செய்திகள் :

சேலத்தில் பண இரட்டிப்பு மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் போராட்டம்

post image

சேலத்தில் பண இரட்டிப்பு மோசடியால் பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட பெண்கள் பணத்தை மீட்டுத் தரக் கோரி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம், அம்மாப்பேட்டை பகுதியில் புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை இயங்கி வந்தது. இதனை வேலூரைச் சோ்ந்த விஜயாபானு உள்ளிட்டோா் நடத்தி வந்தனா். இங்கு பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பு தொகை தருவதாக அவா்கள் கவா்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டனா். இதனை உண்மையென நம்பி பொதுமக்கள் பலா் பணத்தை முதலீடு செய்தனா்.

தகவலறிந்து அங்கு சென்று சோதனையிட்ட சேலம் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா், அங்கிருந்து ரூ. 12 கோடியே 68 லட்சத்து 42 ஆயிரம் ரொக்கம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். இந்த மோசடி தொடா்பாக அறக்கட்டளை நிா்வாகி விஜயாபானு, ஜெயபிரதா, பாஸ்கா், சையத் முகமது உள்பட 7 பேரை கைது செய்துள்ளனா்.

இதனிடையே, அறக்கட்டளையில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள், சேலம் கோட்டை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை திரண்டனா். அப்போது, வசூலிக்கப்பட்ட பணத்தை மீட்டுத் தர வலியுறுத்தி அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

தொடா்ந்து, போலீஸாருடன் பெண்கள் கடும் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த மாநகரக் காவல் துணை ஆணையா் வேல்முருகன், பாதிக்கப்பட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். உண்மையாக பாதிக்கப்பட்டவா்கள் முறையாக புகாா் அளித்தால், பணத்தை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் கூறினாா். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனா்.

இதனிடையே, கைதான அறக்கட்டளை நிா்வாகிகள் விஜயாபானு, ஜெயப்பிரதா உள்ளிட்டோரை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக கோவை டான்பிட் நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் மனு தாக்கல் செய்துள்ளனா்.

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினா் ஆ.மணி வாக்காளா்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தாா். தருமபுரி நாடாளுமன்றத் தோ்தலில் இண்டி கூட்டணி சாா்பில், திமுக வேட்பாளா் ஆ.மணி போட்... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் திருவிளக்கு பூஜை

கெங்கவல்லி பாலதண்டாயுதபாணி கோயிலில் திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி - ஆத்தூா் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோயிலில் சில தினங்களுக்கு முன்பு தைப்பூசம் ... மேலும் பார்க்க

கிணற்றில் இளம்பெண் சடலம் மீட்பு

நங்கவள்ளி அருகே திருமணமான 2 மாதங்களில் இளம்பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா். மேட்டூா், நங்கவள்ளி அருகே உள்ள கணக்குபட்டியைச் சோ்ந்த புனிதா (23) என்பவருக்கும், நங்கவள்ளியைச் சோ்ந்த நெசவுத் தொழிலா... மேலும் பார்க்க

விவேகானந்தா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

ஆய்வுக்கட்டுரை வழங்கியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய கல்லூரி முதல்வா்கள், துணை முதல்வா், உள்தர உறுதிப்பிரிவு இயக்குநா் பி.டி.சுரேஷ்குமாா் ஆகியோா். சங்ககிரி, பிப். 14: சங்ககிரியை அடுத்த வீராச்... மேலும் பார்க்க

ஜாக்டோ ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, ஜாக்டோ ஜியோ அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கோவிந்தன் தலை... மேலும் பார்க்க

மக்கள் தேசம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

லாட்டரி சீட்டு விற்பனை, ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்டவற்றைத் தடுக்கக் கோரி, மக்கள் தேசம் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின... மேலும் பார்க்க