செய்திகள் :

`நாகப்பட்டினத்தை விசிக-வுக்கு தராதீர்கள்' - நிர்வாகிகள் கோரிக்கை - ஸ்டாலின் ரியாக்ஷன் என்ன?

post image

திமுக-வில் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு விருப்பமனு அளித்தவர்களிடம் நடைபெற்ற நேர்காணல் நேற்றுடன் நிறைவு பெற்றது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தொகுதி வாரியாக நேற்று நேர்காணல் நடந்தது. இதில் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை 37 பேர் விருப்பமனு அளித்திருந்தனர். அவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் செய்தார். அப்போது தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

திமுக-வினரிடம் நேர்காணல் நடத்தும் ஸ்டாலின்

மாவட்டச் செயலாளர் கெளதமன், `நீங்கள் நிறைவேற்றிய திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். நமக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக' சொல்லியிருக்கிறார். இதைதொடர்ந்து பெரும்பாலான நிர்வாகிகள், `நாகை தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்க கூடாது. நாமே நேரடியாக போட்டியிட வேண்டும்' என ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து விபரம் அறிந்த தரப்பில் பேசினோம், ``நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடுவதற்கு கெளதமன், மனோகரன், எடிசன் உள்ளிட்ட பலர் விருப்ப மனு அளித்திருந்தனர். வேட்பாளர் ரேஸில் இவர்கள் முன்னணியில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மாவட்டச் செயலாளரான கெளதமன் பெயரில் 10க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு அளித்திருந்தனர். 2021 தேர்தலில் வேட்பாளர் லிஸ்டில் கெளதமன் பெயரே இருந்தது. கடைசி நேரத்தில் விசிக உள்ளே புகுந்ததால் சீட் கைமாறியது. இந்த முறை எப்படியும் சீட் வாங்கி விட வேண்டும் என கெளதமன் காய் நகர்த்துகிறார். நாகையில் கெளதமன் முயற்சியால் ஸ்டாலின் அறிவாலயம் கட்டப்பட்டது. இது போல் அவரது பணிகள் பட்டியலிடப்பட்டு தலைமையிடம் ஏற்கனவே கொடுக்கப்பட்டதாம். ஸ்டாலின், உதயநிதி இருவரது குட் புக்கிலும் கெளதமன் இருப்பதாக சொல்கிறார்கள்.

நாகப்பட்டினம் திமுக நேர்காணல்

இந்த சூழலில் நேற்று நடைபெற்ற நேர்காணலில் கலந்து கொண்ட அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த முறை தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்காதீர்கள், குறிப்பாக விசிகே-வுக்கு ஒதுக்க கூடாது, திமுக நேரடியாக போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினார்களாம். அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து சொன்னதால் ஸ்டாலின் இதை பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறார்.

நாகையின் சிட்டிங் எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸ். இவர் மீண்டும் நாகையில் போட்டியிட விரும்புகிறாராம். இதே போல் சிபிஐ, மனித நேய மக்கள் கட்சிகளும் தொகுதியை குறி வைத்திருக்கிறார்கள்.

முன்கூட்டியே சுதாரித்து கொண்ட திமுக-வினர் இம்முறை தொகுதியை கூட்டணிக்கு விட்டு கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். கடந்த முறை போல் நழுவிய வாய்ப்பை இந்த முறை விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் கெளதமன். இவரது மகன் திருமண விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலின், கெளதமன் கடினமான உழைப்பாளி, எதையும் யோசிக்காமல் கட்சி வேலையை செய்யக்கூடியவர் என்று பாராட்டினார். இவையெல்லாம் தற்போது கெளதமனுக்கு ப்ளஸாக அமைந்துள்ளது. மேலும் ஸ்டாலின் மனதில் கெளதமன் தான் இருக்கிறார் என்பதால் அவர் தான் வேட்பாளர் என நம்புகிறார்களாம் அவர்கள் தரப்பினர்" என முடித்தனர்.

"மாப்ள அவர்தான். ஆனா அவர் போட்டிருக்கிற சட்டை.!"- எடப்பாடியை சாடிய ஐ.பெரியசாமி

"அதிமுகவுக்குத் தலைமை தாங்கியவர்கள் நின்று இரட்டை விரலைக் காட்டி நின்ற இடத்தில் பாஜகவைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி" என்று விமர்சித்து திமுக கழக துணைப் பொதுச்செயலாளர் ஐ. பெரிய... மேலும் பார்க்க

"மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்"- புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி; திருமா முடிவின் பின்னணி என்ன?

சட்டப்பேரவைத் தேர்தல் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் என ஐந்து மாநிலங்களில் நடக்க இருக்கிறது. இதில் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள்! - கையெழுத்தானது ஒப்பந்தம்!

தொகுதி பங்கீட்டில் இழுபறியாக நீடித்துக் கொண்டிருந்த ஒவ்வொரு கட்சியையும் அழைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுக் கொண்டிருக்கிறது திமுக. அந்தவகையில், இன்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவாலயத்தில் முதல்வர்... மேலும் பார்க்க

"அடிமைகளைப் பிடித்து தமிழ்நாட்டில் நுழையப் பார்க்கும் மோடி, அமித்ஷா கனவு பலிக்காது" - உதயநிதி தாக்கு

ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் உதயநிதி தலைமையில் நேற்று ஈரோட்டில் நடைபெற்றது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள், இளைஞர் அணியை... மேலும் பார்க்க

கமேனி இறப்புக்கு 48 மணிநேரத்திற்கு முன்.! ட்ரம்ப், நெதன்யாகு போன்கால் - என்ன நடந்தது?

ஈரான் போர் (பிப்ரவரி 28) தொடங்கிய 48 மணிநேரத்திற்கு முன்பு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போன்கால் பேசியுள்ளனர். அந்தப் போன்காலில் ஈரான் குறித்த பல முக்கிய விஷயங்கள் பேசப்பட்டதாக ... மேலும் பார்க்க

`ரூ.38 கோடிக்கு வாட்ச்; ரூ.44 கோடிக்கு வைரம்; மொத்தம்?' - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சொத்து விவரம்

புதுச்சேரி மாநிலத்தில் காமராஜ் நகர் மற்றும் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தனக்கு, ரூ.328 கோடியில் அசையும் சொத்துக்... மேலும் பார்க்க