செய்திகள் :

'ஆண்களை முந்திய பெண்கள்' - Start-up நிறுவனங்கள் நடத்துவதில் சாதனை; இந்தியளவில் தமிழ்நாடு முன்னிலை!

post image

தமிழகத்தில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் புத்தொழில் (Startup) நிறுவனங்களைத் தொடங்கி சாதித்து வருகின்றார்கள் என்ற தகவல் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் தொடங்கும் ஸ்டார்ட் அப்-கள்
பெண்கள் தொடங்கும் ஸ்டார்ட் அப்-கள்

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையால் (Department For Promotion Of Industry and Internal Trade) அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கையில் தமிழகம் சாதனை படைத்துள்ளது.

தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 15,037 ஆக உயர்ந்து இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது.

அதிலும் தமிழ்நாட்டில் பெண் தொழில் முனைவோரின் பங்களிப்பு ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தொழில்துறை தரவுகளின்படி பெண்களால் நடத்தப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிககை 7,572 ஆகவும், ஆண்களால் நடத்தப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை 7,465 ஆகவும் உள்ளன. இதன் மூலம் பெண்களால் நடத்தப்படும் ஸ்டார்ட் அப்-கள் கூடுதலாக உள்ளன.

ஸ்டார்ட் அப்
ஸ்டார்ட் அப்

இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் சமூகத்திலும், மற்ற துறைகளிலும் பாலினச் சமத்துவம் மெதுவாக உயர்ந்து வரும் நிலையில் ஸ்டார்ட் அப் துறையில் பாலின சமத்துவம் வேகமாக அதிகரித்து வருகிறது.

ஸ்டார்ட் அப் நிறுவன வளர்ச்சியில் தமிழகத்தின் மூன்றில் ஒரு பங்கு என்ற கணக்கில் 5,134 ஸ்டார்ட் அப்-களுடன் சென்னை வட்டாரம் தொடர்ந்து முதல் இடத்திலும், 2011 என்ற எண்ணிக்கையில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்திலும், 1,318 என்ற எண்ணிக்கையில் காஞ்சிபுரம் மாவட்டம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

திருவள்ளூர்- 916, செங்கல்பட்டு - 815, மதுரை - 497, திருச்சி - 446, சேலம் - 403, ஈரோடு - 350, கிருஷ்ணகிரி - 239 என்ற எண்ணிக்கையில் மற்ற மாவட்டங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

Flipkart: உணவு டெலிவரி சேவையில் இறங்கும் ஃபிளிக்கார்ட்; விரைவில் தனி செயலி அறிமுகம்; பின்னணி என்ன?

தற்போது ஃபிளிப்கார்ட் வீட்டுக்குத் தேவையான அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் என அனைத்தையும் ஆன்லைனில் விற்பனை மற்றும் டெலிவரியில் ஈடுபட்டு வருகிறது. புத்தக விற்பனையிலிருந்... மேலும் பார்க்க

ஜிஆர்டி ஜூவல்லர்ஸில் தங்கத்தில் திளைக்கும் ஆடி தங்கத் திருவிழா!

இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படும் நகை நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், விரிவான மற்றும் உயர்தர நகைக் கலெக்ஷன்களின் சிறப்பான க... மேலும் பார்க்க

ஹோல்சேல் ரேட்டில் தங்கமா? தமிழ்நாட்டு மக்களுக்கு ஆச்சரியம் தரும் ரீகல் ஜுவல்லர்ஸ்!

தென்னிந்தியாவின் முன்னணி நகை உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களில் ஒன்றான ரீகல் ஜுவல்லர்ஸ், சென்னை தியாகராய நகரில் தனது முதல் ஷோரூமைத் தொடங்குவதன் மூலம் தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக தனது ... மேலும் பார்க்க

`வீழ்ச்சியில் இருந்த கணவரை மீட்டேன்' - கட்டுமானத்துறையில் கலக்கும் மும்பை தமிழ்ப்பெண் ராமலம்மாள்

பெண்கள் இப்போது அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். ஆனால் கட்டுமானம் மற்றும் ஆட்டோமொபைல் போன்ற சில துறைகளில் மட்டும் பெண்கள் ஆதிக்கம் பெரிய அளவில் இல்லாமல் இருக்கிறது. தங்களாலும் சாதிக்க முடியும... மேலும் பார்க்க

இந்தியா - இங்கிலாந்து ஒப்பந்தம்; மகிழ்ச்சியில் கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் - என்ன காரணம்?

இந்தியா - இங்கிலாந்து பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 15 -ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதால், கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது... மேலும் பார்க்க

Prominence : "ஷாருக்கானிடம் ஐடியாவைச் சொன்னோம்; அவரும் கை கோர்த்தார்" - நிர்வாக இயக்குநர் நந்தகுமார்

சென்னை அண்ணா நகர், சாந்தி காலனி பகுதியில் Prominence Home works என்ற வீட்டு பணிகளுக்கான Interior design modular company-யின் சென்னையில் இரண்டாவது கிளை பிரமாண்டமாக திறக்கப்பட்டது.இதன் முதல் நிகழ்வாக pr... மேலும் பார்க்க