செய்திகள் :

அமெரிக்க வரியால் வணிகங்களுக்கு பாதிப்பு; இதனால், அவற்றுக்கு $7.5 பில்லியன் கனட அரசு உதவி!

post image

கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முதல், கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி ஆகும் சில பொருள்களுக்கு 50 சதவிகித வரியை விதித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

மேலும், “2027-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல், கனடாவில் இருந்து இறக்குமதி ஆகும் அனைத்துக் கார்கள், டிரக்குகள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் எஃகு மீதான வரிகள் 50% ஆக உயர்த்தப்படும்” என்றும் அறிவித்திருக்கிறார் ட்ரம்ப்.

கனடாவிற்கு அமெரிக்காதான் ‘டாப் ஏற்றுமதி நாடு’ என்பதால், இந்த அறிவிப்பு கனடாவிற்கு நல்ல அடி.

ட்ரம்ப்
ட்ரம்ப்
இதனால், அமெரிக்காவிற்குப் பதிலடி தருவதற்குக் கனடா சில முடிவுகளை எடுத்துள்ளது. அவற்றைச் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது கனடா அரசு. அவை...

என்ன பிரச்னை?

“அமெரிக்கா - கனடா பேச்சுவார்த்தையின் போது, கனடாவிடமிருந்து அமெரிக்கா அதிகமாக எதிர்பார்த்தது.

இதனால், கனடாவின் தொழிலாளர்கள், வணிகங்கள், முக்கியத் துறைகள் மற்றும் தேசிய நலனைப் பாதிக்கும் ஒரு மோசமான ஒப்பந்தத்தை ஏற்பதை விட, பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தம் செய்யக் கனடா முடிவெடுத்தது.

கனடாவின் பதிலடி

இந்த வர்த்தக மோதலைக் கனடா விரும்பவில்லை. ஆனால், கனடா வணிகங்களுக்கும் சம வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதால் அமெரிக்காவின் வரிக்கு நாம் பதிலடி கொடுத்தாக வேண்டும்.

கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முதல், $27.6 பில்லியன் மதிப்புள்ள கனடியப் பொருள்கள் மீது 50 சதவிகித வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இதை எதிர்த்துக் கனடாவுக்கு ‘டாலருக்கு டாலர்’ என்கிற வகையில் அமெரிக்கப் பொருள்களுக்குக் கனடா புதிய வரிகளை விதிக்கும்.

கனடா
கனடா

வருகிற செப்டம்பர் 8-ம் தேதி முதல், அமெரிக்காவின் பிரிவு 338 மற்றும் பிரிவு 232 வரிகளின் கீழ், குறிப்பிட்டுள்ள பொருள்களுக்கு இணையான அமெரிக்கப் பொருள்கள் மீது கனடா 15 சதவிகிதம், 25 சதவிகிதம், 50 சதவிகிதம் என வரிகளை விதிக்கும்.

இது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் $27.6 பில்லியன் மதிப்புள்ள பொருள்களைப் பாதிக்கும்.

கனட அரசின் உதவி

மேலும், அமெரிக்க வரிகளால் பாதிக்கப்பட்ட கனடியத் தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களை ஆதரிப்பதற்காக, அரசு $7.5 பில்லியன் மதிப்பிலான புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது கனடா அரசு.”

கச்சா எண்ணெய் விலையில் அமெரிக்காவிற்கும், ட்ரம்பிற்கும் சறுக்கல்; ஓமன், ஈரானுக்கு சக்சஸ்?

ஈரான் போர் காரணமாக, கடந்த சில நாள்களாகவே கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாவிற்கு 90 டாலர்களைத் தாண்டி விற்பனையாகிக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில்தான், கடந்த 19-ம் தேதி, ஈரானுக்கு எதிரான ‘பொருளாதார D-Day’-... மேலும் பார்க்க

`பரந்தூர் விமான நிலையத்திற்குப் பதிலாக மீனம்பாக்கத்தில் 5-வது முனையம்'- எம்.பி சச்சிதானந்தம் யோசனை!

திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த பாஸ்போர்ட் அலுவலகம் தற்போது திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான கூட்டம் பாஸ்போர்ட் அலுவலகம் அருகே உள்ள தனியார் திர... மேலும் பார்க்க

`வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு முறையான பேருந்து வசதி இல்லையே..!'- மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

திருச்சி மாவட்டத்தில் மலைக்கோட்டை, முக்கொம்பு, கல்லணை, ஸ்ரீரங்கம் என நீளும் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் வண்ணத்துப்பூச்சி பூங்காவும் ஒன்று .இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக அமைந்துள்ள இந்த வண்ணத்துப்பூ... மேலும் பார்க்க

"செங்கோட்டையன் பேசுறது சரியா..." - ஆளுநரிடம் கொதித்த டி.டி.வி.தினகரன்!

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ரணகளக் காட்சிகளுடன் நடந்து வரும் நிலையில், திடீர் அரசியல் திருப்பமாக தமிழ்நாடு ஆளுநர் அர்லேக்கரைச் சந்தித்திருக்கிறார் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். கிட்டத்தட்ட ... மேலும் பார்க்க

'35 நிமிட விவாதம்; கப்சிப் உதயநிதி; பரந்தூரை தாங்கும் தங்கம் தென்னரசு! - பின்னணி என்ன?

சட்டமன்றத்தில் நடந்து வரும் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து விரிவாக பேசப்பட்டது. 35 நிமிடங்களுக்கு பரந்தூர் விவகாரம் பற்றி மட்டும் விவாதிக்கப்பட்டது. ஆனால், அந... மேலும் பார்க்க

'அதானிக்காக பரந்தூரை காலி செய்ய வேண்டாமென ஸ்டாலினிடம் வலியுறுத்தினோம்... ஆனால்!'- அமைச்சர் வன்னிஅரசு

நேற்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் '110' விதியின் கீழ் பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில் பரந்தூரை சேர்ந்த விவசாயிகள் இன்று முதல்வர் விஜய்யை சந்தித்து... மேலும் பார்க்க