செய்திகள் :

சென்னை: சிறுமிக்குப் பாலியல் தொல்லை - தி.மு.க வழக்கறிஞர் கைது!

post image

சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் குடும்பத்துடன் 12 வயது சிறுமி வசித்து வருகிறார். இவரின் அம்மா, தமிழக காவல்துறையில் அமைச்சுப் பணியாளராக வேலை செய்கிறார். 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமி, கடந்த சில ஆண்டுகளாக டான்ஸ் கிளாஸிக்கு சென்று வருகிறார். அங்குள்ளவர்கள் சிறுமிக்கு குட் டச், பேட் டச் குறித்து சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அப்போதுதான் சிறுமி, தன்னுடைய உறவினர் ஒருவர், பேட் டச் செய்த தகவலை டான்ஸ் கிளாஸ் ஆசிரியையிடம் கூறியிருக்கிறார். உடனே அவர்கள், சிறுமியின் பெற்றோரை அழைத்து தகவலைத் தெரிவித்திருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், என்ன நடந்தது என விசாரித்தனர். அப்போது கடந்த 5 ஆண்டுகளாக சிறுமியின் உறவினரும் தி.மு.க வழக்கறிஞர் பிரிவில் அமைப்பாளராக இருக்கும் பரத் என்பவர் தன்னை பேட் டச் செய்த தகவலை சிறுமி கூறியிருக்கிறார்.

கைது

இதையடுத்து சிறுமியின் பெற்றோர், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார், சிறுமியிடம் விசாரித்தனர். சிறுமி அளித்த தகவலின்படி அவரின் உறவினரான வழக்கறிஞர் பரத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர், தான் எந்த தவறும் செய்யவில்லை என கூறினார். இருப்பினும் சிறுமி, நடன பள்ளி ஆசிரியை, சிறுமியின் பெற்றோர் ஆகியோர் கொடுத்த தகவலின்படி வழக்கறிஞர் பரத் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை கைதுசெய்தனர்.

`மாஜிஸ்திரேட் விசாரணைக்கே இடையூறு; ஏட்டு ரேவதியின் துணிச்சல்'- சாத்தான்குளம் வழக்கு கடந்து வந்த பாதை

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தந்தை- மகன் கொலை வழக்கு தமிழகத்தையே உலுக்கியது. மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்த... மேலும் பார்க்க

ரிமோட் கன்ட்ரோல் பாம்பு, புலித்தோல், 150 முறை வெளிநாடு பயணம் - 58 பெண்களை ஜோதிடர் ஏமாற்றியது எப்படி?

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்த அசோக் கராட் என்ற ஜோதிடர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார். அவர் தன்னிடம் வரும் பெண்களிடம் உணர்வுபூர்வமாக, கணவர்க... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஊராட்சி ஆவணங்கள் திருட்டு; முன்னாள் ஊராட்சி செயலர் மீது வழக்கு! - நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார் குளம் ஊராட்சிக்குட்பட்ட வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அம்மையப்பன். இவர், இந்த ஊராட்சியின் வரவு செலவு விவரங்கள், கடந்த 2023 அக்டோ... மேலும் பார்க்க

நீதிபதியின் கையெழுத்துடன் பணி உத்தரவு: கர்நாடகா கோர்ட்டில் வேலை என கூறி ரூ.25 கோடியை ஏமாற்றிய தம்பதி

பெங்களூரை சேர்ந்த சிலர் தங்களிடம் கோர்ட்டில் டி பிரிவில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்து விட்டதாக குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்து இருந்தனர். இது போன்ற புகார்கள் பெங்களுரு முழுவதும் உள... மேலும் பார்க்க

திண்டுக்கல்: குவாரியில் வாலிபரின் சடலம் மீட்பு; உறவினர்கள் போராட்டம் - காரணம் என்ன?

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள செந்துறை அடுத்துள்ள சரளைபட்டியில் சங்கரா ப்ளூ மெட்டல் என்ற தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரி ஸ்ரீரங்கம் எம்எல்ஏபழனியாண்டிக்கு சொந்தமானது என்றும... மேலும் பார்க்க

பெண் டாக்டர் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை; மனநோயாளி போன்று நடித்தவர் சிக்கியது எப்படி?

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை நெடும்பனை பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் குடவட்டூர் பகுதியைச் சேர்ந்த சந்தீப்(44). மதுவுக்கு அடிமையான காரணத்தால் ஆசிரியர் பணியில் இரு... மேலும் பார்க்க