செய்திகள் :

தாராபுரம் இடைத்தேர்தல்: வரிசை கட்டும் பெண் வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் பிரசாரக் களம்!

post image

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் தாராபுரம் தனி தொகுதியில் வெற்றி பெற்று பதவியை ராஜினாமா செய்து த.வெ.க- வில் இணைந்த சத்யபாமாவை, த.வெ.க வேட்பாளராக களமிறக்கியிருக்கிறது அக்கட்சியின் தலைமை. தி.மு.க வேட்பாளராக தொழில்முறை வழக்கறிஞர் சுகன்யா என்பவரை களத்தில் இறக்கியுள்ளனர். அதேபோல அ.தி.மு.க வேட்பாளராக பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கார்த்திகா என முக்கியக் கட்சிகள் அனைத்தும் தாராபுரம் தொகுதியில் பெண் வேட்பாளர்களைக் களத்தில் இறக்கியுள்ளன. நாளையுடன் வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் நிறைவடைய உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தாராபுரம் தனி தொகுதி தி.மு.க வேட்பாளராக வழக்கறிஞர் சுகன்யா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துவிட்டு முன்னாள் அமைச்சர்கள் மு.பெ.‌ சாமிநாதன் கயல்விழி, செல்வராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

பெண் வேட்பாளர்கள்

மற்ற வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், வேட்பாளரை இன்று மாலை அறிவிக்க உள்ளனர். தாராபுரம் தொகுதியில் வெற்றிபெற்றாக வேண்டும் என்கிற முனைப்புடன் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி தற்போதே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

"மதுவிலக்கு துறையில் தவறு செய்பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை" - அமைச்சர் விக்னேஷ் உறுதி

கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் அமைச்சர்கள் மதன்ராஜா, விக்னேஷ் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் மதன்ராஜா, ... மேலும் பார்க்க

UPI பரிவர்த்தனைகளுக்கு ரூ.2,000 வரை 'நோ' கட்டணம் - மத்திய அரசு விளக்கம்; அதற்கு மேல்?

காசு, பணத்தையெல்லாம் மறந்து, டிஜிட்டல் பேமென்ட்டுக்கு பெரும்பான்மையான இந்தியர்கள் மாறி பல காலமாகிவிட்டது.இந்த நேரத்தில், யுபிஐ பேமென்ட்டுகளுக்குக் கட்டணம் என்கிற பேச்சு எழுந்து, இந்திய மக்களிடம் ஒரு ‘... மேலும் பார்க்க

`விஜய் சேதுபதியின் விமர்சனத்திற்கு பதில் சொல்ல தேவையில்லை; பார்வையாளர்களைக் கவர...'- அமைச்சர் சம்பத்

கோவை மாநகராட்சி வ.உ.சி. மைதானம் அருகே உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இதனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார்... மேலும் பார்க்க

BRICS: ஒன்றுகூடிய இந்தியா, சீனா, ரஷ்யா; ட்ரம்பிற்கு சொல்லும் Lesson! De Dollarisation புது வடிவிலா?

இந்தியாவின் தலைமையின் கீழ், டெல்லியில் 18-வது பிரிக்ஸ் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், தென்னாப்பிரி... மேலும் பார்க்க

"சினிமாவில் நடித்தவர் இப்போது மக்கள் முன் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்"- விஜய் குறித்து டிடிவி

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் இன்று (செப்.15) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.அதற்கு பதிலளித்த... மேலும் பார்க்க

'கணக்கு போட்டு காத்திருக்கும் கழகங்கள்!' - இடைத்தேர்தலில் பாமக-வின் ஆதரவு யாருக்கு?

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. பெரிய கட்சிகள் அத்தனையும் தங்களின் நிலைப்பாட்டை அறிவித்துவிட்ட நிலையில், பாமக இன்னும் அமைதி காக்கிறது. நிலை... மேலும் பார்க்க