செய்திகள் :

துப்பாக்கிச் சூட்டால் உயிருக்குப் போராடும் 4 வயது குழந்தை; காஃபி தோட்ட உரிமையாளரின் கொடூரச் செயல்

post image

கூலி சம்பந்தமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் காஃபி தோட்ட உரிமையாளர் தொழிலாளர்களை நோக்கிச் சுட்டதில், 4 வயது குழந்தையின் தலையில் குண்டு பாய்ந்த சம்பவம் சிக்கமகளூரு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஃபி தோட்டம்
காஃபி தோட்டம்

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பாலேஹள்ளி கிராமத்தில் காஃபி தோட்டம் வைத்திருப்பவர் ஜெகதீஷ கவுடா.

இவரது தோட்டத்தில் வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 24 ஆம் தேதி வேலைக்குச் செல்லும் முன் தினக்கூலியாக ரூ. 400 வழங்க வேண்டும் என்று ஜெகதீஷ கவுடாவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது ஒவ்வொரு தொழிலாளருக்கும் தினக்கூலியாக ரூ. 350 தருவதாகவும் ரூ. 50 ஐ பின்னர் தருவதாக ஜெகதீஷ கவுடா கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு சம்மதிக்காத தொழிலாளர்கள், முழுக்கூலியையும் உடனடியாக வழங்கினால்தான் வேலைக்குச் செல்வோம் என்று வலியுறுத்தியுள்ளனர். இது ஜெகதீஷ கவுடாவுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்களைத் திட்டியுள்ளார்.

துப்பாக்கி
துப்பாக்கி

இதனால் அருகிலுள்ள தோட்டங்களில் பணியாற்றிய அசாம் மாநிலத் தொழிலாளர்களையும் அழைத்துவந்து, ஜெகதீஷ் கவுடாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், தொழிலாளர்களை மிரட்டுவதற்காக ஜெகதீஷ் கவுடா தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டுள்ளார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த தொழிலாளரின் 4 வயது குழந்தையின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது.

உடனே காயமடைந்த குழந்தையை அங்குள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மங்களூருவிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

தற்போது தீவிர சிகிச்சையில் குழந்தை உள்ள நிலையில் மூடிகெரே போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான காஃபி தோட்ட உரிமைஉரிமையாளர் ஜெகதீஷ கவுடாவைத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் சிக்கமகளூரு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: இந்து கடவுள் முருகனை இழிவுபடுத்தியதாக தவெக நிர்வாகி கைது – நடந்தது என்ன?

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ராக்கிபாளையம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (31). இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் சிஎன்சி ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ... மேலும் பார்க்க

கர்நாடகா: மான் வேட்டையில் ஈடுபட்டதாக மூவரைச் சுட்டுக்கொன்ற வனத்துறை; காவிரி சரணாலயத்தில் பயங்கரம்

கர்நாடக மாநிலம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த வனத்துறையினர் இன்று அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஹனூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுக்குள் வேட்டை கும்பலைச் சேர்ந்த... மேலும் பார்க்க

அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம்: விசாரணை வளையத்தில் விக்ரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

'லார் கிப்பன்' (Lar Gibbon) எனப்படும் அரியவகை மனித குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி; இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய பாட்டி - கரூர் அதிர்ச்சி!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் 4 வயது மகளை, 3 நாள்களுக்கு முன்பு குண்டாங்கல்பாறை, புத்தர் நகர்ப் பகுதியில் வசித்து வரும் தங்கராசு மகன் விஜய் (எ) மாண... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலீஸே எனக்கு பயப்படுவாங்க!’- மாமூல் தர மறுத்த கடையில் பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி

புதுச்சேரி, வில்லியனூர் மார்க்கெட் வீதியில் பாபு மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன் இருவரும் இணைந்து பாபு டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் அங்கு ச... மேலும் பார்க்க

ஆட்டோ வாங்கி கொடுத்தும் `திருந்தாத’ குடிகாரக் கணவன் - சேர்ந்து வாழ மறுத்ததால் பெண் போலீஸ் கொலையா?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மகள் தாமரைச்செல்வி (40). இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரு... மேலும் பார்க்க