செய்திகள் :

”தஞ்சாவூர் தொகுதியை கூட்டணிக்குக் கொடுக்கலாமா?” - பல்ஸ் பார்த்த ஸ்டாலின்; பதறிய நிர்வாகிகள்

post image

திமுக சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு 34 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். நேற்று திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது.

இதேபோல் தஞ்சாவூர் தொகுதிக்கும் நேர்காணல் நடந்தது. அப்போது தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். தொகுதியில் தேமுதிக-விற்கு எவ்வளவு வாக்குகள் இருக்கும், கடந்த தேர்தல்களில் எத்தனை வாக்குகள் வாங்கினர், இம்முறை அவர்கள் நம்முடன் இருக்கிறார்கள் கூடுதல் பலமா என்றெல்லாம் கேட்டதாகச் சொல்கிறார்கள்.

தஞ்சாவூர் தொகுதிக்கு நேர்காணல் நடத்தும் ஸ்டாலின்
தஞ்சாவூர் தொகுதிக்கு நேர்காணல் நடத்தும் ஸ்டாலின்

இதைத்தொடர்ந்து தொகுதியை கூட்டணிக்குக் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று ஸ்டாலின் கேட்டுள்ளார். இதனால் நேர்காணலில் கலந்து கொண்டவர்கள் பதறியதுடன் தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கப்படுமா எனக் கலக்கத்திலும் உள்ளனர்.

இது குறித்து உள்விபரங்கள் அறிந்த சிலரிடம் பேசினோம், ''சிட்டிங் எம்.எல்.ஏ டி.கே.ஜி. நீலமேஎகம், சண்.இராமநாதன், துரை.சுதாகர், டாக்டர் அஞ்சுகம் பூபதி, எ.ஜி.அண்ணா, கரந்தை உதயநிதி, செந்தமிழ்செல்வன், எஸ்.எஸ்.கருணாவதி, து.செல்வம், மணிமாறன் உள்ளிட்ட 34 பேர் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளித்திருந்தனர்.

அவர்களிடத்தில் முதல்வர், தொகுதி நிலவரத்தையும், தேமுதிக பலம் குறித்தும் கேட்டார். அப்போது சிட்டிங் எம்.எல்.ஏ டி.கே.ஜி. நீலமேகம், தேமுதிக-விற்கு 5,000 வாக்குகள் இருக்கும் எனச் சொல்ல மற்றொருவர் 10,000 வாக்குகள் இருப்பதாகச் சொன்னார். தொகுதியை கூட்டணிக்குக் கொடுக்கலாமானு கேட்டதற்கு நீலமேகம், தஞ்சாவூர் நமக்கு சாதகமான தொகுதி. அதுமட்டுமில்லை தலைவர் கருணாநிதி நின்ற தொகுதி. இங்கு நாம் பத்து முறை வெற்றி பெற்றுள்ளோம்.

தஞ்சாவூர் திமுக
தஞ்சாவூர் திமுக

இம்முறையும் தொகுதி நமக்கு சாதகமாக இருக்கிறது. தஞ்சாவூரில் திமுக நேரடியாகப் போட்டியிட வேண்டும் என்றாராம். கூட்டணிக் கட்சிகள் நம்முடன் இருக்கிறார்கள்.

எல்லோரும் இப்படியே சொன்னால் கூட்டணிக்கு எப்படி நாம் சீட் ஒதுக்க முடியும் என ஸ்டாலின் கேட்டதாகச் சொல்கிறார்கள். இதையடுத்து தலைமை அறிவிப்பவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என ஸ்டாலின் எல்லோரிடத்திலும் சொல்லி அனுப்பியுள்ளார் என்றனர்.

கமேனி இறப்புக்கு 48 மணிநேரத்திற்கு முன்.! ட்ரம்ப், நெதன்யாகு போன்கால் - என்ன நடந்தது?

ஈரான் போர் (பிப்ரவரி 28) தொடங்கிய 48 மணிநேரத்திற்கு முன்பு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போன்கால் பேசியுள்ளனர். அந்தப் போன்காலில் ஈரான் குறித்த பல முக்கிய விஷயங்கள் பேசப்பட்டதாக ... மேலும் பார்க்க

`ரூ.38 கோடிக்கு வாட்ச்; ரூ.44 கோடிக்கு வைரம்; மொத்தம்?' - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சொத்து விவரம்

புதுச்சேரி மாநிலத்தில் காமராஜ் நகர் மற்றும் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தனக்கு, ரூ.328 கோடியில் அசையும் சொத்துக்... மேலும் பார்க்க

பெண்களுக்கு 3-ல் ஒரு பங்கு இட ஒதுக்கீடு: மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை 816 ஆக அதிகரிக்க முடிவு?

பெண்களுக்கு நாடாளுமன்றன்றத்தில் 3ல் ஒரு பங்கு இட ஒதுக்கீடு கொடுக்கும் திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்து வருகிறது. 2023ம் ஆண்டு இதற்கு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது அதற்க... மேலும் பார்க்க

'சிரிப்பு, கோபம், அதட்டல்' - எப்படி முடிந்தது திமுக நேர்காணல்!

திமுக நேர்காணல்2026 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட மொத்தம் 15,372 பேர் விருப்பம் தெரிவித்து விருப்ப மனு கொடுத்திருந்தார்கள். இதில் அதிகபட்சமாக முதல்வர் ஸ்டாலின் தங்கள் தொகுதியில் போட்டியி... மேலும் பார்க்க

"நாங்கள் மதிக்கும் ஈரான் தலைவரிடம் பேசி வருகிறோம்" - ட்ரம்ப் சொல்லும் நபர் யார்? அவர் சொல்வது என்ன?

"இரண்டு நாள்களாக ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் பேச்சுவார்த்தை நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. இதனால், அமெரிக்கா அடுத்த 5 நாள்களுக்கு ஈரானைத் தாக்காது" என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்டிருந்தார்.... மேலும் பார்க்க