சாத்தான்குளம் வழக்கு: 3 மணிநேரம் விசாரணை செய்த நீதிபதி- குற்றவாளிகள் சொன்னது என்...
டிகிரி படிச்சிருக்கீங்களா; தமிழ் தெரியுமா? வங்கியில் உள்ளூர் அதிகாரி வேலை - ரூ.86,000 வரை சம்பளம்
பஞ்சாப் & சிண்ட் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
உள்ளூர் வங்கி அதிகாரி. இது ஒரு ஒப்பந்த பணி ஆகும்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 145; தமிழ்நாடு - 65
குறிப்பு: இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவருக்கு அந்தந்த மாநில மொழியை நன்கு பேச, படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 20 - 30 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ரூ.48,480 - 85,920
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்.
படிப்பு முடித்த பின், ஏதாவது ஒரு வங்கியில் 18 மாதங்கள் அதிகாரியாகப் பணி பார்த்திருக்கும் அனுபவம் வேண்டும்.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
எழுத்துத் தேர்வு, ஸ்கிரீனிங், நேர்காணல், மெரிட் லிஸ்ட், மொழி திறன் தேர்வு, இறுதி தேர்வு.
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே?
சென்னை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், மதுரை.
விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsreg.ibps.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 20, 2026
மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!


















