செய்திகள் :

'அதானிக்காக பரந்தூரை காலி செய்ய வேண்டாமென ஸ்டாலினிடம் வலியுறுத்தினோம்... ஆனால்!'- அமைச்சர் வன்னிஅரசு

post image

நேற்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் '110' விதியின் கீழ் பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில் பரந்தூரை சேர்ந்த விவசாயிகள் இன்று முதல்வர் விஜய்யை சந்தித்து நன்றி கூறியிருந்தனர். முதல்வரை சந்தித்துவிட்டு அமைச்சர் வன்னிஅரசுவையும் சந்தித்து பேசியிருந்தனர். விவசாயிகளுடனான சந்திப்பு முடிந்ததற்கு பிறகு அமைச்சரிடம் பரந்தூர் விவகாரம் குறித்து பேசினோம்.

வன்னி அரசு
வன்னி அரசு

அமைச்சர் வன்னி அரசு பேசியதாவது, ``இது பெரும் மகிழ்ச்சியான நாள். நான்காண்டுகளாக பரந்தூர் மக்கள் தங்களின் நிலத்தை விட்டுக் கொடுக்கமாட்டோம் என போராடிக் கொண்டிருந்தனர். அவர்களின் போராட்டம் வென்றிருக்கிறது. நான்காண்டுகளாக அந்த மக்கள் பெருந்துயருக்கும் இன்னலுக்கும் ஆளாகியிருந்தனர்.

பரந்தூருக்குள் யாரும் எளிதில் நுழைந்துவிட முடியாது. சொந்த ஊருக்குள் நுழைய அந்த மக்களிடம் காவல்துறை ஆதார் கார்டு கேட்டது. அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க செல்கையில் எங்களையே விடமாட்டார்கள். நாங்களே டூவிலரில்தான் செல்வோம். வளர்ச்சி என்ற பெயரில் மக்களை விரட்டியடிப்பதுதான் வளர்ச்சியா? நம்முடைய மக்களை சொந்த ஊரிலேயே அகதி ஆக்கிவிட்டு, வெளிமாநிலத்துக்காரர் யாருக்கோ விமான நிலையத்தை கொடுப்பது தரகு வேலைதானே?

வன்னி அரசு
வன்னி அரசு

இதை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடமே கூறினோம். அதானிக்காக நம் மக்களை ஏன் விரட்ட வேண்டும்? அவருக்காக கால்வாய், ஏரிகள் என நீர் நிலைகள் நிறைந்த பரந்தூரை ஏன் காலி செய்ய வேண்டும்? எனக் கேட்டோம். அவர்களுடன் கூட்டணியில் இருந்த போதிலும் எங்களுக்கு மக்களின் நலனே முக்கியமாகப்பட்டது. பரந்தூரில் விமானம் நிலையம் இல்லாமல் போனால் தமிழ்நாடு வளர்ச்சியே பெறாது என்பது பாஜகவின் நரேட்டிவ். ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்கள்தான் இப்படி பேசிக் கொண்டிருக்கின்றனர். தேசப்பற்று, வளர்ச்சி என்பதற்கு எதிராக பேசினால் நக்சல் என முத்திரை குத்துகிறார்கள். திமுகவும் முன்பிருந்தே இந்தத் திட்டத்தில் உறுதியாக இருந்தது. அவர்கள் பிடிவாதமாக இருந்தார்கள். ஆனால், இப்போதைய முதல்வர் மக்களின் எண்ணங்களை உணர்ந்து சரியான முடிவை எடுத்திருக்கிறார்' என்றார்.

``உடனடியாக அனைத்து வாக்குறுதிகளையும் ஏன் நிறைவேற்றவில்லை எனக் கேட்க முடியாது" - விசிக திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் மற்றும் தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்திருக்கிற... மேலும் பார்க்க

வர்த்தக விரிசலில் அமெரிக்கா, கனடா: இதில் யாருக்கு என்ன பிரச்னை? இது சரியாக வாய்ப்புகள் உண்டா?

"கனடா ஒரு மாநிலமாக இல்லாதபோதிலும், ஒரு அமெரிக்க மாநிலத்திற்கான அனைத்துப் பலன்களையும் பெற விரும்புகிறது!!! அதுமட்டுமன்றி நமது சிறந்த விவசாயிகளின் மீது பல ஆண்டுகளாக அநியாயமான முறையில் அதிகளவிலான வரிகளை ... மேலும் பார்க்க

அமைச்சர் மன்னிப்பு: ``இனி இதுபோல நடக்கக் கூடாது" - மதுரையில் எம்.பி சு.வெங்கடேசன் பேட்டி!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காத்திருப்போர் கூடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.26 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டது. அந்தக் கட்டிடத்தின் திறப்புவிழா இன்று நடைபெற்றது. இந்த... மேலும் பார்க்க

புதுச்சேரி: ``எனக்கு எதிராக பெரும் சதி நடக்கிறது!” - சட்டப்பேரவையில் உள்துறை அமைச்சர் பகீர்

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று காலை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அரியாங்குப்பம் தொகுதியின் என்.ஆர்.கா... மேலும் பார்க்க

சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: ``நிரூபணமான போலி எண்கவுண்டர்; CBI விசாரணை தேவை" - நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக இரு மாநிலங்களுக்கிடையேயும் அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் த... மேலும் பார்க்க

Tvk: அனைத்து மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம்; ஆனால் அனைவருக்கும் விலையில்லா சிலிண்டர் இல்லை!

நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்த முக்கியத் திட்டங்கள் – வெற்றிப் பயணத் திட்டம் மற்றும் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் சிலிண்டர்கள் திட்டம். இந... மேலும் பார்க்க