செய்திகள் :

தமிழர்கள் மீது நடத்தப்பட்டது போலி என்கவுண்டர்தான் - அதிர்ச்சி அளிக்கும் உடற்கூறாய்வு அறிக்கை!

post image

"மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது போலி என்கவுண்டர்தான்" என்பதை உடற்கூறாய்வு அறிக்கை தெரிவிப்பதாக, கர்நாடக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்

கர்நாடகா மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனுர் தாலுகாவில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகிறார்கள். வனப்பகுதியில் மேயச்சென்ற மாடுகள் காணாமல் போனதால் தேடிச்சென்ற அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், டேவிட் குமார், மகிமைதாஸ் ஆகியோர் மீது வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் காயத்தோடு மகிமைதாஸ் தப்பி ஓடிவிட மற்ற மூவரும் உயிரிழந்தார்கள்.

இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மான் வேட்டையாட வந்தவர்களுடன் நடந்த மோதலில், தற்காப்புக்காக தூரத்திலிருந்து சுட்டதாக வனத்துறையினர் கூறினர்.

உடற்கூறாய்வு அறிக்கை நகல்

"இது மோசமான சம்பவம், அப்பாவிகளை வனத்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்" என்று, அங்கு வசிக்கும் மக்களும், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்கள் உள்ளிட்ட கன்னட அமைப்பினரும் கர்நாடக அரசுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பினார்கள்.

இந்த நிலையில் மைசூர் அரசு மருத்துவமனையில் கடந்த 16 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வு பரிசோதனை அறிக்கையிலுள்ள தகவல்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், கொல்லப்பட்ட மூன்று பேரும் 10 அடிக்கும் குறைவான தூரத்திலிருந்தே சுடப்பட்டுள்ளனர் என்றும், ஜான்ரோஸ் பீட்டரின் இடது காது பகுதியிலிருந்து நெஞ்சுப்பகுதி வரை 25 செண்டி மீட்டர் நீளத்திற்கு ஆழமான கடுமையான காயம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், மற்ற இருவரின் நெஞ்சு, தொடைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காப்புக்காக தூரத்திலிருந்து சுட்டதாக வனத்துறையினர் கூறி வந்த நிலையில், உடற்கூறாய்வு அறிக்கை அதற்கு மாறாக உள்ளது.

இந்த தகவல் கொல்லப்பட்டவர்களின் ஊர் மக்களையும், கர்நாடக மாநில விவசாயிகளையும், எதிர்க்கட்சிகளையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

மூன்று தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு

"இது அப்பட்டமான போலி என்கவுண்டர், இந்த வழக்கை கர்நாடக போலீஸ் விசாரித்தால் உண்மை வெளிவராது, சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்" என்று கர்நாடக மாநில பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருவது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

திருப்பத்தூர்: பலூன் ஊதும்போது தொண்டையில் சிக்கி விபரீதம்; 6 வயது சிறுவன் பலியான துயரம்!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகேயுள்ள பச்சூர் கிராமத்தில் வசிக்கும் ஜவுளி வியாபாரம் செய்யும் தம்பதி குமார் - சத்யா. இவர்களுக்கு 6 வயதில் சோம்நாத், சேஸ்நாத் என்று இரட்டையர் உட்பட மூன்று மகன்க... மேலும் பார்க்க

ஆவடி: திருமணம் மீறிய நட்பு; பூட்டிய வீட்டுக்குள் பெண் கொலை - முதியவர் சிக்கிய பின்னணி

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள கர்லபாக்கம், யாதவர் தெருவைச் சேர்ந்தவர் லதா (45). இவர் கர்லபாக்கம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் இவர் சில நாள்களாக வேலைக்குச் செல... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: சிசிடிவி-யில் ஸ்பிரே பெயின்ட்; ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து லட்சக்கணக்கில் பணம் கொள்ளை

காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அருகே உள்ள புதுப்பேர் பகுதியில் தனியார் ஏ.டி.எம் மையம் உள்ளது. இங்கு அதிகாலை நேரத்தில் நுழைந்த ஒரு கும்பல், கேஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து லட்சக்கணக்க... மேலும் பார்க்க

திருவள்ளூர்: ஜாமீனில் வந்தவர் வெட்டிக் கொலை - பட்டப்பகலில் நடந்த கொடூரம்!

திருவள்ளூர் அருகே சிட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி என்கிற ரூபன் (33). இவர், குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்குச் சென்றவர். தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தார். அதனால் வெங்கல் காவல் நில... மேலும் பார்க்க

நெல்லை: சொகுசு காரில் கஞ்சா கடத்தி வந்த தூத்துக்குடி சிறை வார்டன்; சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், விட்டிலாபுரத்தைச் சேர்ந்தவர் தமிழரசன். நெல்லை சிறையில் வார்டனாகப் பணிபுரிந்தார். கஞ்சா வழக்குகளில் சிக்கிய கைதிகளுடன் அவர் நெருக்கமாகப் பழகி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்... மேலும் பார்க்க

`போலீஸாக ஆசைப்பட்ட எனக்கு யூனிபார்ம் வேல்யூ தெரியும்; ஒருவித கோபத்தில்.!'- அன்று போலீஸை அடித்த ஆகாஷ்

தஞ்சாவூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ஃப்ளக்ஸ் மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டது. இதில் விசிக-வினர் வைத்த ஃப்ளக்ஸ் அகற்றப்பட்டதால் அக்கட்சியினர் மாநகராட்சி அலுவலகம் எதிரே திடீர் சாலை மறியல் போராட்டம் ந... மேலும் பார்க்க