படத்தை பண்ணலாம்னு சொல்லிட்டாரு.

அப்போதுதான் இயக்குநராக சுரேஷ் சார் வந்தாரு. அவர் வெற்றிமாறன் சார்கிட்ட இருந்து வந்தவர்னு உடனே அவரை இயக்குநராக ஓகே செய்திட்டாங்க.

நான் எழுதிய கதையை படமாக எடுத்து என்னை கண்கலங்க வச்சிட்டார் இயக்குநர் சுரேஷ். ஒரு கதையை எப்படி பிடிக்கணும்னு நான் வெற்றிமாறன் அண்ணன்கிட்டதான் கத்துகிட்டேன்.

'விசாரணை' படத்தோட டப்பிங் நடந்துட்டு இருக்கும்போது வெற்றி அண்ணன் என்கிட்ட 'என்னடா என்னப் பண்ணப் போற? எதுவும் கதை வச்சிருக்கியா'னு கேட்டாரு.

Tamizh - Sirai - Vetrimaaran
Tamizh - Sirai - Vetrimaaran

நானும் அப்போ மாஸாக ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் சொன்னேன். அதைக் கேட்டவர் சிரிச்சிட்டு 'உன்னுடைய பலமே போலீஸ்தான். போலீஸ் சார்ந்து இதுவரை யாரும் பேசாத ஒரு கன்டென்ட் பண்ணு'னு சொன்னாரு.

அன்னைக்கு எழுதத் தொடங்கின கதைதான் 'டாணாக்காரன்'. இந்தப் படத்தைப் பார்த்துட்டு நான் என் மனைவிகிட்ட 'நான் இந்தப் படத்தைப் பண்ணியிருந்தால்கூட இந்தளவுக்கு நான் செய்திருப்பேனான்னு தெரில.

நான் நிறைய லாஜிக் பார்ப்பேன். ஆனா, சுரேஷ் ரொம்ப அற்புதமாக பண்ணியிருக்காரு.'னு சொன்னேன்." எனப் பேசினார்.

Sirai: "விஜய், வெற்றிமாறன்கூட ஒரு படமாவது செய்திடணும்னு ஆசைப்பட்டேன்!" - எஸ்.ஏ. சந்திரசேகர்

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிறை' திரைப்படம் டிசம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். சிறை படத்தில்... மேலும் பார்க்க

Sirai: "மதத்தின் பெயரால அரசியல் செய்பவர்களை செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது!" - ஆர். கே. செல்வமணி

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிறை' திரைப்படம் டிசம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். சிறை படத்தில்... மேலும் பார்க்க

Parasakthi: 'ரிலீஸ் தேதி மாற்றம்!'; ஜனநாயகனுக்கு அடுத்த நாள் வெளியாகும் 'பராசக்தி' - வெளியான அப்டேட்

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பராசக்தி' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையம... மேலும் பார்க்க

Sreenivasan: "அந்த உஷ்ணத்தை ஶ்ரீனியின் உடல் உணராது என்பதும் சுட்டது!" - பார்த்திபன் உருக்கம்

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசனின் மறைவு மலையாளத் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவருடைய உடல் நேற்றைய தினம் தகனம் செய்யப்பட்டது. தமிழ் மற்றும் மலையாளத் திரைத்துறையினர் பலரும் நேரில் சென்று அவர... மேலும் பார்க்க

``மனுசனோட எல்லா அழுக்கையும் பேசுறது தான் இந்தக் கதை" - பேச்சி குறும்பட இயக்குநர் அபிலாஷ் செல்வமணி

இளம் இயக்குநர் அபிலாஷ் இயக்கத்தில், விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் வெளியீட்டில் 'பேச்சி' என்ற குறும்படம் யூடியூப்பில் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் இக்குறும்படத்தை பார்த்த நடிகர் சூர்யா "மனதை நெகிழ வைக... மேலும் பார்க்க