செய்திகள் :

`1000 ஊசிகள் போட்டுக்கொண்டேன்..!' - செயற்கை முறையில் குழந்தை பெற்ற வேதனையைப் பகிர்ந்த பாலிவுட் நடிகை

post image

பாலிவுட் நடிகை தேஜஸ்வினி கோலாபுரே, நடிகர் பங்கஜ் சரஸ்வத் என்பவரை 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு 2015ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிறந்தது.

இக்குழந்தை பெற்றுக்கொண்ட அனுபவம் குறித்து ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டபோது தேஜஸ்வினி பகிர்ந்து கொண்டார். தேஜஸ்வினி கோலாபுரே கூறுகையில், "நான் ஐந்து முறை IVF சிகிச்சை செய்துகொண்டேன். அதைப்பற்றி நான் மிகவும் வெளிப்படையாகப் பேசுவேன். அதைச் செய்யும்போது நான் மிகவும் கஷ்டப்பட்டேன். IVF என்பது மிகவும் கடினமான ஒரு செயல்முறை. முதல், இரண்டாவது கடினமாக இருக்கும். மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது முறை சரியாகிவிடும்.

மருத்துவமனைக்குச் சென்று அந்த ஊசிகளைப் போட்டுக்கொள்வதற்கே நீங்கள் மனதளவில் மிகவும் வலிமையாக இருக்க வேண்டும்.

இது மிகவும் வேதனையான ஒரு செயல்முறை. நான் என் வாழ்க்கையின் பிற்பகுதியில் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தேன். என் அறிவுரை என்னவென்றால், தயவுசெய்து 35 வயதுக்கு முன் குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள். நான் தாமதமாக குழந்தை பெற்றுக்கொண்டது நிச்சயமாக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் என்னைப் பாதித்தது. நான் அப்போது இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் அதிக வித்தியாசங்கள் இருக்கின்றன. மனதளவில் நான் மிகவும் வலிமையானவள்.

உடல்ரீதியாக, 1,000-க்கும் அதிகமான ஊசிகள் எடுத்துக்கொண்டேன். இதனால் உடம்பு மாறிவிட்டது. உங்கள் கர்ப்பம் பாசிட்டிவாக இருந்தால், அவர்கள் நிறுத்துகிறார்கள். நான் ஐ.வி.எஃப் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள 5 முறை முயன்றேன். இதில் இரண்டு முறை கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டது. 5வது முறையாகத்தான் எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது'' என்றார்.

நடிகர் சக்தி கபூர் மனைவி ஷிவாங்கி கோலாபுரே மற்றும் பழம்பெரும் நடிகை நடிகை பத்மினி கோலாபுரே ஆகியோரின் தங்கையான தேஜஸ்வினி, பாலிவுட் நட்சத்திரங்கள் ஷ்ரத்தா கபூர் மற்றும் சித்தாந்த் கபூர் ஆகியோரின் அத்தை ஆவார். 2003ம் ஆண்டு பாலிவுட்டில் தேஜஸ்வினி அறிமுகமானார்.

டெல்லி மாணாவர்கள் போராட்டம்: "இந்தியாவின் எதிர்காலத்திற்காக வாங்சுக் போராடுகிறார்" - பிரீத்தி ஜிந்தா

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர... மேலும் பார்க்க

டெல்லி மாணவர் போராட்டம்: "தடியடி தேவையில்லை; அரவணைக்கும் கைகள்தாம் தேவை" - நடிகர் சோனு சூட்

நீட் தேர்வு முறைகேடு, கல்வியில் சீர்திருத்தம் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா உட்பட பல்வேறு அம்சங்களை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போ... மேலும் பார்க்க

வயதான தோற்றத்தில், சோர்வாக சல்மான் கான்: `அவருக்கு என்ன ஆச்சு?' - இணையத்தில் ரசிகர்கள் வேதனை

பாலிவுட் நடிகர் சல்மான் கான் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார். தற்போது இரண்டு படங்களில் நடித்து வரும் சல்மான் கான் மும்பையில் நடந்த அரசு விழா ஒன்றில் கலந்து கொண்டார். குடிசை புனரமைப்ப... மேலும் பார்க்க

Ramayana: "சீதை கதாபாத்திரத்தில் நடிக்க நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்!" - சாய் பல்லவி

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படத்தின் பிரத்தியேக டிரெய்லர் திரையிடல் நிகழ்வு நேற்றைய தினம் டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில்... மேலும் பார்க்க

72nd National Awards: 'பாஜக பிரசார படமாக இருந்தால் தேசிய விருது வழங்கப்படுமா?' - வலுக்கும் கண்டனம்!

72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வருடமும் பாஜகவுக்கு ஆதரவான அரசியல் பேசும் படத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது.கடந்த 2024ஆம் ஆண்டு இயக்குநர் ஆதித்யா சுஹாஸ் ஜம்பால... மேலும் பார்க்க

ஆமீர் கானின் திருமணத்திற்கு எதிர்ப்பு; லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் கொலை மிரட்டல்; பின்னணி என்ன?

சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தன்னுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆண்டாகச் சேர்ந்து வாழ்ந்து வந்த கௌரி ஸ்ப்ராட் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் கெளரி முஸ்லிம் மதம் கிடையா... மேலும் பார்க்க