செய்திகள் :

சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டவர் 2வது முறையாக தப்பி ஓட்டம்; போலீஸாரின் அலட்சியம்தான் காரணமா?

post image

தூத்துக்குடி மாப்பிளையூரணியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரின் மகன் நிரஞ்சன். கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி விளாத்திகுளம் மீனாட்சிபுரத்தில் அடிதடி பிரச்னை தொடர்பாக  விளாத்திகுளம் காவல் நிலையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நிரஞ்சனைக் கைது செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், கடந்த மார்ச் 5-ந்தேதி இரவு கிளைச் சிறையின் சமையலறைப் பகுதி வழியாக மேலே ஏறி வெளியே குதித்து தப்பி ஓடினார்.

நிரஞ்சன்
நிரஞ்சன்

மறுநாள் 6-ந்தேதி காதலியைச் சந்திப்பதற்காக மீனாட்சிபுரம் காட்டுப்பகுதிக்குச் சென்றிருந்த நிரஞ்சனை போலீஸார் கைது செய்து தூத்துக்குடி மாவட்டச் சிறையான பேரூரணி கிளைச்சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விளாத்திகுளம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், ஜாமினில் வெளிவந்த நிரஞ்சன் சரிவர ஆஜராக இருந்ததால் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்த நிலையில், நிரஞ்சனை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதனை தொடர்ந்து நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து போலீஸார் நிரஞ்சனை கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்க அழைத்துச் சென்றபோது, சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஹோட்டலில் சாப்பிடச் சென்றபோது நிரஞ்சன் தப்பி ஓடியுள்ளார்.

விளாத்திகுளம் காவல் நிலையம்
விளாத்திகுளம் காவல் நிலையம்

ஏற்கனவே ஒருமுறை கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்து தப்பித்து போலீஸார் நிரஞ்சனைக் கைது செய்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக போலீஸாரிடம் இருந்து தப்பி உள்ளார்.

பின்னர், போலீஸாரின் தீவிர தேடலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். காவல்துறையினர் அலட்சியம் காரணமாக இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

அதே நேரத்தில் இரண்டாவது முறையாக கைதி தப்பியோடினாரா? அல்லது தப்ப விட்டார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

திண்டுக்கல்: பால் வேன் மோதியதால் 4 சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள கொல்லப்பட்டி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி பழனிச்சாமி -அஞ்சம்மாள். இவர்கள், கணவாய் மேடு பகுதியில் சாலையோரமாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்கள்.இவர்களின் ... மேலும் பார்க்க

கும்பகோணம்: காதலிக்க மறுத்த பள்ளி ஆசிரியை; பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட கேரள ஜிம் பயிற்சியாளர்

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், மதுர் பகுதியைச் சேர்ந்தவர் சுமன்ராஜ் (36). ஜிம்மில் பயிற்சியாளராக உள்ளார். சுமன்ராஜுக்குத் திருமணம் ஆகி ஹித்தாச்சி என்ற மனைவியும் 7 வயதில் பெண் குழந்தையும், ஒன்பது மா... மேலும் பார்க்க

விவாகரத்து, 7 மாத கர்ப்பம்: கடத்தி மரத்தில் கட்டி தீவைக்கப்பட்ட பஞ்சாப் பெண் சோசியல் மீடியா பிரபலம்

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் மஞ்ஜீத் கவுர்(28). சோசியல் மீடியா பிரபலமான கவுர் கடந்த ஜூலை மாதம் சண்டிகரில் மதுபானக்கடை ஒன்றுக்கு அருகில் தனக்கு தெரிந்த இரண்டு பேரால் காரில் கடத்திச்செல்லப்பட்டார். மொரி... மேலும் பார்க்க

ஆம்பூர்: பச்சிளம் குழந்தை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை; தாய், தந்தையால் அரங்கேறிய கொடூரம்; 4 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மாங்காதோப்பு பாஷா நகர்ப் பகுதியில் வசிக்கும் டீ மாஸ்டர் தொழிலாளி ரஹமத்துல்லா, வயது 38. இவரின் மனைவி ஹவாமா. இவர்களுக்குத் திருமணமாகி 17 ஆண்டுகளாகிறது. ஏற்கெனவே இரு ஆண் ப... மேலும் பார்க்க

வாணியம்பாடி: கிணற்றில் மிதந்த 2 சிறுவர்களின் பிணம்; கிராமத்தையே அலறவிட்ட சம்பவம்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள ஆலங்காயம் பெத்தூர் கிராமத்தில், சுகுணா பிரகாசம் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணறு அமைந்திருக்கிறது. இந்த கிணற்றிலிருந்து நிலத்தின் உரிமையாளர் தண்ணீர்... மேலும் பார்க்க

அரக்கோணம்: கணவரின் மரணம், மீளமுடியாத துயரம்; இரு பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்த தாய்!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகேயுள்ள மங்கம்மாபேட்டையைச் சேர்ந்த அம்மிக்கல் செதுக்கும் தொழிலாளி கோட்டையா, வயது 30. இவரின் மனைவி வள்ளி (23). இவர்களுக்கு 7 வயதில் பரத், 3 வயதில் சந்தோஷ் என்று இரு ... மேலும் பார்க்க