Sreekumar: "ட்ரோல்ஸ் விஷயங்களுக்கு நான் என் ஹஸ்பண்ட்கிட்ட சொல்றது..." - ஷமிதா ஷே...
``சோனம் சார் உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்; தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை..!" - CJP நிறுவனர்
காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தன் சமூக ஊடகப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``இன்று சோனம் சாரின் உண்ணாவிரதப் போராட்டத்தின் 25-வது நாள். 25 நாள்கள் உணவின்றி இருப்பது அவரது உயிருக்கு மிகப்பெரிய ஆபத்தாகும். சோனம் சாருக்கு எதுவும் ஆகக் கூடாது என்று நான் விரும்புகிறேன். எனவே, சோனம் சார் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம். தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை நமது போராட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம் என்றும், நாம் பின்வாங்க மாட்டோம் என்றும் நான் உறுதி அளிக்கிறேன்.

இத்துடன் நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், நமது இந்தப் போராட்டம் இதேபோல் அமைதியான முறையில் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும். எனவே, நமது ஆதரவாளர்கள் அனைவருக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நீங்களும் இதேபோல் அமைதியான முறையில் உங்களது போராட்டத்தைத் தொடருங்கள். நமது போராட்டத்திற்கோ அல்லது நமது நாட்டிற்கோ களங்கம் விளைவிக்கும் வகையிலான எந்தவொரு தவறான செயலிலும் நாம் ஈடுபட மாட்டோம். நமது போராட்டம் அமைதியான வழியில் தொடர்ந்து நடைபெறும்.
தவறான செயல்களில் ஈடுபடுபவர்களும், தவறான முழக்கங்களை எழுப்புபவர்களும் ஒருபோதும் நமது போராட்டத்தின் அங்கமாக இருந்ததில்லை, இனி இருக்கவும் முடியாது. நமது போராட்டம் மகாத்மா காந்தியின் வழியிலும், டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கரின் வழியிலும் அமைதியாகத் தொடர்ந்து நடைபெறும். எனவே, சோனம் சாரிடம் நான் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்வது என்னவென்றால், தயவுசெய்து உங்களது உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள். தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை நமது போராட்டம் தொடர்ந்து நடைபெறும். நன்றி." எனக் குறிப்பிட்டிருக்கிறார்














