செய்திகள் :

கச்சா எண்ணெய் விலையில் அமெரிக்காவிற்கும், ட்ரம்பிற்கும் சறுக்கல்; ஓமன், ஈரானுக்கு சக்சஸ்?

post image

ஈரான் போர் காரணமாக, கடந்த சில நாள்களாகவே கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாவிற்கு 90 டாலர்களைத் தாண்டி விற்பனையாகிக் கொண்டிருந்தது.

இந்த நேரத்தில்தான், கடந்த 19-ம் தேதி, ஈரானுக்கு எதிரான ‘பொருளாதார D-Day’-ஐ அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் ஒவ்வொரு முன்னெடுப்பையும் எடுக்கும்போதும், கச்சா எண்ணெய் விலை உயரும்.

ஆனால், ட்ரம்பின் லேட்டஸ்ட் அறிவிப்பிற்குக் கச்சா எண்ணெயின் விலை உயரவில்லை.

ட்ரம்ப்
ட்ரம்ப்

கச்சா எண்ணெய் விலை குறைவு

ட்ரம்பின் பொருளாதாரத் தடை அறிவிப்பின் போது, 91 டாலருக்கு மேல் இருந்த பிரண்ட் கச்சா எண்ணெய், தற்போது 86 டாலர் என்கிற அளவில் வர்த்தகமாகி வருகிறது.

WTI கச்சா எண்ணெய் தற்போது 80 டாலர் என்கிற அளவில் வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்காவின் மிகப்பெரிய அறிவிப்பிற்குப் பின்னும், கச்சா எண்ணெய் விலை உயரவில்லை என்பதைச் சறுக்கலாகக் காணலாம்.

எந்த வகையில் சறுக்கலாக பார்க்கப்படுகிறது?

ஹார்முஸ் நீர்ச்சந்தியின் கட்டுப்பாடு இன்னும் ஈரானின் பக்கமே இருக்கிறது. அமெரிக்கா தங்களிடம் ஹார்முஸ் நீர்ச்சந்தியின் கட்டுப்பாடு வந்துவிட்டது என்று சொன்னாலும், அனைத்து நிகழ்வுகளைப் பார்க்கும்போது உண்மை தெளிவாகிறது.

ஹார்முஸ் நீர்ச்சந்தி ஒரு இயற்கையான நீர்ச்சந்தி. அதனால், அது உலகத்தின் பொதுச்சொத்து. ஆனால், ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, ஈரான் அதை முடக்கி சொந்தம் கொண்டாடுகிறது.

இந்த நீர்ச்சந்தி ஈரான் மற்றும் ஓமனின் எல்லையில் அமைந்திருக்கிறது. இதனால், இரு நாடுகளும் ஹார்முஸ் நீர்ச்சந்தி போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்தக் கட்டுப்பாட்டிற்கான வரைவும் தயாராகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஹார்முஸ் நீர்ச்சந்தி
ஹார்முஸ் நீர்ச்சந்தி

இது அறிவிக்கப்பட்டால், ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியே போக்குவரத்து எளிதாகும் என்ற நம்பிக்கையில்தான் கச்சா எண்ணெய் விலை உயரவில்லை.

ஹார்முஸ் எங்களிடம் இருக்கிறது... ஈரானுடன் ஓமன் பேச்சுவார்த்தை நடத்தினால், ஓமன் அவ்வளவுதான் என்று ட்ரம்ப் எச்சரித்து வந்த நிலையில், ஹார்முஸ் நீர்ச்சந்தி குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதே அமெரிக்காவிற்குப் பெரிய சறுக்கல்தான்.

`பரந்தூர் விமான நிலையத்திற்குப் பதிலாக மீனம்பாக்கத்தில் 5-வது முனையம்'- எம்.பி சச்சிதானந்தம் யோசனை!

திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த பாஸ்போர்ட் அலுவலகம் தற்போது திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான கூட்டம் பாஸ்போர்ட் அலுவலகம் அருகே உள்ள தனியார் திர... மேலும் பார்க்க

`வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு முறையான பேருந்து வசதி இல்லையே..!'- மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

திருச்சி மாவட்டத்தில் மலைக்கோட்டை, முக்கொம்பு, கல்லணை, ஸ்ரீரங்கம் என நீளும் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் வண்ணத்துப்பூச்சி பூங்காவும் ஒன்று .இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக அமைந்துள்ள இந்த வண்ணத்துப்பூ... மேலும் பார்க்க

"செங்கோட்டையன் பேசுறது சரியா..." - ஆளுநரிடம் கொதித்த டி.டி.வி.தினகரன்!

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ரணகளக் காட்சிகளுடன் நடந்து வரும் நிலையில், திடீர் அரசியல் திருப்பமாக தமிழ்நாடு ஆளுநர் அர்லேக்கரைச் சந்தித்திருக்கிறார் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். கிட்டத்தட்ட ... மேலும் பார்க்க

'35 நிமிட விவாதம்; கப்சிப் உதயநிதி; பரந்தூரை தாங்கும் தங்கம் தென்னரசு! - பின்னணி என்ன?

சட்டமன்றத்தில் நடந்து வரும் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து விரிவாக பேசப்பட்டது. 35 நிமிடங்களுக்கு பரந்தூர் விவகாரம் பற்றி மட்டும் விவாதிக்கப்பட்டது. ஆனால், அந... மேலும் பார்க்க

'அதானிக்காக பரந்தூரை காலி செய்ய வேண்டாமென ஸ்டாலினிடம் வலியுறுத்தினோம்... ஆனால்!'- அமைச்சர் வன்னிஅரசு

நேற்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் '110' விதியின் கீழ் பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில் பரந்தூரை சேர்ந்த விவசாயிகள் இன்று முதல்வர் விஜய்யை சந்தித்து... மேலும் பார்க்க

``உடனடியாக அனைத்து வாக்குறுதிகளையும் ஏன் நிறைவேற்றவில்லை எனக் கேட்க முடியாது" - விசிக திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் மற்றும் தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்திருக்கிற... மேலும் பார்க்க