செய்திகள் :

"சோஃபா செட் இல்ல, லாக்கரே வந்தாலும்கூட தேமுதிக தன்னுடைய..!"- கூட்டணி மாறுவது குறித்து பிரேமலதா

post image

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று (ஆகஸ்ட். 25) கடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்.

கூட்டத்தில் பேசிய அவர், "நமக்கு (தேமுதிக) என்ன அழைப்பு வரவில்லை என்று நினைக்கிறீர்களா? இன்றைய முதல்வர் அவர்களே அழைத்தார்.

ஆனாலும் நாம் ஒரு கொள்கை, ஒரு முடிவை எடுத்துவிட்டால் அந்தக் கொள்கையில் நிச்சயமாக உறுதியாக நிற்போம்.

விஜய் - பிரேமலதா விஜயகாந்த்
விஜய் - பிரேமலதா விஜயகாந்த்

சோஃபா செட் இல்லை, பீரோ இல்லை, லாக்கரே வந்தாலும் கூட தேமுதிக தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து மாறாது.

ஏனென்றால் கொள்கை முக்கியம். ஒரு கூட்டணியை வைத்து ஜெயிப்பார்கலாம், ஜெயித்த பிறகு தன்னுடைய சுயநலத்திற்காக இன்னொரு கட்சிக்கு சென்று விடுவார்களாம்.

அந்த நிலைப்பாடை தேமுதிக எப்போதும் எடுக்காது. கேப்டனுக்காவே வாழ்ந்து என் கண்முன்னாடி நிற்கும் வீரர்களே நீங்கள் தான் நாளைய வரலாறு.

எத்தனையோ எம்எல்ஏக்கள் தேமுதிகவை விட்டு சென்றார்கள். அரசியலில் வெற்றி வரும் தோல்வி வரும் அதையெல்லாம் கண்டு அஞ்சக்கூடிய கட்சி தேமுதிக இல்லை.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

எதற்கும் அஞ்சாமல் நாம் கொண்ட கொள்கையில் தலைவருடைய கனவு, லட்சியத்தை நாம் வென்று எடுத்து நிறைவேற்றுவோம். விருதாச்சலத்துக்கு என்னென்ன வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டதோ அது நிறைவேற்றி தரப்படும்" என்று பேசியிருக்கிறார்.

புதிதாக மின் இணைப்பு பெற, இனி வீட்டுக்கு அதிகாரிகள் வரமாட்டார்களா? - ஆகஸ்ட் 28 முதல் புதிய நடைமுறை!

தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் அனைத்துத் தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதன்படி, ஆன்லைனில் புதிய மின்சார இணைப்புகள் பெறும் அனைவருக்குமே இனி நேர... மேலும் பார்க்க

"இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்களில் ஸ்டாலினும் ஒருவர்..!" - CJP அபிஜித் தீப்கே

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே. டெல்லி ஜந்தர் மந்தரின் போராட்ட வெற்றிக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள பல மாநிலங்களின் பள்ளிகளுக்கு சென்று, அங்குள்ள கட்டமைப்புகளைப் பார்வையிட்டு வர... மேலும் பார்க்க

'அப்படி பேசியிருக்கக் கூடாது..!'- மதிமுக குறித்து பேசிய செங்கோட்டையன்; துரை வைகோ ரியாக்ஷன் என்ன?

மதிமுக குறித்த தவெக அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சு குறித்து அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேசியிருக்கிறார்.கோபிசெட்டிப் பாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன... மேலும் பார்க்க

ஈரானுடன் வணிகம் செய்த 4 இந்திய நிறுவனங்கள்; இப்போது அமெரிக்காவின் ‘தடை’ வலையில்! என்ன நடக்கும்?

ராணுவத் தாக்குதலிலிருந்து பொருளாதாரத் தாக்குதலுக்கு மாறியுள்ளது ஈரான் போர். அமெரிக்க அரசு ஈரானுக்கு எதிராக ‘Operation Economic Outcast’ என்கிற ஆபரேஷனைத் தொடங்கியுள்ளது. இதன்படி, ஈரானுடன் வணிகம் செய்யு... மேலும் பார்க்க

அமெரிக்க வரியால் வணிகங்களுக்கு பாதிப்பு; இதனால், அவற்றுக்கு $7.5 பில்லியன் கனட அரசு உதவி!

கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முதல், கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி ஆகும் சில பொருள்களுக்கு 50 சதவிகித வரியை விதித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். மேலும், “2027-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி மு... மேலும் பார்க்க