செய்திகள் :

`ரூ.38 கோடிக்கு வாட்ச்; ரூ.44 கோடிக்கு வைரம்; மொத்தம்?' - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சொத்து விவரம்

post image

புதுச்சேரி மாநிலத்தில் காமராஜ் நகர் மற்றும் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தனக்கு, ரூ.328 கோடியில் அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், 269 கோடியில் தமிழகம் இந்தியாவில் பல பகுதிகளில் அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். மொத்தம் 597 கோடி ரூபாய் சொத்து மதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் தற்போது வரை வெளியிடப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் ஜோஸ் சார்லஸ் மாட்டின் தான் அதிக சொத்துக்கள் கொண்ட வேட்பாளராகிறார்.

தன்னிடம் 17.5 கிலோ தங்கம் ரூ.25 கோடி மதிப்பில் இருப்பதாகவும், ரூ.44 கோடிக்கு வைரம் இருப்பதாகவும், ரூ.38 கோடிக்கு வாட்ச் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனக்கு ரூ.210 கோடி கடன் இருப்பதாகவும் ஜோஸ் சார்லஸ் மாட்டின் தெரிவித்துள்ளார்.

தனது மனைவிக்கும் குறிப்பிட்ட கோடிகளில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாக ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

`நாகப்பட்டினத்தை விசிக-வுக்கு தராதீர்கள்' - நிர்வாகிகள் கோரிக்கை - ஸ்டாலின் ரியாக்ஷன் என்ன?

திமுக-வில் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு விருப்பமனு அளித்தவர்களிடம் நடைபெற்ற நேர்காணல் நேற்றுடன் நிறைவு பெற்றது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தொகுதி வாரியாக நேற்று நேர்... மேலும் பார்க்க

"மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்"- புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி; திருமா முடிவின் பின்னணி என்ன?

சட்டப்பேரவைத் தேர்தல் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் என ஐந்து மாநிலங்களில் நடக்க இருக்கிறது. இதில் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள்! - கையெழுத்தானது ஒப்பந்தம்!

தொகுதி பங்கீட்டில் இழுபறியாக நீடித்துக் கொண்டிருந்த ஒவ்வொரு கட்சியையும் அழைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுக் கொண்டிருக்கிறது திமுக. அந்தவகையில், இன்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவாலயத்தில் முதல்வர்... மேலும் பார்க்க

"அடிமைகளைப் பிடித்து தமிழ்நாட்டில் நுழையப் பார்க்கும் மோடி, அமித்ஷா கனவு பலிக்காது" - உதயநிதி தாக்கு

ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் உதயநிதி தலைமையில் நேற்று ஈரோட்டில் நடைபெற்றது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள், இளைஞர் அணியை... மேலும் பார்க்க

கமேனி இறப்புக்கு 48 மணிநேரத்திற்கு முன்.! ட்ரம்ப், நெதன்யாகு போன்கால் - என்ன நடந்தது?

ஈரான் போர் (பிப்ரவரி 28) தொடங்கிய 48 மணிநேரத்திற்கு முன்பு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போன்கால் பேசியுள்ளனர். அந்தப் போன்காலில் ஈரான் குறித்த பல முக்கிய விஷயங்கள் பேசப்பட்டதாக ... மேலும் பார்க்க

பெண்களுக்கு 3-ல் ஒரு பங்கு இட ஒதுக்கீடு: மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை 816 ஆக அதிகரிக்க முடிவு?

பெண்களுக்கு நாடாளுமன்றன்றத்தில் 3ல் ஒரு பங்கு இட ஒதுக்கீடு கொடுக்கும் திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்து வருகிறது. 2023ம் ஆண்டு இதற்கு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது அதற்க... மேலும் பார்க்க