செய்திகள் :

தட்டுப்பாடு; சிலிண்டரில் சமையல் எரிவாயு அளவு 14.2 கிலோவிலிருந்து 10 கிலோவாக குறைகிறதா?

post image

தற்போது ஈரான் போர் காரணமாக நாடு முழுவதும் சமையல் எரிவாயுவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வர்த்தக சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக உணவகங்கள் விறகு அடுப்புக்கு மாறி இருக்கின்றன. அதோடு உணவு பொருட்களின் விலையையும் அதிகரித்துவிட்டன. அதோடு அதிகமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளது. தற்போது அதிகப்படியான சிலிண்டர்களை மார்க்கெட்டிற்கு கொண்டு வருவதற்காக ஆயில் கம்பெனிகள் சேர்ந்து ஒரு புதிய முடிவை எடுத்துள்ளன. வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரில் 14.2 கிலோ அளவுக்கு எரிவாயு இருக்கிறது.

இதனை 10 கிலோவாக குறைக்க ஆயில் கம்பெனிகள் பரிசீலித்து வருகின்றன. இது தொடர்பான திட்டத்தை ஆயில் கம்பெனிகள் மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளன. அதன் மீது முடிவு எடுக்கவேண்டியது அரசுதான் என்று ஆயில் கம்பெனிகள் தெரிவித்துள்ளன.

ஆனால் இதனை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இது குறித்து மத்திய பெட்ரோலிய துறை இணை செயலாளர் சுஜாதா சர்மா கூறுகையில், '' இது போன்ற யூகங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாது. அந்த செய்தி வதந்தியாகும். நாடு முழுவதும் எந்தவித தடங்களும் இல்லாமல் சிலிண்டர் சப்ளை நடைபெறுகிறது. எரிவாயு உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

இந்தியா எல்.பி.ஜி.க்கு 60 சதவீதம் வெளிநாட்டையே நம்பி இருக்கிறது. ஆனால் தற்போது வளைகுடாவில் நிலவி வரும் பதட்டம் காரணமாக அங்கிருந்து எல்.பி.ஜியை கப்பலில் கொண்டு வரமுடியாத நிலை இருக்கிறது. ஈரான் அரசு கப்பல்கள் செல்லக்கூடிய ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. இதனால் வளைகுடாவில் இருந்து இந்தியாவிற்கு வரவேண்டிய கப்பல்கள் ஹார்முஸ் வளைகுடாவிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இரண்டு கப்பல்கள் அந்த ஜலசந்தி வழியாக எல்.பி.ஜி எடுத்துக்கொண்டு இந்தியாவிற்கு வந்தது. ஆனால் அதுவும் போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது.

இன்றைய சூழலில், தேர்தல் நேரத்தில் ரூ.50,000 ரொக்க பணம் மட்டும் அனுமதிப்பது போதுமா? - கருத்துக் களம்

தமிழ்நாட்டில் தேர்தல் வர இன்னும் கிட்டத்தட்ட ஒரு மாதம் தான் இருக்கிறது. அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் எப்படி பரபரப்பாக இருக்கிறார்களோ... ஆங்காங்கே தென்படுகிறார்களோ... அதே அளவுக்கு தினமும் பறக்கு... மேலும் பார்க்க

Iran: பேச்சுவார்த்தைக்கு சம்மதித்த ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா: அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்படுமா?

ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதல் நான்காவது வாரத்தை எட்டி இருக்கிறது. இப்போர் தொடங்கும்போது நான்கு வாரங்கள் இப்போர் நீடிக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து ... மேலும் பார்க்க

"மாப்ள அவர்தான். ஆனா அவர் போட்டிருக்கிற சட்டை.!"- எடப்பாடியை சாடிய ஐ.பெரியசாமி

"அதிமுகவுக்குத் தலைமை தாங்கியவர்கள் நின்று இரட்டை விரலைக் காட்டி நின்ற இடத்தில் பாஜகவைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி" என்று விமர்சித்து திமுக கழக துணைப் பொதுச்செயலாளர் ஐ. பெரிய... மேலும் பார்க்க

`நாகப்பட்டினத்தை விசிக-வுக்கு தராதீர்கள்' - நிர்வாகிகள் கோரிக்கை - ஸ்டாலின் ரியாக்ஷன் என்ன?

திமுக-வில் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு விருப்பமனு அளித்தவர்களிடம் நடைபெற்ற நேர்காணல் நேற்றுடன் நிறைவு பெற்றது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தொகுதி வாரியாக நேற்று நேர்... மேலும் பார்க்க

"மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்"- புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி; திருமா முடிவின் பின்னணி என்ன?

சட்டப்பேரவைத் தேர்தல் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் என ஐந்து மாநிலங்களில் நடக்க இருக்கிறது. இதில் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள்! - கையெழுத்தானது ஒப்பந்தம்!

தொகுதி பங்கீட்டில் இழுபறியாக நீடித்துக் கொண்டிருந்த ஒவ்வொரு கட்சியையும் அழைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுக் கொண்டிருக்கிறது திமுக. அந்தவகையில், இன்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவாலயத்தில் முதல்வர்... மேலும் பார்க்க