செய்திகள் :

ஆவடி: திருமணம் மீறிய நட்பு; பூட்டிய வீட்டுக்குள் பெண் கொலை - முதியவர் சிக்கிய பின்னணி

post image

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள கர்லபாக்கம், யாதவர் தெருவைச் சேர்ந்தவர் லதா (45). இவர் கர்லபாக்கம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் இவர் சில நாள்களாக வேலைக்குச் செல்லவில்லை. மேலும் இவரின் வீடும் பூட்டியே இருந்தது. இந்தநிலையில் இவரின் வீட்டிலிருந்து 22-ம் தேதி தூர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கத்திக்குத்துக் காயங்களுடன் லதா, உயிரிழந்து கிடந்தார். அவரின் சடலமும் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதையடுத்த லதாவின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் லதாவை கத்தியால் குத்தியும் அவரின் தலையை சுத்தியலால் அடித்தும் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

 கொலை
கொலை

இதையடுத்து லதாவைக் கொலை செய்தது யார் என்று முத்தாபுதுப்பேட்டை போலீஸார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில்,அதே பகுதியைச் சேர்ந்த முதியவர் முனிவேல் என்பவர் அடிக்கடி லதாவின் வீட்டுக்குச் செல்லும் தகவல் தெரியவந்தது. அதனால் முனிவேலிடம் போலீஸார் விசாரித்தபோது பால் வியாபாரம் செய்து வரும் நான், லதாவின் வீட்டுக்கு பால் கொடுக்க செல்வேன் என பதிலளித்தார். இந்தச் சமயத்தில்தான் லதாவுக்கும் முதியவர் முனிவேலுக்கும் உள்ள பழக்கம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரியவந்தது. அதனால் மீண்டும் முனிவேலிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

இதுகுறித்து முத்தாபுதுப்பேட்டை போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட லதாவும் முதியவர் முனிவேலும் திருமணம் மீறிய நட்பில் இருந்து வந்திருக்கிறார்கள். இந்தச் சமயத்தில் லதா, முனிவேலைத் தவிர இன்னும் சிலருடன் பழகி வந்திருக்கிறார். அதனால் லதாவை முனிவேல் கண்டித்திருக்கிறார். 20-ம் தேதி வேலை முடிந்து வீட்டுக்கு வந்த லதாவிடம் முனிவேல், இனிமேல் நீ யாருடனும் பேசக் கூடாது எனக் கண்டித்ததாகத் தெரிகிறது. அப்போது லதா, நான் யாருடன் பேச வேண்டும், யாருடன் பேசக் கூடாது என்பதில் நீங்கள் தலையீடாதீர்கள், அதோடு உங்களுக்கு வயதாகி விட்டது என்று பேசியதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட தகராறில்தான் முதியவர் முனிவேல், சுத்தியால் லதாவின் தலையில் அடித்து கொலை செய்ததாக எங்களிடம் தெரிவித்தார். அதன்அடிப்படையில் முனிவேலைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம். வீட்டிலிருந்து ரத்தக்கறை படித்த சுத்தியல், கத்தி ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம்'' என்றனர்.

காஞ்சிபுரம்: சிசிடிவி-யில் ஸ்பிரே பெயின்ட்; ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து லட்சக்கணக்கில் பணம் கொள்ளை

காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அருகே உள்ள புதுப்பேர் பகுதியில் தனியார் ஏ.டி.எம் மையம் உள்ளது. இங்கு அதிகாலை நேரத்தில் நுழைந்த ஒரு கும்பல், கேஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து லட்சக்கணக்க... மேலும் பார்க்க

திருவள்ளூர்: ஜாமீனில் வந்தவர் வெட்டிக் கொலை - பட்டப்பகலில் நடந்த கொடூரம்!

திருவள்ளூர் அருகே சிட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி என்கிற ரூபன் (33). இவர், குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்குச் சென்றவர். தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தார். அதனால் வெங்கல் காவல் நில... மேலும் பார்க்க

நெல்லை: சொகுசு காரில் கஞ்சா கடத்தி வந்த தூத்துக்குடி சிறை வார்டன்; சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், விட்டிலாபுரத்தைச் சேர்ந்தவர் தமிழரசன். நெல்லை சிறையில் வார்டனாகப் பணிபுரிந்தார். கஞ்சா வழக்குகளில் சிக்கிய கைதிகளுடன் அவர் நெருக்கமாகப் பழகி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்... மேலும் பார்க்க

`போலீஸாக ஆசைப்பட்ட எனக்கு யூனிபார்ம் வேல்யூ தெரியும்; ஒருவித கோபத்தில்.!'- அன்று போலீஸை அடித்த ஆகாஷ்

தஞ்சாவூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ஃப்ளக்ஸ் மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டது. இதில் விசிக-வினர் வைத்த ஃப்ளக்ஸ் அகற்றப்பட்டதால் அக்கட்சியினர் மாநகராட்சி அலுவலகம் எதிரே திடீர் சாலை மறியல் போராட்டம் ந... மேலும் பார்க்க

கடலூர்: `அண்ணிக்கு என்னைத்தான் பிடிக்கும்!’ - அண்ணனை `ஸ்கெட்ச்’ போட்டு முடித்த உடன்பிறவா தம்பி

கடலூர் மாவட்டம், ஒரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா கட்டுமானப் பணிகள் செய்யும் கூலித் தொழிலாளி. இவரும், பட்டாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அஸ்வினிதா என்பவரும் ஒருவரையொருவர் காதலித்து, கடந்த 2016-ம... மேலும் பார்க்க

சென்னை: காதல் விவகாரம்; இளைஞர் கொலை - த.வெ.க ஆதரவாளர், அவரின் குடும்பத்தினர் கைது!

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே உள்ள தையூர் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரின் மகன் பிரவீன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த த.வெ.க ஆதரவாளர் ஏழுமலை என்பவரின் மகளை சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் க... மேலும் பார்க்க